அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புரூக்ளின் பகுதியில் 6 குழந்தைகளுடன் ஒரு தம்பதி இரண்டாவது மாடியிலிருந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் திடீரென வீடு தீபற்றியது. உடனே தம்பதிகள் குழந்தைகளுடன் தப்பித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் அந்தக் குடும்பத்தின் பொருள்கள் சேதமடைந்தது. இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த காவல்துறை, அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்தது.காவல்துறை
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள்,"இந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை சோதித்ததில் ஒரு முதியவர் வந்து வீட்டுக்குத் தீ வைத்தது பதிவாகியிருக்கிறது. அதை ஆய்வு செய்ததில் வீட்டு உரிமையாளர் ரபிகுல் இஸ்லாம்(66) என்பது உறுதியானது. அதன் அடிப்படையில் கைது செய்தோம். ஏன் தீ வைத்தார் என விசாரித்ததில், அந்த வீட்டில் குடியிருந்த தம்பதி கடந்த 6 மாதமாக வாடகைத் தரவில்லை. மேலும், வீட்டை காலி செய்யக் கூறியும் மறுத்து எதிர்வாதம் செய்திருக்கிறார்கள்.
இதனால், விரக்தியடைந்த முதியவர் வீட்டுக்குத் தீ வைத்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு முன்னாலேயே இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிடுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வாழ்ந்து காட்டணும்னு சொன்னான்... வெட்டி வீசிட்டாங்க... - காதல் ஜோடி கொலை... தூத்துக்குடி கொடூரம்!
http://dlvr.it/Syb11q
Wednesday, 8 November 2023
Home »
» 6 மாத வாடகை பாக்கி; வீட்டை காலிசெய்ய மறுத்த குடும்பம் - 6 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்த முதியவர்







0 comments:
Post a Comment