உலகை உலுக்கிய கொரோனா பரவலின்போது, அமெரிக்க அரசால் `Paycheck Protection Program' (PPP) எனும் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதி உதவி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், வாடகைக்கடை நடத்தும் வியாபாரிகளுக்கு அவர்கள் நஷ்டத்திலிருந்து மீண்டு வர உதவும் வகையில், வணிக மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தப்பட்டது. சிலருக்கு வட்டியில்லாக் கடன், திரும்ப செலுத்தத் தேவையில்லாக் கடன் என நிறுவனத்தின் பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.கொரோனா வைரஸ் - அமெரிக்கா
இந்த நிலையில், அரசின் இந்த நிவாரண நிதி உதவியை மோசடியாகப் பெற்றதாக சன்ஷைன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, மம்மத் குழுமத்தின் உரிமையாளர், ஆர்.ஏ. இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எல்.கே.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர், Gulf Coast Scrap நிறுவனத்தின் உரிமையாளர், NTC 5G Metals and Sunshine உரிமையாளர் உள்ளிட்ட இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கர்கள் எனப் பல முக்கிய பெரும் நிறுவன முதலாளிகள் 14 பேர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக , அமெரிக்க அரசின் Pandemic Response Accountability Committee (PRAC) விசாரித்து வந்தது. அதில், வங்கிக் கணக்குகள், காசோலைகள், போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 53 மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய டெக்ஸாஸ் வழக்கறிஞர் லீகா சைமன், ``அரசை ஏமாற்றுவது வரி செலுத்தும் ஒவ்வொருவரையும் அவமானம் செய்வதுதான். பெரும் தொற்று பரவிக்கொண்டிருக்கும்போது, மக்களை மீட்க அரசு போராடிக்கொண்டிருக்கும்போது, அந்த சமயத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுவது வெந்தக் காயத்தில் உப்புத் தண்ணீர் ஊற்றுவதுபோல" என விமர்சித்திருக்கிறார்.அமெரிக்கா
இந்த விவகாரத்தில் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், வங்கி மோசடி மற்றும் ஃபெடரல் டெபாசிட் இன்ஷூரன்ஸ் கமிஷனுக்கு (FDIC) தவறான அறிக்கைகளை வழங்கியதற்கான குற்றச்சாட்டுகளுக்கு 30 ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.``திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்... மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" - அண்ணாமலை
http://dlvr.it/SrsXh8
Saturday, 8 July 2023
Home »
» அமெரிக்கா: 53 மில்லியன் டாலர் கோவிட் நிதி மோசடி; இந்திய வம்சாவளியினர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை







0 comments:
Post a Comment