அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூட்டாக அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்புக்கும், ரஷ்யாவுக்கும் எப்போதும் முட்டல், மோதலாகவே இருக்கிறது. ரஷ்யா, தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முன்வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது போர்த்தொடுக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பின் நாடுகள் சில ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி போன்றவற்றை அளித்துவருகிறது.நேட்டோ
இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ``சமீபத்திய நேட்டோ உச்சி மாநாடு மேற்கத்திய கூட்டணி பனிப்போர் திட்டங்களுக்குத் திரும்புவதைக் காட்டுகிறது. ஆனால், எல்லா யுத்திகளையும் பயன்படுத்தி அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கத் தயார்" என நேற்று (ஜூன் 12) தெரிவித்திருக்கிறது.
முன்னதாக லிதுவேனியாவில் நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குப் புதிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அளித்தது. அதோடு, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துருக்கி அதிபர், தன்னுடைய ஆட்சேபனைகளைக் கைவிட்டதையடுத்து, ஸ்வீடனின் புதிய வரவுடன் நேட்டோ உச்சி மாநாடு நடந்து முடிந்தது. இத்தகைய சூழலில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
அந்த அறிக்கையில், ``நேட்டோ உச்சி மாநாட்டின் தீர்மானங்களைக் கவனத்தில் கொண்டோம். ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான சவால்கள், அச்சுறுத்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எங்களின் யுத்திகள் மூலம் சரியான நேரத்தில் பதிலளிப்போம். இந்த உச்சி மாநாடானது, உலகின் புதிய புவிசார் அரசியல் சூழ்நிலைக்கு நேட்டோ தங்களைத் தகவமைத்துக்கொள்ள முடியாததை வெளிப்படுத்துகிறது. அதோடு நேட்டோ தங்களின் படைகளைப் பயன்படுத்துவதற்கான வரம்பைத் தொடர்ந்து குறைத்து வருவதோடு, அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களை அதிகப்படுத்துகிறது.
மேலும், ரஷ்யா, உக்ரைனுக்கிடையிலான மோதலை முடிந்தவரை நீட்டிப்பதற்காக, நவீன மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான புதிய தீர்மானங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். எனவே நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவுகளை விடவும் அதிகமாக, ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்பைth தொடர்ந்து பலப்படுத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினை, `நிலத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் மோகம் கொண்டவர்' எனச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மு. அவந்திகாரஷ்யா: 24 மணி நேரத்தில் பின்வாங்கிய WAGNER படை... பின்னணி இதுதான்! - பலவீனமடைகிறாரா அதிபர் புதின்?!
http://dlvr.it/Ss6qYy
Thursday, 13 July 2023
Home »
» ``நேட்டோ உச்சி மாநாட்டைக் கவனித்தோம்... அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கத் தயார்" - ரஷ்யா







0 comments:
Post a Comment