அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி அவா லூயிஸ். இவர் தனது டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, 3.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. அவரது பதிவில், ``நானும் எனது முன்னாள் காதலனும் ஒன்றாக வாழ்ந்தபோது, அவனது கணக்கு வழக்குகளை நாங்கள் இருவரும் கவனித்துக்கொண்டோம். அப்போது, சில நேரங்களில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பான். தவறான கணக்குகளை சமர்ப்பிப்பான். இதற்கிடையில், அவன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தான். அதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. எனவே, பிரிந்து விடுவது என முடிவெடுத்தேன்.அவா லூயிஸ்
ஆனால், எந்த தவறும் செய்யாத நான் எதற்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மனதிற்குள் புழுங்கினேன். அப்போதுதான் அவனைப் பழிவாங்க முடிவு செய்தேன். அதற்காக, வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகப் புகார் அளித்து, அவனை சிறையில் அடைக்கத் திட்டமிட்டேன். எனவே, அமெரிக்காவின் வரி ஏய்ப்பு புகாருக்கான ஐ.ஆர்.எஸ் அமைப்பைத் தொடர்புகொண்டு புகார் அளித்தேன். அதன் அடிப்படையில், அவனைக் கைதுசெய்தார்கள்.
மேலும், வெளியே தெரியாத குற்றவாளியைச் சரியாக அடையாளம் காண்பித்ததற்கு வெகுமதியாக $100,000 (ரூ.83 லட்சம்) வழங்கினார்கள். அதை வைத்துக்கொண்டு தற்போது எனது சுற்றுலாப் பயணத்தில் மகிழ்ச்சியாக நாள்களைக் கழிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே போன்ற சம்பவம் கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்தது. அதில், ஒருவர் மூன்று பெண்களைக் காதலித்தது தொடர்பான வழக்கில், மூன்று காதலிகளில் ஒருவர் இந்த வழக்கு தொடர்பாக உதவி செய்தார். அதனால், அந்தப் பெண்ணுக்கு 100,000 யுவான் (ரூ.11,67,982) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.கேங்ஸ்டரின் காதலி; என்கவுன்டர் வழக்கு... 7 ஆண்டுகள் சிறை - ஜாமீனில் வந்த பெண் மாடல் நண்பரால் கொலை
http://dlvr.it/T0yBZH
Thursday, 4 January 2024
Home »
» முன்னாள் காதலனைப் பழிவாங்கிய காதலி; ரூ.83 லட்சத்தை வெகுமதியாக அளித்த ஐ.ஆர்.எஸ் அமைப்பு- காரணம் என்ன?







0 comments:
Post a Comment