Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Thursday, 13 April 2023

ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: பதறிய ஜப்பான் மக்கள்; கண்டனம் தெரிவித்த அமெரிக்கா!

`அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்க நாட்டின் ராணுவத்தையும், போர் ஆயுதங்களையும் வலுப்படுத்த  வேண்டும்’ என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கொரியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில், வடகொரியா இன்று காலை  8 மணியளவில் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனையை மேற்கொண்டது.வடகொரியா இந்தச் சோதனை தொடர்பான தகவல்கள் வெளியானதுடன் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு, ஹொக்கைடோ (Hokkaido) பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள்... வெளியேறுங்கள் எனக் கூறியிருக்கிறது. பொதுமக்கள் கட்டடத்துக்கு அடியிலோ அல்லது நிலத்துக்கு அடியிலோ சென்று மறைவாக இருந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்தியது. தென்கொரிய மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது. இதனால் ஹொக்கைடோ மக்களிடம் குழப்பம் நிலவியது. ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்கக்கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. ராஜதந்திரத்தின் கதவு மூடப்படவில்லை. எனவே, உடனடியாக உங்களின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது. தென்கொரிய ராணுவ அதிகாரி, ``சமீபத்தில் வடகொரிய ராணுவ அணிவகுப்புகளில் காட்டப்பட்ட ஒரு புதிய ஆயுத அமைப்பை இந்தச் சோதனை உள்ளடக்கியதாகத் தெரிகிறது.ஏவுகணை ஏவுகணையின் பாதை, வரம்பை ராணுவம் ஆய்வுசெய்து வருகிறது. மேலும், இது திட எரிபொருள் ஏவுகணையாக இருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோர காவல் படை, "வடகொரியா ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே இருக்கும் கடலில் விழுந்திருக்கக்கூடும். இது குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.'அமெரிக்கா - தென்கொரியா போர் ஒத்திகை' - ஏவுகணையை ஏவிய வடகொரியா; என்னதான் நடக்கிறது?!
http://dlvr.it/SmQlVg

0 comments:

Post a Comment