இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க அரசு கொண்டுவந்த கடன் சீரமைப்புத் திட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமையன்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
நேட்டோ அமைப்பு, உக்ரைன் பாதிப்புகள் ஆகியவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸ்வீடன் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஜூலை 5-ம் தேதி இந்தச் சந்திப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது.
நெதர்லாந்து மன்னர் Willem-Alexander காலனித்துவ காலத்தில் தன்னுடைய நாட்டை அடிமைத்தனத்தில் ஈடுபடுத்தியதற்காக அந்த நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அந்த நாட்டில் நடக்கும் வன்முறையையடுத்து, ஜெர்மனிக்குச் செல்வதாக இருந்த திட்டத்தை அவர் ரத்துசெய்தார்.
ட்விட்டரில் பயனர்கள் ஒருநாளில் அதிகபட்சம் 6,000 ட்வீட்களை மட்டுமே பார்வையிட முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
மியான்மரில் சீன ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது ஆயுதமேந்திய குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது
சோஷியல் மீடியா செலிபிரிட்டியான கேட்டி சோரன்சென் என்பவர் தன்னுடைய குழந்தைகளை ஒரு தம்பதி கடத்த முயன்றதாகப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இதை போலீஸார் கண்டறிந்த நிலையில், அவருக்கு 90 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பால்டிமோரில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 28 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவியுடன் புதிய F-35 போர் விமானங்களை இஸ்ரேல் ராணுவம் வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/SrcMXG
Monday, 3 July 2023
Home »
» மன்னிப்புக் கேட்ட நெதர்லாந்து மன்னர் | ட்விட்டர் பயனர்களுக்கு `செக்' வைத்த மஸ்க் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment