Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 15 April 2023

அம்மாவை பற்றி புகார் கூற பயணம்; 130 கி.மீ சைக்ளிங் செய்து பாட்டி வீட்டுக்குச் சென்ற சிறுவன்!

பொதுவாகப் பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கும்போதோ திட்டும்போதோ, அவர்களைவிடப் பெரியவர்களிடம் குழந்தைகள் போய் தஞ்சமடைவதுண்டு. அவர்களும் `விடு... குழந்தைதானே' என, அடிக்க வரும் பெற்றோரைச் சமாளிப்பதுண்டு. இந்த வேலையை அதிகம் செய்வது தாத்தாவும் பாட்டியுமாகத்தான் இருக்கும்.  இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன், 24 மணிநேரமாகத் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி 130 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இவ்வளவு வேகம், இவ்வளவு கோவம் வேறெதற்கும் இல்லை, அம்மாவுக்கும் தனக்கும் நடந்த சண்டை குறித்து, தன் பாட்டியிடம் புகார் கூறத்தான். cycle இவ்வளவு தூரம் தொடர்ந்து பயணித்ததால், சிறுவன் சோர்வடைந்திருக்கிறார். எக்ஸ்பிரஸ்வே டன்னலில் சிலர் சிறுவனின் நிலையைக் கண்டு, காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறையினர் அங்கு வந்து சிறுவனை மீட்டு காரணத்தை விசாரித்து இருக்கின்றனர். சிறுவன் அவர்களிடம், `அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வந்தது. அப்செட்டாக இருக்கிறது. அதனால் மெய்ஜியாங்கில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு அம்மாவைப் பற்றி புகார் கூறக் கிளம்பிவிட்டேன்' எனக் கூறியிருக்கிறார்.  சாலை சிக்னல்களை அடையாளமாக வைத்து சைக்கிளில் பயணித்திருக்கிறார். சில தவறான டர்ன்களில் திரும்பி வழி மாறியிருக்கிறார். இதனால் சென்ற இடத்துக்கே இரண்டு முறை செல்வது போலாகியிருக்கிறது. எனினும் ஒரு மணி நேரம் தாமதமானாலும் தன்னுடைய இலக்கை அடைந்திருக்கிறார். இரவு நேரப் பயணங்களில் தன்னுடன் கொண்டு சென்ற பிரட் மற்றும் தண்ணீரைப் பருகியிருக்கிறார். பிரட்!பாட்டி அரைத்த மருதாணி! | My Vikatan நீண்ட தூரம் பயணித்ததால் சிறுவனால் நடக்க முடியவில்லை. காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுவன், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.  தகவல் அறிந்த பின் சிறுவனின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர், காவல் நிலையத்துக்குச் சென்று சிறுவனை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.  அம்மாவைப் பற்றி புகார் அளிக்க 130 கி.மீ வரை சிறுவன் பயணித்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
http://dlvr.it/SmWdXB

0 comments:

Post a Comment