Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 30 June 2023

`மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுக்குத் தடை!' - அமெரிக்க உச்ச நீதிமன்றம்

சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நீண்டகால நடைமுறையை, முறியடிக்கும்‌விதமாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இன மற்றும் சாதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடைசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.ஜோ பைடன் இது தொடர்பான இரண்டு வழக்குகளை எட்வர்டு பிளம் என்பவர் 2014-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழகங்களில் இனம் சார்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுவதைக் கடுமையாக எதிர்ப்பவர் எட்வர்டு பிளம். வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் மனுதாரர் சார்பில் பல்கலைக்கழகத்தின்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ``பல்கலைக்கழகம் கறுப்பினத்தவர்களுக்கும், பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறது. வெள்ளையர்கள் மற்றும் ஆசிய மாணவர்களுக்குப் பாகுபாடு காட்டுகிறது" என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கிலும் இதே குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டன. ``இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டபூர்வமானது. இதை, சமீபத்தில் உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று பல்கலைக்கழகங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கூட்டாட்சி விசாரணை நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வந்த நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றம் நோக்கி நகர்ந்தது. இரு பல்கலைக்கழகங்களுக்கும் எதிரான வழக்குகளையும் ஆறு நீதிபதிகள்கொண்ட அமர்வு விசாரித்தது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கில், மூன்று நீதிபதிகள் பல்கலைக்கழகத்துக்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கில் இரண்டு நீதிபதிகள் பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். அதைத் தொடர்ந்து, இறுதி தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ஜான் ராபர்ட், ``இதற்கு மேலும் இவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மாணவர்களை, அவர்களின் திறமைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும். அவர்களது நிறத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. வெகுகாலமாக, பல்கலைக்கழகங்கள் எதிர்மறையாகச் செயல்பட்டு வருகின்றன'' என்று கூறி, இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலர் இந்தத் தீர்ப்புக்கு தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். முன்னதாக உறுதியான நடவடிக்கை (Affirmative Action) என்பது, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பாகுபாடுகளைச் சரிசெய்யவும் கொண்டுவரப்பட்டது.Titan Tragedy: `மிக நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்தது இதுதான்...' - மீட்பு குறித்து அமெரிக்கா தகவல்!
http://dlvr.it/SrTRHS

மணபபர மதலவர பரன சங ரஜநம?

  மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா். இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் இதுவரை சுமாா் 120 போ் பலியாகினா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.  பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மைதேயி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இந்த நிலையில் இதில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல வாரங்களாக கோரியது. மேலும் பிரதமர் இதில் இதுவரை தலையிடாதது குறித்து கண்டனமும் தெரிவித்தது.  ஜூன் மாதம், மணிப்பூரைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர், என். பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் சென்று வந்தார். இதனிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கினர். மணிப்பூரில் புதிய வன்முறை இந்த நிலையில் மணிப்பூரில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும், கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மணிப்பூரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்களை அடுத்து மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை இன்று மாலை 4 மணியளவில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதனிடையே, மணிப்பூர் முதல்வரின் செயலகம் மற்றும் ராஜ் பவனுக்கு வெளியே  கூடிய பெண்கள், பிரேன் சிங்கை ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.  மே 3 ஆம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/mN2q6aW https://ift.tt/6ayH4JF
via IFTTT

தமழக கவல தற தலம இயககநரக சஙக ஜவல பறபபறப!

தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் பொறுப்பேற்றார்.  தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற்றதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது பொறுப்பேற்றார்.  புதிய தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சங்கா் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். சங்கா் ஜிவால் கடந்து வந்த பாதை: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ஜிவால். பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான இவா், கடந்த 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக காவல் துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா். சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். மேலும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநா், திருச்சி மாநகர காவல் ஆணையா், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா். சிறந்த காவல் பணிக்காக கடந்த 2007, 2019-ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவா் பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை மாலையில் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சி.சைலேந்திரபாபுக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/mN2q6aW https://ift.tt/jGRar1M
via IFTTT

நமககல மவடடததல மதபன சநத கடகள லடடர சடடகள வறபன அதகரபப: வவசயகள பகர

  நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் பெற்ற மனுக்களின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, அரசு மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் அதிகம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு, 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சந்து கடைகள் ஏதும் இல்லை என தெரிவித்தார்.  இதையும் படிக்க | நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு இதற்கு மறுப்பு தெரிவித்து திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன் பேசுகையில், காவல்துறை தெரிவித்தது போல் சந்துக்கடைகள் எண்ணிக்கை எதுவும் குறைக்கப்படவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதுமட்டுமன்றி லாட்டரி விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது என்றார்.  இதே போல் விவசாயிகளும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகவும், அது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.  உடனடியாக, விவசாயிகள் குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் காவல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/mN2q6aW https://ift.tt/qFgoXCi
via IFTTT

நயயல ஆறறல மரததவக கழவகள: வவசயகள கறறசசடட

  திருப்பூர்: நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள் அதிக அளவு கலப்பதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திருஞானசம்பந்தன் பேசியதாவது:  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சடம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், சாயக்கழிவுகள் மற்றும் சாக்கடை நீர் அதிக அளவில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீர் நிலைகளும் மசடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒண்டிபுதூர், பாப்பம்பட்டி, இருகூர், முத்துக்கவுண்டன்புதூர், சூலூர், சாமளாபுரம் பகுதியில் அதிக அளவில் கழிவுகள் கலக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றின் நீர் வழியில் கால்நடை வளர்ப்போறும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையும் படிக்க | ஆளுநர் விவகாரம்: சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும்! ஆகவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நொய்யல் ஆறு,குளங்கள், ராஜவாய்க்கால் ஆகியவற்றில் களஆய்வு செய்து நொய்யல் ஆற்றில் கழிவுநீரைக் கலக்கும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  அதே போல, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.காளிமுத்து பேசுகையில், தமிழகத்தில் விவசாயிகள் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டத்திலும் பெரும்பாலான வட்டத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் மடத்துக்குளம் வட்டத்தில் மட்டும் தற்போது வரையில் உழவர் சந்தை இல்லாதது அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. ஆகவே, மடத்துக்குளம் வட்டத்தில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/mN2q6aW https://ift.tt/tPWbKHq
via IFTTT

Thursday, 29 June 2023

Dr.B.R. Ambedkar Way... நியூயார்க் நகர தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டும் விழா!

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த தன்னிகரற்ற தலைவர் அம்பேத்கர். அமெரிக்காவில் அவர் இருந்த காலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர்தான். கடந்த 1913-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார் அம்பேத்கர். சர்வதேச அளவில் போற்றப்படக்கூடிய தலைவர்களில் அம்பேத்கர் எப்போதும் தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.டாக்டர் B.R.அம்பேத்கர் வழி பெயர் சூட்டல் நிகழ்ச்சி! இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 61 தெரு மற்றும் பிராட்வே சாலைக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ (Dr.B.R.Ambedkar Way) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி, ஜூன் 26 திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் மெங், மாநில செனட்டர் மைக்கேல் கியானரிஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் ராகா, கவுன்சில்வுமன் ஜூலி வோன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விழாவின் படங்களைப் பகிர்ந்து, "இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளது.  In partnership with Shri Guru Ravidass Temple of NY, we co-named 61st Street and Broadway, “Dr. B.R. Ambedkar Way.” Along with @RepGraceMeng @StevenRaga @SenGianaris, today’s ceremony was attended by our hundreds of community members in #Woodside and from around the world (1/3) pic.twitter.com/bZiwUlkFIo— Council Member Julie Won (@CMJulieWon) June 25, 2023 அம்பேத்கர் வாழ்வில் சந்தித்த தீண்டாமையும், எதிரான போராட்டமும் | Ambedkar | Vikatan விழாவில் பங்கேற்ற கவுன்சில் உறுப்பினர் ஜூலி வோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `நியூயார்க்கின் ஸ்ரீ குரு ரவிதாஸ் டெம்பிளுடன் இணைந்து நாங்கள் 61வது தெரு மற்றும் பிராட்வேக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ என பெயரிட்டோம். இன்றைய விழாவில் உட்சைட் மற்றும் உலகெங்கிலும் உள்ள  நூற்றுக்கணக்கான எங்கள் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்’’ என்று பதிவிட்டுள்ளார். நியூயார்க் நகரத்தில் உள்ள தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டி மரியாதை செய்ததற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
http://dlvr.it/SrPq5f

Wednesday, 28 June 2023

Viral Video: 18 மணி நேரம் தாமதமான விமானம்... காத்திருந்த பயணிக்கு நடந்த `அடடே' சம்பவம்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர் (Phill Stringer). இவர் அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma City) சிட்டியிலிருந்து வட கரோலினாவின் சார்லொட் (Charlotte) வரை பயணம் செய்வதற்காக விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறார். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்பே விமான நிலையம் வந்த பயணிகளிடம் 'விமானம் தாமதமாக வரும்' எனக் கூறியிருக்கிறார்கள். பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்த நிலையில், 'விமானம் 18 மணி நேரம் தாமதமாக வரும்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே காத்திருந்த பயணிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். View this post on Instagram A post shared by Phil Stringer (@philstringer) ஆனால். பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமானத்துக்காக காத்திருந்திருக்கிறார். இது தொடர்பாக பில் ஸ்ட்ரிங்கர், ``விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை. விமானத்துக்குள் தனியே பயணித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. 18 மணி நேர காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு, விமானப் பணிப்பெண்கள் என்னை மிக மரியாதையாக நடத்தினார்கள். எனக்காகவே அளிக்கப்பட்ட 'பர்சனல் பார்ட்டி' போல இருந்தது இந்தப் பயணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமேசான் காட்டில் 4 குழந்தைகளின் போராட்டம்: விமான விபத்தில் மாயமாகி, 40 நாள்களுக்குப் பிறகு மீட்பு!
http://dlvr.it/SrMtnj

`கொரோனா Bioweapon-ஆக உருவாக்கப்பட்டது..!' - வூஹான் வைராலஜி ஆராய்ச்சியாளர் அதிர்ச்சித் தகவல்!

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலாகப் பரவத் தொடங்கிய `கோவிட்-19' எனும் கொரோனா வைரஸ் தொற்று, நாளடைவில் உலகின் பல்வேறு நாடுகளில் படர்ந்து பல லட்சக்கணக்கான மனிதர்களைப் பலிகொண்டது. தற்போது வரையில் முழுமையாக கொரோனா தொற்று நீங்கிவிட்டது என்று கூற முடியவில்லை என்றாலும், தடுப்பூசிகள் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.கோவிட் 19 கொரோனா வைரஸ் இத்தகைய கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே வெளியிட்டது என்று இடையில் பல பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், சீனாவிலுள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் (Wuhan Institute of Virology) ஆராய்ச்சியாளர் சாவோ (Chao), சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை உயிரி ஆயுதமாக (Bioweapon) உருவாக்கியதாக தற்போது கூறியிருக்கிறார். இத்தகைய அதிர்ச்சி தரும் தகவலை, சீனா குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் நேரடித் தகவல்களை வெளியிடும், சர்வதேச பத்திரிகை சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங் (Jennifer Zeng) உடனான நேர்காணலின்போது சாவோ வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நேர்காணலின் முழு வீடியோவையும் ஜெனிஃபர் ஜெங் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், இது தொடர்பாக ஜெனிஃபர் ஜெங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், சாவோ, ``2019-ம் ஆண்டு பிப்ரவரியில் என்னுடைய உயரதிகாரியால், நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகள் எனக்கு வழங்கப்பட்டன. அதில், அதிக வீரியமிக்க, அதே சமயம் மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் எதுவென்று கண்டறியுமாறு கூறப்பட்டது. கொரோனா வைரஸ் உயிரி ஆயுதம் (Bioweapon). பின்னர் அதே ஆண்டு வூஹானில் நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது என்னுடைய சக ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில நாள்கள் காணவில்லை.கோவிட் 19 கொரோனா வைரஸ் பின்னர் காணாமல்போன ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சுகாதார நிலைமையைச் சரிபார்க்க தான் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், சுகாதார நிலைமையைச் சரிபார்க்க வைராலஜி ஆராய்ச்சியாளர்களை அனுப்ப அவசியமில்லை. ஒருவேளை அவர்கள் மூலம் கொரோனா வைரஸை பரவ விட்டிருக்கலாம். இது மட்டுமல்லாமல் 2020-ல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்நிலையைப் பரிசோதிக்க ஜின்ஜியாங்குக்கு (Xinjiang) நான் அனுப்பப்பட்டேன். ஆனால், இங்கு உடல்நிலையைச் சரிபார்க்க வைராலஜி ஆராய்ச்சியாளர் தேவையில்லை. பிறகுதான், மனிதர்களில் அந்த வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய அனுப்பப்பட்டேன் என்ற சந்தேகம் எழுந்தது" என்று கூறியதாக ஜெனிஃபர் ஜெங் விளக்குகிறார். இந்தத் தகவல் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சீனாவில் பரவும் புதியவகை கொரோனா... `மறுபடியும் மொதல்லேருந்தா...'- அச்சத்தில் உலக நாடுகள்!
http://dlvr.it/SrMtkB

H-1B விசா வைத்திருக்கிறீர்களா? நீங்கள் கனடாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்...!

நீங்கள் H 1B விசாக்கள் வைத்திருந்தால் மட்டுமே அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு பிரஜைகள் தற்காலிகமாக வேலை செய்ய முடியும். இந்த நிலையில், `அமெரிக்க H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில், ஓப்பன் வொர்க் பர்மிட் ஸ்ட்ரீமை (Open Work Permit Stream) அரசாங்கம் உருவாக்கும்’ என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.கனடாபங்குச் சந்தை: மார்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனம் பரிந்துரை செய்யும் பங்குகள்... என்னென்ன? இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வெளியீட்டில், ``கனடாவிலும், அமெரிக்காவிலும் உயர் தொழில்நுட்பத் துறைகளில், பெரிய செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் H-1B விசாவைக் வைத்துள்ளனர். H-1B ஸ்பெஷலிட்டி ஆக்குபேஷன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களோடு வரும் குடும்ப உறுப்பினர்கள், கனடாவுக்கு வர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அல்லது பணிபுரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும். இந்தப் புதிய முடிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை கனடாவில் பணிபுரிய அனுமதி பெறுவார்கள். அவர்கள் கனடாவின் எல்லாப் பகுதிகளிலும், எந்தவொரு நிறுவனத்திலும் வேலை செய்ய முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. கனடா அரசின் இந்த அறிவிப்புக்கு H-1B விசா வைத்திருப்பவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது!
http://dlvr.it/SrMQzf

அரச பககவரதத கழக மணடல அலவலகததல கணகணபபளர தககடடத தறகல

காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே பொன்னேரி கரை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பிடித்தம் மற்றும் தீர்வு, தொழிலாளர் நலன் பிரிவில் கண்காணிப்பாளராக சென்னை திருவேற்காடு நூம்பல் சூசை நகர் பகுதியைச் சேர்ந்த மணி (59 )பணிபுரிந்து வந்தார். கண்காணிப்பாளர் மணி வழக்கம் போல் புதன்கிழமை சீக்கிரம்  பணிக்கு வந்த நிலையில் திடீரென அறையின் மின்விசிறியில் டவல் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் மணியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்காணிப்பாளர் மணி தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னையா?, அல்லது பணிசுமையா? என்ற கோணத்தில் காஞ்சிபுரம் தாலுக்கா  போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/i597yNF https://ift.tt/JEVjSM8
via IFTTT

`Unacceptable’; பிரதமர் மோடியைக் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு மிரட்டல் - அமெரிக்கா கண்டனம்

பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் (The Wall Street Journal) சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``இந்தியாவில் எந்தவித மத, இன, சாதிப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.மோடி இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஜான் கிர்பி,அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் கெல்லி ஓ'டோனல் (Kelly O’Donnell) சக பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர்,ஜான் கிர்பி``அந்தத் துன்புறுத்தல் பற்றிய தகவல் எங்களுக்குத் தெரியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை வெள்ளை மாளிகை கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தச் செயலுக்கு எங்களுடைய கண்டனங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.`மோடி தனியாக எதையும் செய்யவில்லை; ஹூஸ்டன் பல்கலை.-யில் தமிழ் இருக்கை’ - அமெரிக்காவில் பிரதமர் உரை
http://dlvr.it/SrLc16

Tuesday, 27 June 2023

லுங்கியுடன் சாகச வீரர் பியர் கிரில்ஸ் | பூங்காவில் விபத்துக்குள்ளான ரோலர் கோஸ்டர் - உலகச் செய்திகள்

டெக்ஸாஸில் ஐஸ்க்ரீம் கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 150 பவுண்டு போதைப்பொருளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். அமெரிக்காவிலுள்ள ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தில் பணிபுரியும் 3,000 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். LGBTQ+ மக்களை ஆதரிக்கும் விதமான "Pride Month" கொண்டாட்டங்களுக்கு அந்த நிறுவனம் ஒப்புதல் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஸ்வீடனில் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். விபத்து குறித்து அந்த நிறுவன சி.இ.ஓ, ``இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார். தென்கொரியாவில், பொருளாதார நெருக்கடியால், தன் இரண்டு பிள்ளைகளைக் கொன்று பல ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த பெண்ணைக் கைதுசெய்திருக்கின்றனர். ரஷ்யாவில் வாக்னர் படையால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உக்ரைனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், தனது நிகழ்ச்சிக்கான அடுத்த விருந்தினர் குறித்து ஹிண்ட் கொடுக்கும் விதமாக, அவர் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். `ஓஷன் கேட்' நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான வழக்கை அமெரிக்கக் கடலோரப் படையினர் விசாரிக்கவிருக்கின்றனர். பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அடுத்த நிதியாண்டின் வரியை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பலில் தன் மகனுடன் உயிரிழந்த பாகிஸ்தானிய பில்லியனர் ஷாஜதா தாவூத்தின் மனைவி கிறிஸ்டின் தாவூத், இறப்புக்கு முந்தைய இறுதித் தருணங்களைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அமெரிக்காவில், `அலாரம் தொந்தரவாக இருக்கிறது' என்று ஆய்வக ஃப்ரீசரை நிறுத்திய தூய்மைத் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனம், ரூபாய் 8 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருக்கிறது.
http://dlvr.it/SrHllb

Monday, 26 June 2023

வாக்னர் குழு விவகாரம்: ``ரஷ்யாவுடன் உறுதுணையாக நிற்போம்'' - சீனா சொல்வதென்ன?

ரஷ்யா-உக்ரைனுக்கிடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. இந்த நிலையில், சமீபகாலமாக வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இதற்கிடையே, `ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்போம்' என வாக்னர் குழு சபதமேற்றிருந்தது. இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் புதின், ``வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்ற துரோகம். இதற்கு வாக்னர் குழுவுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்" என எச்சரித்திருந்தார்.வாக்னர்: யெவ்ஜெனி ப்ரிகோஜின் - புதின் இந்த நிலையில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக வாக்னர் படை பின்வாங்கியிருக்கிறது. மேலும், ரஷ்ய தரப்பு, "யெவ்ஜெனி ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும். அவர் வெளியேறினால் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது" எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டுக்கு யெவ்ஜெனி ப்ரிகோஜின் செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்கவிருந்த உள்நாட்டுப் போர் தொடர்பான அச்சம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் படையின் எழுச்சி தொடர்பான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், "எங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் கூட்டுறவுப் பங்காளியாகவும் இருக்கும் ரஷ்ய நாட்டின் தேசிய உறுதித்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பைக் காப்பதில் ரஷ்யாவுடன் சீனா உறுதுணையாக நிற்கும்" என்று தெரிவித்திருக்கிறது.ரஷ்ய அதிபர் புதின் அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"வாக்னர் குழு தொடர்பாக ரஷ்யாவின் நிலைமையை வலுபடுத்த ரஷ்ய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவின் ஒற்றுமை மற்றும் செழிப்பை வலுப்படுத்துவதில் அதன் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது"எனக் குறிப்பிட்டிருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் முக்கியமனதாகக் கருதப்படுகிறது.Wagner: `ஈவு இரக்கமற்றவர்கள்’ புதின் ஆதரவு படையால் நெருக்கடியில் ரஷ்யா - வாக்னர் குழுவின் பின்னணி
http://dlvr.it/SrFh14

Sunday, 25 June 2023

2019-ல் ஆர்டர்; 2023-ல் டெலிவரி - இந்தியாவில் செயலி தடை செய்யப்பட்டும் பொருளை அனுப்பிய சீன நிறுவனம்!

உலகளவில் ஆன்லைனில் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊராடங்கின் போது ஆன்லைனில் பொருள்களை வாங்குவது இயல்பாகிவிட்டது. கடைகளுக்கு செல்லாமலே விரைவில் பொருள்கள் கைகளில் வந்து சேர்வதால் மக்களின் கவனம் இதன்பக்கம் திரும்பியிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்த பொருள் 4 வருடங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் தகவல் வைரலாகிவருகிறது. டெல்லியைச் சேர்ந்தவர் நிதின் அகர்வால். இவர் 2019 -ம் ஆண்டு அலி எக்ஸ்பிரஸ் ஆன்லைன் வலைத்தளத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது சீனாவில் கொரோனா பரவியதால் சர்வதேச பார்சல்கள் அனுப்பும் சேவை நிறுத்தப்பட்டது. அலி எக்ஸ்பிரஸ் அதனால், அந்தப் பொருள் வந்து சேரவில்லை. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படதால் அந்தப் பொருள் குறித்து நிதின் அகர்வால் மறந்துவிட்டார். இதற்கிடையே, 2020- ம் ஆண்டு சீன செயலில்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதில் அலி எக்ஸ்பிரஸ் வலைதளமும் இருந்தது. உடனே அந்த நிறுவனம், பொருட்களை ஆர்டர் போட்டிருந்தவர்களின் பணத்தை திருப்பி கொடுத்தது. ஆனால், நிதின் அகர்வாலுக்கு பணம் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில்தான் அலி எக்ஸ்பிரஸ் நிறுவனம், நிதின் அகர்வால் ஆர்டர் போட்டிருந்த பொருட்களை வேறு டெலிவரி நிறுவனம் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது. நிதின் அகர்வால் இதை ட்விட்டாரில் பகிர்ந்து கொண்டதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் பெருக்கும் மந்திரங்கள்..! ஃபைனான்ஷியல் சீக்ரெட்ஸ் - புதிய தொடர்
http://dlvr.it/SrC2tN

Saturday, 24 June 2023

Modi USA Dinner: அம்பானி முதல் சுந்தர் பிச்சை வரை... வெள்ளை மாளிகை விருந்தில் மோடி | Photo Album

Modi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடிModi USA Dinner: வெள்ளை மாளிகை விருந்தில் மோடி
http://dlvr.it/Sr8nZK

Friday, 23 June 2023

பிரபல பாடகர் தற்கொலை | ட்விட்டர்மீது வழக்கு தொடர்ந்த ஊழியர் - உலகச் செய்திகள்

ட்விட்டர் நிறுவனம் வாக்குறுதியளித்ததுபோல் ஊழியர்களுக்கு போனஸ் வழங்காததால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பாரிஸ் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 24 பேர் காயமடைந்தனர். பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் முதன்முறையாகத் தனது மூன்வாக் நடனத்துக்கு முன்னர் அணிந்திருந்த கறுப்பு நிற Fedora hat செப்டம்பர் மாதம் பாரிஸ் இசை நினைவுப் பொருள்களுக்கான ஏலத்தில் இடம்பெறவிருக்கிறது. 2011-ல் கொரியா காட் டேலன்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, மக்களை ஈர்த்த பாடகர் சோய் சங் போங், தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 33. இஸ்ரேலின் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மூன்று பேரை இஸ்ரேல் அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக பிரெஞ்ச் கலைஞர் லாரென்ட் டே லா ஹையர் (French Artist Laurent de la Hyre) என்பவரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட ஓவியம், பிறகு பீட்டர் பால் ரூபென்ஸ் என்பவரால் வரையப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. இந்த ஓவியம், 7.7 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனில் நடந்த போரில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட் டேன்கரை அழித்த ரஷ்ய ராணுவ வீரருக்குத் தனியார் அறக்கட்டளை ஒன்று ஒரு மில்லியன் ரூபிள் ($11,842) வெகுமதி அளித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அரசுமுறைப் பயணமாக நான்கு நாள்கள் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் சந்தனக்கட்டைப் பெட்டி, வைரக்கல்லைப் பரிசாகத் தந்தார். இரு நாட்டுத் தலைவர்களும் பரிசுப் பொருள்களைப் பகிர்ந்துகொண்டனர். கடலுக்கடியிலுள்ள டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைப் பார்ப்பதற்குச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் பயணிகளுடன் காணாமல் போனது. நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்க பிரான்ஸ் நாட்டின் ஆழ்கடல் ரோபோ இணைந்திருக்கிறது. சமீபத்தில் கிரீஸில் நடைபெற்ற கப்பல் விபத்தில் பலியானோரில் 209 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Sr67bZ

Thursday, 22 June 2023

மும்பைத் தாக்குதல் தீவிரவாதியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை - இந்தியா கண்டனம்!

மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காகத் தேடப்பட்டு வருபவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி சஜித் மிர் (Sajjid Mir). இந்த நிலையில், சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவரது சொத்துகளை முடக்கி, பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தின. ஆனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.பிரகாஷ் குப்தா இந்த நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா சபையின் இந்தியப் பிரதிநிதி பிரகாஷ் குப்தா கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ஐ.நா சபையில், "மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சஜித் மிர். இந்தியா, அமெரிக்கா, பல நாடுகளின் தேசியச் சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட தீவிரவாதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், சஜித் மிர்ரை சர்வதேசத் தீவிரவாதியாகப் பட்டியலிடுவதற்கான முன்மொழிவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்பு பட்டியல்களுக்குள் வரவில்லை. சஜித் மிர்ரை ஒரு தீவிரவாதியாக அறிவிக்கவும், அவர்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் (UNSC) இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைத்த கோரிக்கையை சீனா தடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. மும்பையின் தாஜ் ஹோட்டலில் வெளிநாட்டினரைக் கொல்ல எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதிகளை மிர் இயக்கியது தொடர்பான ஆடியோவை சமர்ப்பித்திருக்கிறோம். ஐநா சஜித் மிர் இந்திய சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட தீவிரவாதியாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் மூளையாகச் செயல்பட்டவர்கள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.மே.வ: `உடல்ரீதியிலான தாக்குதல், அரசியல் மிரட்டல்கள்’ - ஆளுநரின் Peace Room-ல் குவியும் புகார்கள்!
http://dlvr.it/Sr3FHs

Wednesday, 21 June 2023

மடடர அண நலவரம!

  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.94 அடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 328 கன அடியிலிருந்து 235 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதையும் படிக்க | அமுல் காா்ட்டூன் சிறுமி விளம்பரத்தை உருவாக்கியவா் மறைவு அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.63 அடியிலிருந்து 96.94 அடியாக சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 60.94 டி.எம்.சி ஆக இருந்தது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/JnKZQU1 https://ift.tt/YR0owWB
via IFTTT

இந்திய வம்சாவளி மாணவருக்குச் சிறைத் தண்டனை| சீன அதிபரைச் சந்தித்த அமெரிக்க அமைச்சர்- உலகச் செய்திகள்

ஆஸ்திரியாவில் நடந்த அணிவகுப்பில் (Pride Parade) திட்டமிட்டுத் தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ் அமைப்பை ஆதரிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேபாளில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க செயலாளர் அன்டோனி பிளிங்கன் சீனா சென்றடைந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்க்கையும் அவர் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்காகத் தொடர்ந்து போராடுவேன்'' என்று உறுதிப்படக் கூறியிருக்கிறார். கைது இங்கிலாந்தின் வேல்ஸில், கடந்த ஆண்டு நண்பர்களுடன் இரவு வெளியில் சென்றபோது, போதையில் இருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இந்திய வம்சாவளி மாணவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனின் ககோவ்கா அணை உடைந்ததைத் தொடர்ந்து, கொசுக்களால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ராணுவம் எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 47 மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு பில்லியனர் மக்கள் வசிப்பதாக Forbes பத்திரிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வார இறுதியில் உள்நாட்டு லீக் பட்டத்தை வென்ற பிறகு, துலூஸின் ரக்பி வீரர்களுடன் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி German Peace Prize- ஐ வென்றிருக்கிறார். வடக்கு அட்லாண்டிக்கில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற பாகிஸ்தானின் பெரும் பணக்காரர், அவரின் மகன் மற்றும் ஐந்து பேர் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
http://dlvr.it/Sr0LRC

Tuesday, 20 June 2023

விவாகரத்து, தகாத உறவுக்குத் தடை; மீறினால் டிஸ்மிஸ்- ஊழியர்களுக்கு இப்படியும் ரூல்ஸ் போடும் நிறுவனம்!

கம்பெனி என்று இருந்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடத்தான் செய்வார்கள். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால், சீனாவின் ஜெஜியாங் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு விநோதமான பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. `விவாகரத்து பெறக் கூடாது, திருமணத்தைத் தாண்டி தகாத உறவு வைத்திருக்கக் கூடாது' என்று நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அனைவரையும் சற்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஊழியர்கள் இந்தக் கட்டுப்பாடுகள், குறிப்பாக, திருமணமான அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால், நேரடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். `திருமண உறவுக்கு உண்மையாக இருத்தல், கணவன் மற்றும் மனைவிக்கிடையே உள்ள அன்பு, குடும்பத்தைச் சிறப்பாகப் பாதுகாத்தல் மற்றும் வேலையில் கவனம் செலுத்துதல் போன்ற கலாசாரத்தைப் பரிந்துரைப்பதற்காக, திருமணமான அனைத்து ஊழியர்களும் தகாத உறவு, திருமணம் தாண்டிய உறவு, விவாகரத்து போன்ற தீய நடத்தைகளில் இருந்து தடுக்கப்படுகிறார்கள்' என்ற அறிவிப்பை இந்நிறுவனம் ஜூன் 9 அன்று அறிவித்துள்ளது.  இந்த நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததற்கு என்ன தூண்டுதலாக இருந்தது என்பது தெரியவில்லை. ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பணியிட விவகாரங்களில் இது ஒரு காரணமாக இருந்ததா என்பது கேள்வியாகி இருக்கிறது.``நாங்க என்ன ஸ்கூல் குழந்தைங்களா..?” கூகுள் நடவடிக்கைகளை எதிர்க்கும் ஊழியர்கள்! `சீனாவின் தொழிலாளர் ஒப்பந்தச் சட்டத்தின்படி, ஊழியர்கள் இனி வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது அவர்களின் திறன்கள் அவர்களின் வேலையின் தேவைகளோடு பொருந்தவில்லை என்றால் மட்டுமே அவர்கள் சட்டபூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்’ என ஷாங்காயில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சென் டோங் இந்தத் தடை குறித்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தடை அறிவிப்புக்கு சமூக வலைத்தளத்தில் மாறுபட்ட கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. சீன நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து உங்களின் கருத்தென்ன?
http://dlvr.it/Sqxx4C

மொட்டை மாடியில் 2 வேன்களை பார்க் செய்த நபர்... அட இப்படி ஒரு காரணமா?!

வீடு கட்டுவதற்கு மட்டும் இடமிருந்தால் சிலருக்கு போதாது. அவர்களது பைக், கார் போன்றவற்றை பார்க் செய்யவும் இடம் தேவைப்படும். அல்லது, `என்னோட வீட்டு வாசல்ல/என் பார்க்கிங் ஏரியால நீ எப்படி பார்க் செய்யலாம்?’ என சில சச்சரவுகள் வரலாம். மொட்டை மாடியில் பார்க் செய்யப்பட்ட வாகனம்! இந்நிலையில், தைவான் நாட்டில் விநோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு, குடியிருப்பு வாசலில் வேனை நிறுத்தியதற்காக, ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் கடுப்பாகிப் போன அவர், தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தன் வேன்களை பார்க் செய்திருக்கிறார். தனது இரண்டு வேன்களில் ஒன்றினை மாடியிலும், மற்றொரு வேனை மொட்டைமாடிக்கும் மேலே உள்ள ஒரு ரூஃப்பில் (roof) நிறுத்தியும் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தந்திருக்கிறார். அதில் ஒரு வேனின் சிறுபகுதி மாடிக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி, மிரள வைத்திருக்கிறது. ’ஏன் மொட்டை மாடியில் இரண்டு வேன்களை நிறுத்தினார்?’ என்ற கேள்விகள் ஒரு பக்கம் கிளம்ப, ‘அதெல்லாம் சரி... எப்படி நிறுத்தினார்?’ என்று சுவாரஸ்யமானார்கள் பலர். மொட்டை மாடியில் பார்க் செய்யப்பட்ட வாகனம்! டெல்லி: கார் பார்க்கிங் பிரச்னை; தந்தை, மகன்மீது துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன? இதுபற்றி அவரிடம் கேட்டபோது, வாகனம் நிறுத்தியதற்காக தனக்கு அபராதம் விதித்த விரக்தியில் வேனை மாடியில் பார்க் செய்துள்ளதாகவும், இதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்து, அதன் மூலமாக இரண்டு வேன்களையும் வீட்டு மொட்டை மாடியில் நிறுத்தியதையும் பகிர்ந்துள்ளார். வாகனங்களை மாடியில் இருந்து இறக்கும்படி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், `இந்தக் கட்டடம், ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. அதனால் இது எந்த வகையிலும் கட்டடத்தைப் பாதிக்காது. இரண்டு வாகனங்களின் எடையைத் தாங்கும். நான் எந்த விதிகளையும் மீறவில்லை. அதனால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' எனக் கூறி, கடைசியில் வாகனத்தைக் கீழே இறக்க ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தைவானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/SqxTFM

இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் மைக்ரான் டெக்னாலஜி... என்ன காரணம்?

அமெரிக்க நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி இந்தியாவில் தனது செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலையை அமைக்க 1பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. எதிர்காலத்தில் இந்த முதலீடு 2 பில்லியன் டாலர்  வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது.மைக்ரான் டெக்னாலஜிஇந்திய பங்குச் சந்தை: நச்சுன்னு 4 ஐபிஓ-க்கள்... முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..! இந்த மைக்ரான் டெக்னாலஜிஸ் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் கணினி, மொபைல்போன் பயன்பாடுகளுக்கான நினைவகம் மற்றும் டைனமிக் ரேண்டம் அணுகல் நினைவகம் சேகரிப்பு பாகங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது அமெரிக்க பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் போது சிப்மேக்கர்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான தனது முயற்சிகளை செயல்படுத்துவார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு தேவையான செமிகண்டக்டரை, அந்நிறுவனம் சீன ஆலையிலிருந்து பெற்று வருகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் மத்தியில், சீனாவிற்கு வெளியே அதன் முக்கியமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்பாக இதை கருதுகிறது. எனவே, சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளில் ஆலை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. இதனால் இந்தியாவில் அமைக்கப்படும் ஆலையில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும்..? பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..! இன்றைய சூழலில் பல நாடுகள் மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வரும் வேளையில் அதற்கான செமிக்கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து செமிகண்டக்டர்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா இப்போது, உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான முதலீட்டை செய்ய மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்த முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானால், `மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், தொழில்துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் என்று கூறுகிறார்கள்.
http://dlvr.it/SqxT5b

Monday, 19 June 2023

கலிபோர்னியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம் | பஞ்சத்தால் இறக்கும் வடகொரிய மக்கள் - உலகச் செய்திகள்

வாஷிங்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ககோவ்கா அணை சமீபத்தில் உடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவதை ரஷ்யா தொடர்ந்து தடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில், 2050-ம் ஆண்டுக்குள் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக குறைப்பதை நோக்கமாகக் கொண்ட வணிகங்களுக்கு உலகளாவிய குறைந்தபட்ச வரியும் மற்றும் காலநிலைச் சட்டமும் அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சுவிஸ் வாக்காளர்கள் அங்கீகரிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையே 254 கிலோமீட்டர் நீளமுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிளை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ஐரோப்பா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியா ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியான இணைப்பை உருவாக்க உதவும் என்று அந்நாட்டின் நிதித்துறை தெரிவித்திருக்கிறது. உகாண்டாவில் பள்ளிக் குழந்தைகள் 37 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க மேலும் பல தனிப்படைகளை அனுப்ப அந்நாட்டின் அதிபர் யோவேனி முசெவேனி உத்தரவிட்டிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் உடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். வட கொரியாவில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். உணவின்றி மக்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இத்தாலியிலிருந்து மீட்கப்பட்ட 2,800 ஆண்டுகள் பழைமையான கல் பலகையை ஈராக் வெளியிட்டிருக்கிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், பீட்டர் சதுக்கத்தில், பிரார்த்தனையில் ஈடுபட்டார் போப் ஃப்ரான்சிஸ். தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிலநடுக்க அதிர்வு பதிவு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
http://dlvr.it/Sqv9zF

குறைந்த நாள்களில் 156 கிலோ எடையைக் குறைக்க முயன்ற 21 வயது இன்ஃபுளூயன்சர் - பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தை சேர்ந்தவர் 21 வயதான குய்ஹுவா. இவர் டிக்டாக்கின் சீன வெர்ஷனான டூயினில் மிகவும் ஆக்டிவ்வாகச் செயல்பட்டு அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் தன் அதிக உடல் எடையை குறைக்கும் வீடியோ தொடரை ஆரம்பித்துள்ளார். குய்ஹுவா இதனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான டயட் ஆகியவற்றை ஃபாலோ செய்து வந்துள்ளார். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். தன்னை பின்தொடர்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக மிகவும் குறைந்த நாள்களில் தன் உடல் எடையை பாதியாகக் குறைக்க முயன்று, தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பை குய்ஹுவாவின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இவரது இறப்பு தொடர்பான சீன தேசிய வானொலியில் வெளியான அறிவிப்பில், `குய்ஹுவா 156 கிலோ எடை கொண்டவர். எனவே அவர் தன் எடையை 100 கிலோவுக்கும் கீழே குறைக்க நினைத்துள்ளார். இதனால் அவர் தன் இலக்கை அடையும் முயற்சியில் பல்வேறு நகரங்களில் உள்ள பல எடை இழப்பு முகாம்களில் சேர்ந்து இரண்டு மாதங்களில் 27 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். ஆரோக்கியமான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் ஓய்வு ஆகியவையே ஒருவர் எடையை இழக்க உதவும். ஆனால் குய்ஹுவா மிகத் தீவிர உடற்பயிற்சி செய்தது மட்டுமல்லாமல் ஓய்வில்லாமல் இருந்துள்ளார். மேலும் தன் உணவையும் சரியாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குய்ஹுவாஉடல் எடை குறைக்க சிகிச்சை எடுத்த பெண் உயிரிழப்பு; காதலரின் வேதனைப் பதிவு! குய்ஹுவாவின் மரணத்துக்கு அவர் பயிற்சி எடுத்துக்கொண்ட எடை இழப்பு முகாம் (Gym) இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் இவரது இறப்பு தொடர்பாக சீன உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குய்ஹுவா இருந்த எடை இழப்பு முகாமில் அதிகப்படியான அல்லது முறையற்ற பயிற்சி நடத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். சீனாவில் ஓர் இளைஞர் ஒரே நேரத்தில் பல வலுவான மதுபானங்களை குடித்து சமூகவலைதளத்தில் லைவ் செய்து உயிரிழந்தார். இந்தச் செய்தி வெளியான சில வாரங்களிலேயே குய்ஹுவாவின் இறப்பு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமூக வலைதள வியூவ்ஸுக்காக இளைஞர்கள் தங்கள் உயிருடன் விளையாடுகின்றனர் என்று பலரும் அதிர்ச்சியை பகிர, இதனால் சமூக வலைதள இன்ஃளூயன்சர்கள் குறித்து சீன அரசு தன் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது.
http://dlvr.it/SqtlYr

Sunday, 18 June 2023

`காரணமின்றி முடக்கப்பட்ட பேஸ்புக் அக்கௌன்ட்'... வழக்கு போட்டு 41 லட்சம் வாங்கிய நபர்!

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்த ஜேசன் க்ராஃபோர்ட் என்பவர் தனது பேஸ்புக் அக்கௌன்ட் காரணமின்றி முடக்கப்பட்டதற்காகத் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 41 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதாரணமாக ஜேசன் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தன்னுடைய மொபைலை எடுத்து பேஸ்புக் அக்கௌன்ட்டை கிளிக் செய்கிறார். ஆனால், அவரின் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அந்த பக்கத்தில் குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக விதிகளை மீறியதற்காக அக்கௌன்ட் முடக்கப்பட்டிருக்கிறது என காண்பித்துள்ளது.metaசென்னையில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் அமைவதால் என்ன மாற்றம் வரும்..? தான் அப்படி ஏதும் போஸ்ட் போடவில்லையே என நினைத்தவர், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவை தொடர்பு கொண்டு `என்ன, எங்கே தவறு நடந்தது' எனக் கேட்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், எந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மெயில் அனுப்பியும் பலனில்லை. இந்த சமயத்தில் வேறு வழியின்றி 2022 ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்கிறார். எந்த ஒரு விதியும் மீறாத போதும், மீறியதாகக் கூறி தன்னுடைய அக்கௌன்ட் முடக்கப்பட்டிருப்பதாகவும், நிறுவனத்தின் அலட்சிய தன்மையையும் சுட்டிக் காட்டி வழக்குப் பதிவு செய்திருக்கிறார். நீதிமன்ற விசாரணையில், ஜேசன் தொழில்நுட்ப குழுவிற்கு  மெயில் செய்தபோதும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே ஜேசனுக்கு பதிலளிக்காமல் இருந்ததால் 41 லட்ச ரூபாய் (50,000 அமெரிக்க டாலர்கள்) நஷ்ட ஈடாக வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.court orderசெய்யாத குற்றத்துக்காக 604 நாள்கள் சவுதியில் சிறை... பேஸ்புக் போலிக் கணக்கால் நிகழ்ந்த துயரம்! ``அவர்கள் எனது பேஸ்புக் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்துள்ளனர்.  மேலும் நான் ஓரளவு நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். நிதி ஆதாயத்திற்காக நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக அவர்களின் வெளிப்படை தன்மை மற்றும் பதிலளிக்க மறுத்ததற்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்தேன்’’ என ஜேசன் தெரிவித்தார். `நான் சிவனேனு தான இருந்தேன். என்னோட அக்கௌன்ட்டை ஏன் ப்ளாக் பண்ணாங்க' என்று கேட்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா?    
http://dlvr.it/SqrxdC

Saturday, 17 June 2023

3 மகன்களை வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை; அமெரிக்காவில் கொடூரம்!

அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தன்னுடைய மூன்று மகன்களை வீட்டில் வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கிளர்மாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் (Clermont County Sheriff Office) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வியாழனன்று சாட் டோர்மேன் (Chad Doerman) என்பவர், மூன்று, நான்கு, ஏழு வயதுடைய மூன்று மகன்களையும் துப்பாக்கியால் சுடுவதற்காக வரிசையாக நிற்க வைத்திருக்கிறார். துப்பாக்கி அப்போது ஒரு சிறுவன் மட்டும் தப்பிக்க முயற்சி செய்து வெளியில் ஓடியிருக்கிறார். ஆனால், சாட் டோர்மேன் அந்த சிறுவனையும் பிடித்து இழுத்துவந்து மூன்று பேரையும் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றார். அப்போது சாட் டோர்மேனை தடுக்கச்சென்ற அவரின் மனைவிக்கும் கையில் துப்பாக்கிக்கு குண்டு துளைத்தது. அதைத் தொடர்ந்து பெண் ஒருவர், 911 எனும் அவசர எண்ணுக்கு போன் செய்து, தன்னுடைய குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதேபோல் டிரைவர் ஒருவர், `தந்தை எல்லோரையும் கொலைசெய்கிறார்' என்று ஒரு பெண் கத்தியபடி வெளியில் ஓடியதாக அதே அவசர எண்ணுக்கு போன் செய்து கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சில மருத்துவர்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சாட் டோர்மேனின் மனைவி சின்சினாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், சாட் டோர்மேனின் மகளின், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை. பின்னர் அங்கேயே வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த சாட் டோர்மேனை போலீஸார் கைதுசெய்தனர்.கைது போலீஸார் அவரிடத்தில் விசாரித்ததில், பல மாதங்களாகத் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்ததாக அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், கொலைக்கான காரணம் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையிலும், சாட் டோர்மேன் திட்டமிட்டு மூன்று மகன்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.``முடியவில்லை, ஊருக்கே வந்துவிடுகிறேன்!" - திருவாரூரிலிருந்து குவைத்துக்குச் சென்றவர் சுட்டுக்கொலை?
http://dlvr.it/SqqKyq

அமெரிக்க பெடரல் நீதிபதியான முதல் இஸ்லாமியப் பெண்|விபத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர்- உலகச் செய்திகள்

ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டபூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன அதிபர் முகம்மது அபாஸ், தன்னுடைய நான்கு நாள் சீனப் பயணத்தை நிறைவு செய்தார். இரு நாட்டு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று பாரிஸில் இருநாட்டு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் முக்கிய ராணுவ ஆய்வாளரான டானியல் எல்ஸ்பர்க் (Daniel Ellsberg), தனது 92-ம் வயதில் காலமானார். இவர் வியட்நாம் போர் ரகசியங்கள் குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு காத்திருப்போருக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு சில நாள்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆப்பிரிக்க தலைவர்கள் நேற்று வருகை புரிந்தனர். இந்த நிலையில், கிவ் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான Pete Davidson, மலைப்பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தில் சிக்கினார். பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஜூலை மாதம் விசாரணையை எதிர் கொள்வார் என்று கூறப்படுகிறது. உலகின் இரண்டு பெரிய பணக்காரர்களான எலன் மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் நேற்று பாரிஸில் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் `தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், உகாண்டா அதிகாரிகள் மீது அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிவில் உரிமைகள் வழக்கறிஞரான நுஸ்ரத் சவுத்ரி, அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் ஃபெடரல் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது செனட் சபையால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Sqq2Q0

Friday, 16 June 2023

கோமாவில் கணவன், காப்பாற்றப் போராடிய மனைவி... உதவிக்கரம் நீட்டிய 4,000 பேர்! - நெகிழ்ச்சி சம்பவம்

இந்த உலகில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பணத்தால் மனிதர்களிடையே மிகப்பெரிய அளவில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தும், ஒருவருக்கு கஷ்டம் என்றால், அவர் முகம் தெரியாத நபராக இருந்தாலும்கூட தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் சாமானியர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்துகொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் கார் விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றவரைக் காப்பாற்றுவதற்கு 4,000-க்கும் மேற்பட்டோர், சுமார் ரூ.21.7 லட்சத்தை நன்கொடையாக அளித்து உதவியிருக்கின்றனர்.உதவி முன்னதாக, 2020-ல் ஜியாங் என்பவர் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். அப்போது ஜியாங் பிழைப்பதற்கு சிறிய அளவிலான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக ஜியாங்கின் மனைவி டிங் (Ding), தன் கணவரைக் காப்பற்ற மருத்துவச் செலவுகளுக்காக, நிதி திரட்டத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து 4,055 பேர் சுமார் 26,500 டாலர் நன்கொடையளித்து உதவினர். அதோடு 2020 முதல் ஜியாங்கின் மனைவி டிங், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கணவனை அருகிலிருந்து கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நன்கொடையாளர்களின் உதவி மற்றும் டிங்கின் கவனிப்புக்குப் பலனாக ஜியாங் தற்போது கோமாவிலிருந்து மீண்டிருக்கிறார். அதோடு ஜியாங், எப்படிப் பேசுவது, நடப்பது, பல் துலக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டார்.மருத்துவமனை இப்படியிருக்க `ஜியாங் கோமாவிலிருந்து மீண்டது தனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்திருக்கும் டிங், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக வந்த ரூ.21.7 லட்சத்தையும் உதவியவர்களுக்கே திருப்பித் தர முடிவுசெய்திருக்கிறார். கூடவே, ஜியாங் தன்னுடைய மனைவியின் கையால் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழவைத்திருக்கிறது. டிங்கின் இத்தகைய முடிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர், `உங்களின் வலிமையான இதயம் மிகப்பெரிய புன்னகையைக் கொண்டுவரும்' என்று குறிப்பிட்டார்.``12 கிராமங்கள் பயன்பெறும்..." 3 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி!
http://dlvr.it/SqmdTW

Thursday, 15 June 2023

சுகாதார மையங்களில் 16 வகை கருத்தரிப்பு சிகிச்சைகள்; மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு அறிவிப்பு!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 1980-களில் அந்நாட்டின் மக்கள் தொகை அரசுக்குக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தவே, திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் விளைவாக கடந்த தசாப்தங்களில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக அங்கு மக்கள் தொகை குறைந்த இளைஞர்களும், அதிக முதியவர்களுமாக மாறியது. நாட்டின் வளர்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பே முக்கியம் என்பதால் 2021-ம் ஆண்டு முதல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது அந்நாட்டு அரசு. ஆனால் குழந்தை வளர்ப்பு செலவு, கல்வி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களினால் சீனர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மகப்பேறு கால விடுமுறையில் ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள்கள் விடுப்பு, இளைஞர்களுக்கு காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறை எனப் பல விஷயங்களை அள்ளித் தெளித்து வருகிறது.ஐ.வி.எஃப் கருத்தரித்தல் அதன் ஒரு பகுதியாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்போது புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1-ம் தேதி முதல், ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து சுகாதார பாதுகாப்பு மையங்களிலும் 16 வகையான கருத்தரிப்பு தொழில்நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்-விட்ரோ கருத்தரித்தல், கரு மாற்று அறுவை சிகிச்சை, கரு உறைதல் மற்றும் விந்துவை சேமித்தல் ஆகிய 16 வகையான சேவைகள் இனி அரசின் சுகாதார மையங்களிலேயே வழங்கப்படும் என பெய்ஜிங்கின் முனிசிபல் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பீரோவின் துணை இயக்குநர் டு சின் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது சில தனியார் மருத்துவமனைகளுக்கும் IVF சிகிச்சை முறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்களும் தங்கள் கருமுட்டைகளை சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SqkHKL

இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்... வரவேற்கும் நாடுகள் எது தெரியுமா?!

சாதாரணமாகவே நன்றாகச் சம்பாதிப்பவர்களின் மனநிலை, வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்த எண்ணம் மில்லியனர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக இருக்கும். தங்களால் எந்த இடத்தில் மிகவும் வசதியாக வணிகம் செய்ய முடிகிறதோ, எந்த அரசின் கீழ் சிறப்பாகச் செயல்பட முடிகிறதோ அந்த நாட்டை தேடிப் பறப்பது தொழிலபதிர்களிடையே வழக்கம். உலகம் முழுவதிலும் செல்வம் மற்றும் மில்லியனர்களின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்து வரும் `Henley Private Wealth Migration’ என்ற அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. 2023-ல் சீனாவிலிருந்து 13,500 மில்லியனர்கள் இடம்பெயர உள்ளனர். இந்தியாவிலிருந்து 6,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளனர். சிங்கப்பூர் இந்தியாவில் இருந்து இடம் பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் பணக்கார இந்திய குடும்பங்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. வரி அங்குள்ள அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய முதலீட்டாளர் `கோல்டன் விசா' திட்டம், சாதகமான வரி சூழல் மற்றும் பாதுகாப்பான அமைதியான சூழலுக்காக இங்கு இடம்பெயர்கின்றனர்.  2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தன் மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும். ஆஸ்திரேலியா மில்லியனர்களின் அதிகம் செல்லும் 10 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.   கடந்த பத்து ஆண்டுகளில் மில்லியனர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது. 2023, 2024-ல் 1,22,000 மற்றும் 1,28,000 மில்லியனர்கள் உலக அளவில் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
http://dlvr.it/SqjpTF

Tuesday, 13 June 2023

சீன ராணுவ வீரர்களை அடையாளம் காண்பது எப்படி...? - கையேடு வெளியிட்ட தைவான்!

இரண்டாம் உலகப்போரின்போது தைவான், சீனாவிலிருந்து தனியே பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சீனா, தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தைவானின் மற்ற நாடுகளுடனான நட்புறவு நடவடிக்கையையும் சீனா கண்டித்துவருகிறது.தைவான் Vs சீனா இதை எதிர்க்கும்விதமாக தைவானைச் சுற்றி சீனா ராணுவப்படைகளை நிலைநிறுத்தி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில் சீனாவின் 37 போர் விமானங்கள் தைவானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு சீனாவுடனான போர்ப் பதற்றங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் போன்ற காரணங்களால் தைவான், தண்ணீர் மற்றும் உணவுப்பொருள்களை ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அவசர முதலுதவி பெட்டிகளைத் தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகளை விவரிக்கும் கையேட்டையும் கடந்த ஆண்டு வெளியிட்டது.தைவான் இந்த நிலையில், தைவான் ராணுவம் இன்று புதுப்பிக்கப்பட்ட தற்காப்பு கையேட்டை வெளியிட்டது. அதில் முதன்முறையாக சீன மற்றும் தைவான் ராணுவ வீரர்களுக்கிடையேயிருக்கும் வித்தியாசத்தை அவர்களின் சீருடை, கவசங்கள், சின்னம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய ஒரு பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் போர்ச் சூழல் ஏற்படலாம் என்பதால், தைவான் அனைத்து வகையிலும் தன் பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது.``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!
http://dlvr.it/SqcQPS

Monday, 12 June 2023

கடைசி இந்தியச் செய்தியாளரையும் வெளியேற உத்தரவிட்ட சீன அரசு! - என்ன காரணம்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்தியாளர்கள் நான்கு பேரை, சீனாவுக்குச் செய்தி சேகரிப்புப் பணிகளுக்காக அனுப்பிவைத்திருந்தன. இதில் கடந்த ஏப்ரலில், பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தி இந்து நாளிதழின் இரண்டு செய்தியாளர்களின் விசாவைப் புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் உள்ளிட்ட மூன்று பேர் சீனாவிலிருந்து வெளியேறிவிட்டனர். சீனா அதிபர் - பிரதமர் மோடி `பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' நிறுவனத்தின் செய்தியாளர் மட்டும் அங்கேயே இருந்தார். இதற்கிடையே, இறுதியாக சீனாவிலிருந்த கடைசி இந்திய செய்தியாளரையும், இந்த மாத இறுதிக்குள் சீனாவிலிருந்து வெளியேறுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக, ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``இந்தியாவில் ஒரு சீன செய்தியாளர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். அவரும் தன்னுடைய விசா புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் இரண்டு செய்தியாளர்களுக்கான விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு மறுத்துவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார். சீன செய்தியாளர்கள் இந்தியாவில் எந்தவிதப் பிரச்னையும் இன்றி செயல்படும் நிலையில், சீனாவிலுள்ள இந்திய செய்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதனால் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. 2020-ல் இந்தியா-சீனா எல்லையில் நடந்த சண்டையின் காரணமாக சீனா - இந்தியாவுக்கிடையேயான உறவு பதற்றமாகவே தொடர்கிறது. ஆனால், சீன அரசு அந்தப் பிரச்னையைப் புறந்தள்ளி, வர்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க முயன்றாலும், எல்லைப் பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியா - சீனாவுக்கிடையேயான உறவு இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், சீனாவிலிருந்து இந்திய செய்தியாளர்கள் வெளியேற்றப்படும் விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.Messi வருகையால் களைகட்டிய சீனா; மெஸ்ஸியின் பெயரில் நடக்கும் பண மோசடிகள்! பின்னணி என்ன?
http://dlvr.it/SqYbyP

Russia - Ukraine War : புதினுடன் கைகோக்கும் கிம் ஜாங் உன்! - சர்வதேச அரசியலில் புது பரபரப்பு

நேட்டோ படையில் இணைவதற்கு உக்ரைன் முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், "உக்ரைன் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்.ரஷ்ய அதிபர் புதின் ஆனால் உக்ரைன் தனது முடிவிலிருந்து பிவாங்கவில்லை. இதையடுத்து அந்த நாட்டின்மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி, ரஷ்ய ராணுவத்துக்கு உத்தரவிட்டார், அதிபர் புதின். இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கி, ஓராண்டுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. இதனால் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபகாலமாக உக்ரைன்மீதான தனது தாக்குதலை தீவிரமாக்கியிருக்கிறது, ரஷ்யா. இந்த நிலையில், புதினுடன் கைகோப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிறது.உக்ரைன் இது குறித்து ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவுக்கு முழு ஆதரவு தருவதோடு, முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். நீதி வெற்றி பெறுவது உறுதி. ரஷ்ய மக்கள் வெற்றி வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள். ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்துக்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் கைகோக்கிறேன். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு எங்கள் நாட்டின் முழு ஆதரவை வழங்குவோம்.ரஷ்ய அதிபர் புதின் வட கொரிய மக்கள், ஏகாதிபத்தியம் மற்றும் தன்னிச்சையான தன்மைக்கு எதிராக தங்கள் நாட்டின் இறையாண்மை, உரிமைகள், வளர்ச்சி மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான புனித நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதை செயல்படுத்துவதற்கான அவர்களின் முழுப் போராட்டத்தின் வழியாக, ரஷ்ய மக்களுடன் ஒற்றுமையாக இருந்து, அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.'ஜி ஜின்பிங் - புதின் சந்திப்பு' உக்ரைன் போரில் சீனாவின் நிலைப்பாடு மாறுகிறதா?!
http://dlvr.it/SqXjbr

Sunday, 11 June 2023

Messi வருகையால் களைகட்டிய சீனா; மெஸ்ஸியின் பெயரில் நடக்கும் பண மோசடிகள்! பின்னணி என்ன?

2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி ஜூன் 15ம் தேதி வியாழக் கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான கால்பந்துப் போட்டியில் விளையாடவிருக்கிறது. இப்போட்டி சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள மிகப்பெரிய கால்பந்து ஸ்டேடியமான 'வொர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில்' நடைபெறுகிறது. இதனால், 68,000பேர் வரை அமரும் வகையில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் டிக்கெட் விலைகள் பல மடங்காக உயர்ந்துவருகிறது. இருப்பினும், அர்ஜென்டினா நாயகன் மெஸ்ஸி விளையாடுவதைக் காண ஏரளாமான ரசிகர்கள் போட்டிப்போட்டு மேட்சுக்கான டிக்கெட்டுகளை வாங்கிய வண்ணம் இருக்கின்றனர். மேலும், மெஸ்ஸியின் வருகையால் அந்நகரமே ரசிகர்களின் வெள்ளத்தில் விழாக் கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் 'மெஸ்ஸி...மெஸ்ஸி' என ஆரவாரமிட்டு உற்சாகத்துடன் மெஸ்ஸியை வரவேற்று வருகின்றனர். Lionel Messi went to Beijing, China and this reception is crazyyyyyy! This man doesn't really know he's LIONEL MESSI pic.twitter.com/dUM8Kmzzk2— (@ChaaliiyKay) June 10, 2023 இந்நிலையில் பெய்ஜிங் நகரம் முழுவதும் மெஸ்ஸியின் டி-சர்ட், உணவகங்களில் மெஸ்ஸியின் பெயரில் ஆஃபர்கள் என மெஸ்ஸியின் பெயரை வைத்து பெரிய மார்க்கெட்டிங் விற்பனைகள் களைகட்டியுள்ளது. இதற்கிடையில் மெஸ்ஸியை நேரில் சந்திக்க வைப்பதாகப் பல பொய்யான விளம்பரங்கள் அந்நகரை ஆட்கொண்டுள்ளது. அவற்றில், மெஸ்ஸியுடன் சேர்ந்து உணவருந்த 42,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 34 லட்சம்) எனும் போலியான விளம்பரம் ஒன்று தீயாய் பரவி வருகிறது. மேலும், '50 மில்லியன் யுவான் பணம் செலுத்தினால் மெஸ்ஸி உங்கள் கடைகளின் அல்லது பிராண்ட்களின் பொருட்களை பற்றி விளம்பரப்படுத்தி பேசுவார்' என்றும் 'மெஸ்ஸி சந்தித்து அவருடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பை பெற $1122(சுமார் ரூ.92000)' என்றும் பல போலியான விளம்பரங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களிலும், பெய்ஜிங் நகரம் முழுவதும் பரவி வருகின்றன. இதனால் பெய்ஜிங் காவல் துறை இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாந்துவிடவேண்டாம் என்றும் இதை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
http://dlvr.it/SqW8Fw

Britain-ன் முதல் பெண் தலைமை நீதிபதி | Netflix-க்கு கைகொடுத்த Restriction - உலகச் செய்திகள்

சீனா சில காலமாக கியூபாவை உளவு பார்த்ததாகவும், 2019-ல் அதன் உளவுத்துறையின் வசதிகளை மேம்படுத்தியதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பாகிஸ்தானில் கடத்திச் செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது இந்து சிறுமி, அவரின் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்திருக்கிறது. சோமாலியாவில் ஒரு ஹோட்டலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 காவலர்கள் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸில் 16 வயது சிறுமி ஒருவர், `ஸ்கார்ஃப் கேம்' எனப்படும் ஆபத்தான டிக் டாக் சவாலை முயன்று உயிரிழந்தார். இது கடந்த ஆண்டு பலரைக் கொன்ற `ப்ளாக் அவுட்' சவாலைப்போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வீட்டில் பெட்ரூம்‌, பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில், முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தது போன்ற 6 புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. கனடாவில் காட்டுத்தீயால் எழுந்திருக்கும் புகை, நார்வே வரை பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். 75 மில்லியன் மக்கள் காற்றின் தரம் குறைந்திருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரிட்டனில் 755 ஆண்டுகள் ஆண்கள் மட்டுமே வகித்து வந்த தலைமை நீதிபதி பதவிக்கு முதன் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இறுதி பட்டியலில் டேம் விக்டோரியா ஷார்ப், மூத்த நீதிபதியாகவும், டேம் சூ கார் என்பவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டான். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். லித்துவேனியா (lithuania) நாட்டில், பாரம்பர்ய பீட்ரூட் உணவான "பிங்க் சூப்" (Saltibarsciai) திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் அந்நாட்டின் பலபகுதிகள் பிங்க் நிறத்தில் மாறின. நெட்ஃபிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்ட் பகிர்வதில் விதித்த கட்டுப்பாட்டுக்குப் பின்னர், அமெரிக்காவில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/SqVZLG

Friday, 9 June 2023

இனச்சேர்க்கை நிகழாமலே முட்டையிட்ட முதலை... அமெரிக்காவில் அதிசயம்!

16 வருடங்கள் தனித்து வாழ்ந்த அமெரிக்க முதலை ஒன்று எவ்வித சேர்க்கையுமின்றி முட்டையிட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 2002-ல் 2 வயதான அமெரிக்க முதலை ஒன்று கைப்பற்றப்பட்டு கோஸ்டா ரிகாவில் உள்ள பார்க் ரெப்டிலாண்டியா (Parque Reptilandia) என்ற ஊர்வன பூங்காவில் தனித்து விடப்பட்டது. அதன்பின் 16 வருடங்கள் இம்முதலைத் தனிமையிலேயே இருந்தது. ஆனால், 2018-ல் முதலை 14 முட்டைகளை இட்டது. இனப்பெருக்கம் புலிகள் பாதுகாப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா? |காடும் கற்பனைகளும்! - 8 பொதுவாகவே விலங்கினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த பின் கருவுறுதல் நிகழும். ஆனால், எவ்வித சேர்க்கையுமின்றி விலங்கினங்கள் கருவுறுதலை ஆராய்ச்சியாளர்கள் `Virgin Births’ என்று அழைக்கின்றனர். ஏற்கனவே பறவைகள், சுறாக்கள், பல்லிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பாம்புகள் சேர்க்கையின்றி கருவுறுதலை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இதுவரையில் முதலைகளில் இது போன்று நடந்ததில்லை.  முதலையின் 14 முட்டைகளில் 7 முட்டைகளை இன்குபேஷன் முறையில் அங்குள்ள பராமரிப்பாளர்கள் பாதுகாத்தனர். துரதிர்ஷ்டவசமாக அவை குஞ்சு பொறிக்கவில்லை. அதனால் மூன்று மாதங்களுக்குப் பின் முட்டைகளைத் திறந்து பார்த்தபோது, 6 முட்டைகளில் என்னெவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் ஒரு முட்டையில் மட்டும், முழுமையாக உருவாகியும், உயிராக முடியாத கரு இருந்தது. மரபணு பகுப்பாய்வில் இறந்த குட்டி முதலை, தாய்க்கு ஒத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலையில் சேர்க்கையின்றி கருவுறுதல் நிகழ்ந்திருப்பதால், டைனோசர்களின் இனப்பெருக்க திறன்கள் மீது ஆய்வு நடத்த இச்சம்பவம் வழிவகுத்துள்ளது. டைனோசர் குட்டிகள் கணவனின் காலைக் கவ்விய முதலை; ஒற்றைப் பிரம்புடன் சிங்கப்பெண்ணாக மாறிய மனைவி - நடந்தது என்ன? `முதலைகளின் முட்டைகள் பொறிக்காமல் போனது ஏமாற்றம் தான். இது அசாதாரணமானது அல்ல. ஒருவேளை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வந்திருந்தாலும், அவை பாதிப்புக்குள்ளாகி வளர இயலாமல் போயிருக்கும்’ என வாரன் பூத் என்ற நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.   இந்த ஆராய்ச்சி குறித்த விளக்கங்கள் `Biology Letters’ என்ற இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SqQDb3

பைடனைச் சந்திக்கும் பிரிட்டன் பிரதமர்| பிரபல அமெரிக்க எழுத்தாளருக்கு வெண்கலச் சிலை- உலகச் செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கவிருக்கிறார். உக்ரைன் போர் குறித்து விவாதிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். அமெரிக்காவின் ரிச்மான்டிலுள்ள (Richmond) ஒரு பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இதில் ஒரு பெண் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்தச் சூழலில் உக்ரைனின் முக்கிய அணையான ககோவ்கா அணைமீது தாக்குதல் நடத்தப்பட்டு, அந்த அணையின் ஒரு பகுதி உடைந்ததில், கார்பன் நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதில் பலர் வீடுகளைவிட்டு வெளியேறிவருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவுசெய்திருக்கிறது பாகிஸ்தான் காவல்துறை. அப்துர் ராஸக் என்ற வழக்கறிஞரின் கொலையில் அவருக்குத் தொடர்புடையதாகக் கூறி அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. உலக வங்கி எதிர்வரும் நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதாரம் சுமார் 2 சதவிகிதம் வளரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. அடுத்த வாரம் Junteenth Concert என்ற நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நிகழவிருக்கிறது. இது அதிபர் பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் முன்னிலையில் நடக்கும். புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான Willa Cather-ன் வெண்கலச் சிலை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் திறக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SqPL08

Thursday, 8 June 2023

அத்துமீறி நுழைந்த 37 சீனப் போர் விமானங்கள்; தைவானில் மீண்டும் போர்ப் பதற்றம்!

இரண்டாம் உலகப்போரின்போது தைவான் சீனாவிலிருந்து தனியே பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சீனா, தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தைவானின் மற்ற நாடுகளுடனான நட்புறவு நடவடிக்கையையும் சீனா கண்டித்துவருகிறது. இதை எதிர்க்கும்விதமாக தைவானைச் சுற்றி சீனா ராணுவப்படைகளை நிலைநிறுத்தி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீனா - தைவான் இந்த நிலையில் சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சன் லி-ஃபாங், ``(தைவான் நேரப்படி) காலை 5 மணி முதல் சுமார் 6 மணி நேரத்துக்குள் (மதியம் 11 மணி வரை) மொத்தம் 37 சீன ராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்திருக்கின்றன. தைவானின் ராணுவம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறது. ரோந்து விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள் பதில் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. சோதனைக்குப் பிறகு ஊடுருவல்கள் தொடர்கின்றனவா என்பது இன்னும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார். சீனாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் தைவானில் மீண்டும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!
http://dlvr.it/SqM5xT

Wednesday, 7 June 2023

உலகின் மிகப் பழைமையான புதைகுழி கண்டெடுப்பு | Hypersonic ஏவுகணையை உருவாக்கிய இரான் - உலகச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவால் இரண்டு ஆண்டுகளில் பல மனிதர்கள் உயிரிழக்கக்கூடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனகின் ஆலோசகர் மட் க்ளிப்போர்ட் எச்சரித்திருக்கிறார். உக்ரைனின் ககோவ்கா அணை மீதான தாக்குதலால் டினிப்ரோ ஆற்றில் 150 டன் இன்ஜின் எண்ணெய் கசிந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. உலகின் மிகப் பழைமையான கி.மு 200,000-க்கு முந்தைய புதைகுழி, ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மாஸ்கோவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உளவு பார்த்த, முன்னாள் FBI உளவு அதிகாரியான ராபர்ட் ஹான்சன், தன்னுடைய 79 வயதில் கொலராடோவிலுள்ள சிறையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஒலியைவிட 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கியிருப்பதாக இரான் தெரிவித்திருக்கிறது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பதற்றம் நீடித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் கரோலினா மூச்சோவாவை (Karolina Muchova) எதிர்கொள்கிறார் ஆர்யனா சபலென்கா (Aryna Sabalenka). பிரிட்டனில் சீன தூதரகத்தின் கீழ் செயல்படும் அதிகாரபூர்வமற்ற காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்தாட் (Tom Tugendhat) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். துருக்கி அதிபர் தேர்தலில் வென்று, மூன்றாவது முறையாக அந்த நாட்டின் அதிபராகப் பதவியேற்றார் எர்டோகன். இந்த நிலையில், துருக்கி அதிபர் போஸ்டருக்கு `ஹிட்லர் மீசை' வரைந்த 16 வயது சிறுவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரோன்களின் ஆரம்ப சோதனைகளை இஸ்ரேல் நடத்தத் தொடங்கியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/SqJbkP

Tuesday, 6 June 2023

இந்தியா டூ அமெரிக்கா: ரஷ்யாவில் தரையிறங்கிய விமானம் | `கூர்ந்து கவனித்து வருகிறோம்’ - அமெரிக்கா

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர்இந்தியா AI173 விமானம் பறந்துக்கொண்டிருக்கும் போது இயந்திரக்கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, விமானம் நேற்று ரஷ்யாவில் உள்ள மகதானுக்கு திருப்பி விடப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.ஏர்இந்தியா விமானம் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், "இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது அமெரிக்காவிற்குப் புறப்பட்ட விமானம். எனவே, அதில் அமெரிக்கக் குடிமக்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏர் இந்தியா மற்றொரு மாற்று விமானத்தை அனுப்புவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பயணிகள் பாதுகாப்பாக அவர்களின் இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால், இதைப் பற்றி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.துருக்கி அதிபராக Erdogan மீண்டும் தேர்வு | சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம் - உலகச் செய்திகள்
http://dlvr.it/SqH7j4

Online Game Addiction 'ஐந்து ரூபாய்தான் மிச்சம்'- குடும்ப சேமிப்பை நான்கே மாதங்களில் தீர்த்த சிறுமி

இன்றைய காலகட்டங்களில் ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களை ஆட்டுவிக்கிறது. அதிலும், ஆன்லைன் கேம் அடிக்‌ஷன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் கேம் அடிக்‌ஷனால், பண இழப்புகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அரசுத் தரப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆன்லைன் கேம் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், சீனாவில் 13 வயது சிறுமி, ஆன்லைன் கேம் அடிக்‌ஷனில் சிக்கி நான்கே மாதங்களில் தனது குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் தீர்த்திருக்கிறார்.ஆன்லைன் கேம் இது குறித்து வெளியான தகவலின்படி, சம்பந்தப்பட்ட சிறுமி மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியொன்றில் படித்துவருகிறார். இவ்வாறிருக்க ஒருநாள் பள்ளியில் சிறுமி அதிக நேரம் செல்போனில் மூழ்கியிருப்பதைக் கவனித்த ஆசிரியர், சிறுமி ஆன்லைன் கேம் விளையாடுவதாக சிறுமியின் தாயிடம் எடுத்துச்சொல்லி எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் தன்னுடைய வங்கிக் கணக்கைப் பார்த்தபோது வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்திருக்கிறது. சேமித்துவைத்திருந்த சுமார் ரூ.52 லட்சம் காணவில்லை. பின்னர்தான் தெரியவருகிறது சிறுமி தன்னுடைய தாயின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைன் கேமில் பணத்தைச் செலவழித்திருக்கிறார் என்று. இது குறித்து சிறுமியின் தந்தை சிறுமியிடம் கேட்டபோது, ஆன்லைன் கேம்களை வாங்குவதற்காக ரூ.38 லட்சமும், தனது தோழிகளுக்கு கேம்களை வாங்குவதற்காக ரூ.11 லட்சமும் செலவிட்டதாகச் சிறுமி ஒப்புக்கொண்டார். மேலும், வீட்டிலிருந்த டெபிட் கார்டை தனது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பணத்தைச் செலவிட்டதாகவும் சிறுமி கூறினார். ஆன்லைன் கேம் அதோடு வங்கியின் தரப்பில், சிறுமி தன்னுடைய ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்கிவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, இணையதளவாசிகள் பலரும் `இது சிறுமியின் தவறு, இதைக்கூட கவனிக்காமல் விட்டது பெற்றோரின் தவறு' என்று பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். 2022-ம் ஆண்டு மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) மேற்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் அடிக்‌ஷன் குறித்த பகுப்பாய்வின்படி, பெரும்பாலானோர் சீனாவிலும், அதற்கடுத்தடுத்த இடங்களில் சவுதி அரேபியா, மலேசியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் ஆன்லைன் கேம்ஸில் ஆண்களைவிட அதிகநேரம் செலவிடும் பெண்கள்... ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்!
http://dlvr.it/SqFSk9

ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் |பக்கவாதத்தால் காலமான பிரபலம் - உலகச் செய்திகள்

குவான்டனோமோ பே சிறையில் சட்டவிரோதமாகப் பிடிபட்டிருக்கும் சவுதியைச் சேர்ந்த Abd al-Rahim al-Nashiri என்ற கைதி தற்போது மரண தண்டனை எதிர்கொள்ளவிருக்கிறார். இதற்காக ஐநா சபை அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடாவின் ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்த மரம் நபர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோத புலம்பெயர்வு தடுப்புத் திட்டம் பலன் தருவதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். சட்டவிரோத புலம்பெயர்வோர், சிறு படகுகளில் இங்கிலாந்திற்கு வருவது 20 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரரான ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimovic) (41 வயது) கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜாக் லீச்க்கு (Jack Leach) உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிக் கொண்டார். ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதை "It happened - first day in the books!" என்று அவர் பதிவிட்டிருக்கிறார். `Bling Empire' என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த Anna Shay என்ற பிரபலம், தனது 62-ம் வயதில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SqDyw9

Monday, 5 June 2023

`வெறும் 34 லட்சம் ரூபாய்தாங்க!' - பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்... விளம்பரம் இணையத்தில் படுவைரல்!

பள்ளி மாணவர்களின் குறும்புகளுக்கு அளவே கிடையாது. அவர்கள் விளையாட்டுத்தனமாகச் செய்பவை, பல நேரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிடுவதுண்டு. அந்த வகையில், அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் சிலர், தங்களின் பள்ளியை 34 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.Representational Image அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள (Maryland) மீட் உயர்நிலைப் பள்ளி (Meade High Schoo) மாணவர்கள் சிலர், ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளியை விற்கும்விதமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``இதுவொரு நல்ல பகுதிநேரச் சிறைச்சாலை. மொத்தமாக இதிலிருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்னை இருக்கிறது. அதேசமயம், இங்கு நல்ல சமையலறை, உணவருந்தும் அறை உட்பட தனியாகக் கூடைப்பந்து அரங்கும் இருக்கிறது. மேலும், இங்கு உங்களின் சொந்தக்காரர்களான எலிகள், பூச்சிகள் உங்களை அலறவைக்கும்" என்று குறிப்பிட்டு, `இதன் விலை 42,069 டாலர்' அதாவது இந்திய மதிப்பில் 34 லட்சம் ரூபாய் என மாணவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பள்ளி மாணவர்களின் இத்தகைய குறும்புச் செயலுக்கு இணையதளவாசிகள் பலரும் பதில் கருத்தைப் பதிவிட்டுவருகின்றனர். In what appears to be a senior prank, someone has posted Meade High School on Zillow for the bargain price of $42,069. https://t.co/eyGQwzdisC pic.twitter.com/TXQuXtmgDu— Brooks DuBose (@b3dubose) May 24, 2023 அதில் ஒருவர், ``இதுவொரு புத்திசாலித்தனமான, படைப்பாற்றல் மிக்க நகைச்சுவையான பதிவு. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார். இணையதளவாசிகள் மட்டுமல்லாமல், அன்னே அருண்டெல் கவுன்ட்டி பப்ளிக் ஸ்கூல்ஸின் (Anne Arundel County Public Schools) செய்தித் தொடர்பாளரும், ``இது மிகவும் சிரிப்பூட்டக்கூடிய ஆக்கபூர்வமான விளம்பரம். ஆனால் வியக்கத்தக்க வசதிகளுடன்கூடிய இதன் மதிப்பை மிகவும் குறைத்து மதிப்பிட்டதால் நாங்கள் திகைக்கிறோம்" என்றார்.`அப்படி பேசுனதுக்கு பலன் கிடைச்சிடுச்சு; பசங்க இப்போ ஸ்கூலுக்கு போறாங்க!' - வைரல் போலீஸ் பரமசிவம்
http://dlvr.it/Sq9x3g

Saturday, 3 June 2023

Tamil News Today Live : ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்!

ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்! ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில், இதுவரை 290 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 400 பேர் வரை தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் ஏற்பாட்டின்பேரில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகப் பயணிகள் 137 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வரவேற்று, நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், ``ஒடிசாவிலிருந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் சென்னைக்கு வந்து சேரும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகளைச் செய்தோம். இங்கே அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கைகளையும், சிகிச்சையளிக்க மருத்துவர்களையும் தயார் செய்தோம். அதன்படி சிறப்பு ரயில் தற்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் வந்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை 137. இதில் குறிப்பாக 8 பேர் காயமடைந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை" என்றார்.
http://dlvr.it/Sq6Y8F