உத்தரப்பிரதேச மாநிலம் ஜலவுன் பகுதியில், பைக்கில் வந்த இரண்டு பேர், கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலவுன் பகுதியில், பைக்கில் வந்த இரண்டு பேர், கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதாகும் கல்லூரி மாணவி, அந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பிஏ படித்து வந்த அவர், தேர்வுக்காக ஜலவுன் வந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து நேரில் பார்த்தவர்களிடமும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரித்து வருகிறார்கள்.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Pa13EVc https://ift.tt/41tSsC9
via
IFTTT
0 comments:
Post a Comment