Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Sunday, 12 May 2024

`என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்...' - பெற்றோர்மீது வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ். சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு வீடியோவில் பேசிய தியாஸ், ``நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்று நான் பிறப்பதற்கு முன்பு என் பெற்றோர் எப்படியும் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். அதற்காக முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை.தியாஸ்

எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்ற பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்கவில்லை. அவர்களை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவர்கள் இங்கே இருப்பது என் தவறல்ல. ஒரு நல்ல மனிதனாக இருக்கவும் அவர்களுக்கு உதவவும் முயற்சிக்கிறேன். நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை சந்தித்து, அந்த குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும். என்னிடம் அப்படி கேட்காததால் என் பெற்றோர் மீது நான் வழக்கு தொடர்ந்தேன்.

என்னை கருத்தரிக்க பங்களித்து, என்னைப் பெற்றெடுத்த என் அம்மாவால்தான் நான் இங்கே இருக்கிறேன். குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர கற்றுக்கொடுப்பதை எனது வாழ்க்கைப் பணியாக செய்கிறேன். எனவே, விருப்பமில்லாத இடத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இனி குழந்தைகளுக்கு இருக்காது." எனப் பேசியிருக்கிறார். அந்த பதிவுக்கு கீழ் சமூக வலைதளவாசிகள் காரசாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbAllu Arjun: தேர்தலில் நண்பனுக்கு ஆதரவு, குவிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜூன் மீது பாய்ந்த வழக்கு!


http://dlvr.it/T6mXQn

0 comments:

Post a Comment