சீனாவில் தாயார் ஒருவர் தன்னுடைய மகளின் காதலனிடம், `என்னுடைய மகளை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமானால், ரூ.33 லட்சத்தை வரதட்சணையாகச் செலுத்த வேண்டும்' என்று கூறியிருக்கும் நிகழ்வு பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டு அரசாங்கம், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக திருமணங்களில் கைலி (Caili) அல்லது நிச்சயதார்த்த பரிசு (Betrothal Gift) என்றழைக்கப்படும் நடைமுறையை ஊக்குவித்துவருகிறது. அதாவது கைலி எனும் இந்தப் பாரம்பர்ய நடைமுறையில், மணமகன் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு `மணமகள் விலை' என்ற பெயரில் வரதட்சணை கொடுக்க வேண்டும்.திருமணம் - வரதட்சணை
அந்த வகையில் தற்போது இந்த விவகாரத்தில், மணமகளின் தாயார் மணமகனிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். இது தொடர்பாக இதில் சம்பந்தப்பட்ட இளைஞன் அரசிடம் புகாரளித்ததையடுத்து, இந்தச் சம்பவம் தற்போது வெளியில் வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, லியு என்ற குடும்பப் பெயர்கொண்ட அந்த இளைஞன் கடந்த ஜூன் 15 அன்று சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள (Gansu Province) ஜென்யுவான் கவுன்ட்டியின் (Zhenyuan County) மேயரிடம் புகாரளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ``நானும் என்னுடைய காதலியும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிந்த காதலியின் தாயார், திருமணத்துக்கு உள்ளூர் வழக்கப்படி மணமகளின் குறைந்தபட்ச விலையான 2,88,000 யுவானைத் (ரூ.33 லட்சம்) தர வேண்டும் என்றார். அதிலும் வீடு, கார்கூட எதுவும் குறிப்பிடவில்லை என்கிறார். ஆனால், எங்கள் கவுன்ட்டியில் மணமகளின் விலை 1,20,000 யுவான் (ரூ.13.74 லட்சம்) மட்டுமே. இருப்பினும், நானும் என் காதலியும் ஒருவருக்கொருவர் விரும்புவதால், எங்களின் குடும்பத்தால் அவ்வளவு வரதட்சணை தர முடியாது என்று கூற தைரியம் வரவில்லை" என்று குறிப்பிட்டு, இதில் தகுந்த நடவடிக்கை எடுத்து சமாதானப்படுத்துமாறு அந்த நபர் குறிப்பிட்டிருக்கிறார்.திருமணம்
பின்னர் இந்தப் புகார் குறித்து பதிலளித்த உள்ளூர் அரசு நிர்வாகம், `கவுன்ட்டியில் மணமகளின் விலை குறைந்தவண்ணம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தது. இதுவொருபுறமிருக்க, இந்தப் புகார் சமூக வலைதளங்களில் பரவியபோது, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் அனுதாபங்களுக்கு பதில், பலரிடமிருந்து விமர்சனத்தையே பெற்றார். அதிலும் இணையதளவாசி ஒருவர், `உங்களால் மணமகள் விலைக்கு உடன்பட முடியவில்லையென்றால், அவரைத் திருமணம் செய்துகொள்ளாதீர். விலையே கேட்காத மணமகள் ஒருவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
திருமண சடங்குகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும்கூட, வரதட்சணை என்பது நிச்சயம் ஏதாவது ஒருபக்கம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றே. அவ்வாறிருக்க மணமகன் அல்லது மணமகள் என எந்தத் தரப்பினராக இருந்தாலும் வரதட்சணை என்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியதே ஆகும்.தெலங்கானா: அரசின் `கல்யாண லக்ஷ்மி திட்டம்' - வரதட்சணை கொடுமையாக மாறும் அவலம்!
http://dlvr.it/Ss1gHR
Tuesday, 11 July 2023
Home »
» வருங்கால மருமகனிடம் ரூ.33 லட்சம் வரதட்சணை கேட்ட மணமகளின் தாயார்; அரசிடம் முறையிட்ட மணமகன்!







0 comments:
Post a Comment