ரஷ்ய அதிபர் புதினைப் பற்றி விமர்சித்த காரா முர்சா என்ற எதிர்க்கட்சி ஆர்வலருக்கு, மாஸ்கோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
புத்த வருடப்பிறப்பை முன்னிட்டு, மியான்மர் சிறையிலிருந்து சுமார் 3,000 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தலின் ஏற்பாடுகள் தொடங்கியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தலைமையேற்பார் என்று கூறப்படுகிறது.
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் கடுமையான தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கிறது.
தெற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள அரசு சாரா பெண்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தாலிபன் அரசு மூட உத்தரவிட்டது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவால், நேற்று ஒரே நாளில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா மூர்த்தி, ரூ.500 கோடியை இழந்திருக்கிறார்.
தெற்கு இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையிலுள்ள பண்டைய கிரேக்க நகரமான பெஸ்டத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2,000 வருடங்கள் பழைமையான கிரேக்க கடவுள் ஈரோஸ்ஸின் (Eros) சிலையைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
34 வயதான அனுராக் மாலு என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். மலையேறுபவரான இவர், நேபாளின் அன்னபூரணா மலையில் ஏறும்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகையுள்ள நகரமாக மெல்போர்ன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக, முதலிடத்திலிருந்த சிட்னியைப் பின்னுக்குத் தள்ளியது மெல்போர்ன்.
அமெரிக்காவில் தவறான வீட்டுக் கதவைத் தட்டிய 16 வயது ரால்ஃப் என்ற சிறுவனை, அந்த வீட்டிலிருந்த ஆன்ட்ரூ என்ற 84 வயது நபர் சுட்டுக் கொன்றார். ரால்ஃப் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Smh9qJ
Tuesday, 18 April 2023
Home »
» கறுப்பின சிறுவன் சுட்டுக்கொலை | 2,000 ஆண்டுகள் பழைமையான கடவுள் சிலை கண்டுபிடிப்பு - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment