Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 12 June 2023

கடைசி இந்தியச் செய்தியாளரையும் வெளியேற உத்தரவிட்ட சீன அரசு! - என்ன காரணம்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்தியாளர்கள் நான்கு பேரை, சீனாவுக்குச் செய்தி சேகரிப்புப் பணிகளுக்காக அனுப்பிவைத்திருந்தன. இதில் கடந்த ஏப்ரலில், பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தி இந்து நாளிதழின் இரண்டு செய்தியாளர்களின் விசாவைப் புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் உள்ளிட்ட மூன்று பேர் சீனாவிலிருந்து வெளியேறிவிட்டனர். சீனா அதிபர் - பிரதமர் மோடி `பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' நிறுவனத்தின் செய்தியாளர் மட்டும் அங்கேயே இருந்தார். இதற்கிடையே, இறுதியாக சீனாவிலிருந்த கடைசி இந்திய செய்தியாளரையும், இந்த மாத இறுதிக்குள் சீனாவிலிருந்து வெளியேறுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக, ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``இந்தியாவில் ஒரு சீன செய்தியாளர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். அவரும் தன்னுடைய விசா புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் இரண்டு செய்தியாளர்களுக்கான விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு மறுத்துவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார். சீன செய்தியாளர்கள் இந்தியாவில் எந்தவிதப் பிரச்னையும் இன்றி செயல்படும் நிலையில், சீனாவிலுள்ள இந்திய செய்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதனால் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. 2020-ல் இந்தியா-சீனா எல்லையில் நடந்த சண்டையின் காரணமாக சீனா - இந்தியாவுக்கிடையேயான உறவு பதற்றமாகவே தொடர்கிறது. ஆனால், சீன அரசு அந்தப் பிரச்னையைப் புறந்தள்ளி, வர்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க முயன்றாலும், எல்லைப் பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியா - சீனாவுக்கிடையேயான உறவு இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், சீனாவிலிருந்து இந்திய செய்தியாளர்கள் வெளியேற்றப்படும் விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.Messi வருகையால் களைகட்டிய சீனா; மெஸ்ஸியின் பெயரில் நடக்கும் பண மோசடிகள்! பின்னணி என்ன?
http://dlvr.it/SqYbyP

0 comments:

Post a Comment