Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Sunday, 16 April 2023

தில்லி முதல்வா் கேஜரிவாலிடம் சிபிஐ விசாரணை: ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை விசாரணைக்கு அழைத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களும், தொண்டா்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை விசாரணைக்கு அழைத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களும், தொண்டா்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி அமைச்சா்கள் செளரவ் பரத்வாஜ், அதிஷி, கைலாஷ் கெலாட், மாநிலங்களவை உறுப்பினா்கள் சந்தீப் பதக், ராகவ் சத்தா, சஞ்சய் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவா்கள் பலா் சிபிஐ தலைமை அலுவலகம் அருகே கூடினா். தில்லி மெஹ்ரெளலியில் உள்ள எம்பி சாலை, ஐஐடி மேம்பாலம் மற்றும் ஐடிஓ அருகே கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திரண்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் நரேஷ் யாதவ் ( மெஹ்ரெளலி), கா்தாா் சிங் தன்வாா் ( சத்தா்பூா்), பூபிந்தா் சிங் ஜூன் (பிஜ்வாசன்), அமானத்துல்லா கான் (ஓக்லா) உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டனா். ஆா்ச் பிஷப் சாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஐஐடி மேம்பாலத்தின் கீழ் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற எம்எல்ஏ சோம்நாத் பாா்தி கூறுகையில், ‘ஒரு முதல்வரை சிபிஐ விசாரணைக்கு அழைப்பது இதுவே முதல்முறையாகும். அவா்களிடம் எங்கள் தலைவா்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. நாட்டின் வளா்ச்சிக்காக எப்போதும் பாடுபட்ட கேஜரிவாலை பயமுறுத்த மத்திய அரசு சிபிஐயை தவறாக பயன்படுத்தி வருகிறது’ என்றாா்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Pa13EVc https://ift.tt/3NCbgWu
via IFTTT

0 comments:

Post a Comment