புத்தக பிரியர்கள் அனைவரும் சந்திக்கும் இடமாகச் சென்னை புத்தக கண்காட்சி இருக்கிறது.
2024 சென்னை புத்தகக் கண்காட்சி புதன்கிழமை 3-ம் தேதியன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. 47 -வது ஆண்டாக நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி, 21-ம் தேதி ஞாயிற்று கிழமை நிறைவடையும்.அரங்கை தொடங்கி வைக்கும், கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ்குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..? | மகிழ்ச்சி - 11
சென்னை புத்தகக் கண்காட்சி மைதானத்தில் பல அரங்குகள் இருக்க, வாசகர்களின் கவனத்தை அமெரிக்க மையத்தின் அரங்கு ஈர்த்து வருகிறது.
எண் 1-ல் அமெரிக்க மையத்தின் அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கைச் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ், ஜனவரி 5 வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார்.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மையப்படுத்தி `உங்கள் சொந்த வார்த்தைகளில் இருந்து’ (In Your Own Words) என்ற தீமில் அமெரிக்க மையத்தின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டாலில் அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் எட்டா ஹுல்ம் பற்றிய கண்காட்சி நடத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி, அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வது குறித்த விளக்க அமர்வுகள், புத்தக வாசிப்பு, சிறு குழந்தைகளுக்கான வேடிக்கை மற்றும் ஸ்டோரி டெல்லிங் வொர்க்க்ஷாப்கள் போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை புத்தகக் கண்காட்சியில் அமெரிக்க மையத்தின் அரங்கை திறந்து வைக்கும் போது பேசிய கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ், ``புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் அரங்கு, புதிய யோசனைகள், புதுமைகள் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் அனைத்து இலக்கியங்கள் மற்றும் தகவல்களை முன்னிலைப்படுத்துகிறது. அரங்கு1 லட்சம் பனை விதைகள் நடவு... அசத்திய கல்லூரி மாணவர்கள்!
'உங்கள் சொந்த வார்த்தைகளில்' என்ற கருப்பொருளில் இந்தப் பயணத்தில் முன்னோடியாக இருந்த தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் எங்கள் அரங்கில் இடம்பெற்றுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயன் பெரும்வகையில் அமெரிக்க மையத்தின் அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கைத் தவறவிடாமல் பயன்பெறுமாறு மக்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
மிஸ் பண்ணாதீங்க!
http://dlvr.it/T17PzJ
Monday, 8 January 2024
Home »
» மிஸ் பண்ணாதீங்க...
சென்னை புத்தகக் கண்காட்சியில் அமெரிக்க மையத்தின் அரங்கு!







0 comments:
Post a Comment