Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 January 2024

லடாக்கில் அத்துமீறிய சீன ராணுவம்; தடுத்து நிறுத்தியவர்களை, எதிர்த்து நின்ற ஆடு மேய்ப்பாளர்கள்!

லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ( Line of Actual Control - LAC ) அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இந்தியர்களை, சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்திய நிகழ்வு, சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. ஜனவரி 2-ம் தேதி லடாக்கில் உள்ள நியோமா தொகுதிக்குட்பட்ட காக்ஜங்கில் ரோந்துப் புள்ளிகள் (PPs) 35, 36-க்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.லடாக்

இந்தச் சம்பவத்தின்போது, அங்கிருந்த உள்ளூர்வாசிகளால் எடுக்கப்பட்ட வீடியோவை, லடாக்கின் சுசூல் கிராம கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின், தனது X சமுக வலைதளப் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், `ஜீப்பில் வந்த சீன ராணுவத்தினர் ஏழெட்டு பேர், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களிடம் ராணுவத்தினர் பேசிக்கொண்டே இருக்கும்போதே, அவர்களில் சிலர் அதை வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் பேசிய பிறகு, ஆடுமேய்ப்பாளர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.'

நல்லவேளையாக, அந்த சமயத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும், இந்த வீடியோவைப் பதிவிட்ட கொன்சோக் ஸ்டான்சின், ``இத்தகைய வலுவான சிவில் - ராணுவ உறவுகளுக்காகவும், எல்லைப் பகுதி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும் மற்றொரு பதிவில், ``தாங்கள் தடுத்து நிறுத்தும் பகுதி எங்களின் நாடோடிகளின் மேய்ச்சல் நிலம் என்று சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் (PLA) முன்பு நம் உள்ளூர் மக்கள் எப்படி தங்கள் துணிச்சலைக் காட்டுகிறார்கள் என்பதைப் பாருங்கள். எப்போதும், நம் மண்ணைக் காத்து தேசத்தின் இரண்டாவது காவல் படையாக நிற்கும் நம் நாடோடிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

It is heartening to see the positive impact made by @firefurycorps_IA
in Border areas of Eastern Ladakh in facilitating the graziers & nomads to assert their rights in traditional grazing grounds along the north bank of Pangong.
I would like to thank #IndianArmy for such strong… pic.twitter.com/yNIBatPRKE— Konchok Stanzin (@kstanzinladakh) January 30, 2024

முன்னதாக, இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜனவரி 12-ம் தேதி கிராம சர்பஞ்ச், துணைப் பிரிவு மாஜிஸ்ட்ரேட், இந்திய ராணுவம், இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) அதிகாரிகள் ஆகியோர் மேய்ச்சல் இடத்தைப் பார்வையிட்டிருக்கின்றனர். இது குறித்து ஊடகத்திடம் பேசிய நியோமா கவுன்சிலர் இஷே ஸ்பால்சாங், ``இந்தப் பகுதி கால்நடைகளின் குளிர்கால மேய்ச்சலுக்கு அவசியமான ஒன்று.

`Indian graziers were stopped by #Chinese soldiers in Kakjung area of #Ladakh on January 2. The graziers confronted the Chinese, threw rocks at them.' - says Hindu News Outlet#India #Indiachina #China #faceoff #Ladakh pic.twitter.com/Zljek88KMk— Se.Balajee (@Se_Balajee) January 31, 2024




இதற்கு முன் 2019-ல், சீனர்கள் நம் மேய்ச்சல்காரர்களைத் தடுக்க முயன்றனர். அதன் பின்னர், நாங்கள் எங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்த கூடாரங்களை அமைத்தோம். இந்த இடத்திலிருந்து 5 முதல் 7 கி.மீ தொலைவில்தான் ராணுவப் பிரிவு இருக்கிறது. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அந்தப் பகுதிக்கு வரவில்லை." என்றார்.

சமீபகாலமாக லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.``பிற நாடுகளிடமிருந்து ஒரு இன்ச் நிலப்பரப்பைக்கூட சீனா ஆக்கிரமிப்பு செய்ததில்லை” - ஜி ஜின்பிங்


http://dlvr.it/T276SB

Tuesday, 30 January 2024

Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீடு பட்டியல் வெளியீடு... இந்தியாவின் நிலை என்ன?

உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால் 1993-ல் நிறுவப்பட்ட அமைப்பு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (TI). இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து, ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆய்வுக்காக, உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட 13 தரவு மூலங்களைப் பயன்படுத்தி, தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது.உலக நாடுகள்

அதன் அடிப்படையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த அமைப்பு சமர்ப்பித்திருக்கிறது. 100 மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அதில் அதிக மதிப்பெண் எடுக்கும் நாடுகளின்படி தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது. இந்த ஆண்டு180 நாடுகள் இந்தப் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

அதில், 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைத் தக்கவைத்திருக்கின்றன. அமெரிக்கா 69 மதிப்பெண்கள் பெற்று 24-வது இடத்தையும், 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 85-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த முறை 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது.இந்தியா

இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும், இந்த அறிக்கையில், 180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்குக் கீழே மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.

அயர்லாந்து, தென் கொரியா, மாலத்தீவு, வியட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகள் மட்டுமே தங்கள் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற அதிக மதிப்பெண் பெற்ற ஜனநாயக நாடுகள்கூட, இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் சரிவைச் சந்தித்திருக்கின்றன. இரான், ரஷ்யா, வெனிசுலா போன்ற அதிக சர்வாதிகார நாடுகளாகக் கருதப்படும் நாடுகளும் அவற்றின் மதிப்பெண்களை இழந்திருக்கின்றன. 23 நாடுகள் உலகளாவிய தரவரிசைக் குறியீட்டில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றிருக்கின்றன.

இந்த அறிக்கை குறித்துப் பேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிராங்கோயிஸ் வலேரியன், ``நீதி அமைப்புகள் தவறுகளை முறையாகத் தண்டிக்காத வரை, அரசாங்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்காதவரை ஊழல் தொடர்ந்து செழித்து வளரும். மேலும், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் முழுமையாக சட்டத்தை நிலைநிறுத்தவும், ஊழலை வெளிக்கொண்டுவரும் நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் வேண்டும். அதுதான் ஊழலை எதிர்த்துப் போராட வழி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.கழுகார் பதில்கள்: “அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்!” என்று பேசியிருக்கிறாரே துரைமுருகன்?


http://dlvr.it/T251gz

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை; சிறையிலிருந்த சீரியல் கில்லரை 42 ஆண்டுகளாகத் தேடிய காவல்துறை!

அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து மார்ச் 23, 1980 அன்று, பாரெட் என்ற 24 வயது பெண், கல்லூரி நண்பர்களுடன் புளோரிடாவின், டேடோனா கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். அதே நாள், டேடோனா பீச் ட்ரெஷர் ஐலேண்ட் ஹோட்டலிலிருந்து, பாரெட் அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டதற்கு அடுத்த நாள், புளோரிடாவின் ஜாக்சன் வில்லியில், பாரெட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது.கைது

அதைத் தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில், பாரெட் `மரண தண்டனை' பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பல வருடங்களாக நடைபெற்று வந்தது. 2017-ம் ஆண்டில், பாரெட் தன் மரணத்தை எதிர்த்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்பது விசாரணையில் உறுதியானது.

இதற்கிடையில், பாரெட்டின் நண்பர்கள் அளித்த அடையாளத்தின்படி அடிப்படையில், ஓர் உருவம் வரையப்பட்டது. அதன் மூலம், இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது.

மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்த பின்னர், காவல்துறை 2020-ல் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு நடத்திய விசாரணையின் இறுதியில், டீன்ஸ் என்பவரின் கொலையில் கைதுசெய்யப்பட்ட மேன்ஸ்ஃபீல்ட் என்பவருடன் அந்தப் புகைப்படம் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், `` மேன்ஸ்ஃபீல்ட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டவர்.காவல்துறை விசாரணை

1982-ல் கலிபோர்னியா மற்றும் புளோரிடாவில் ஐந்து பெண்களைக் கடத்திக் கொலைசெய்த வழக்கில், அவருக்குப் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. புளோரிடாவில், தனது வீட்டின் பின்புறத்தில் அவர் புதைத்த நான்கு உடல்களைக் கண்டெடுத்தோம். தற்போது, 44 ஆண்டுகளுக்கு முன்பு பாரெட்டைக் கொலைசெய்ததையும் ஒப்புக்கொண்டார். சீரியல் கில்லரான இவர், தற்போது கலிபோர்னியா சிறைச்சாலையில் இருக்கிறார். இருந்தபோதிலும், மேன்ஸ்ஃபீல்டுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டாம் என, அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர்.

ஏனெனில் அவர் தற்போது கலிபோர்னியா சிறைச்சாலையில், கொலைசெய்ததற்காக ஒரே நேரத்தில் நான்கு ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகின்றார். மேலும், மற்ற வழக்குகளிலும், புலனாய்வாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார் என்பதால், அவர்மீது இந்த வழக்கைப் பதிவுசெய்ய வேண்டாம் என முடிவு செய்திருக்க்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

கொலை நடந்து சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருக்கும் சீரியல் கில்லரை அமெரிக்க காவல்துறை கண்டுபிடித்து, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. அமெரிக்கா: பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் பயணம்; சந்தேகம் கிளப்பிய ரஷ்ய நபர்- தண்டனை விதித்த கோர்ட்


http://dlvr.it/T24B66

Monday, 29 January 2024

வைரலான புகைப்படங்கள்... பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் X தளம் முடக்கம்.. என்ன நடந்தது?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாகச் சித்திரிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் `Deep Fake’ வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.Deep fake``79 வயதில் ஏழாவது குழந்தை..." மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நடிகர் ராபர்ட் டி நீரோ!

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) டீப் ஃபேக் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாயின. அந்தப் புகைப்படங்களை அகற்றுவதற்கு முன்னரே மில்லியனுக்கு அதிகமான மக்கள் அவற்றைப் பார்த்துள்ளனர். 

அந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட எக்ஸ் (X) தளமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து ஸ்விஃப்ட்டின் போலியான படங்கள் பரவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரின் எக்ஸ் தள அக்கவுன்ட் முடக்கப்பட்டது. 

எக்ஸ் தளத்தில் ஸ்விஃப்ட்டின் பெயரைத் தேடினால், `Something went wrong. Try reloading’ என்று வருகிறது. பாடகியின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. 

இது குறித்து எலானின் எக்ஸ் நிறுவனம் முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், ``இது போன்ற பதிவுகளுக்கு நிறுவனம் ஜீரோ டாலரன்ஸை கொண்டுள்ளது. எங்களின் குழுக்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்துப் படங்களையும் அகற்றி, அவற்றை போஸ்ட் செய்த அக்கவுன்ட்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளது.Elon Musk | Twitterஅமுல் பெயரில் ஏஐ உருவாக்கிய ஷரம் சீஸ்: ``போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்" - அமுல் வேண்டுகோள்..!

கடந்த வாரம் ஸ்விஃப்ட்டின் போலியான புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக்குகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்படவேண்டிய கட்டாயத்தை அமெரிக்க அரசு முன்வைத்துள்ளது.

ஏஐ-ன் பயன்பாடு ஆபத்தானதா அல்லது பயனுள்ளதா... உங்களின் கருத்தென்ன?!


http://dlvr.it/T21h0p

Sunday, 28 January 2024

WWE: முன்னாள் ஊழியர் அளித்த பாலியல் புகார்... தலைவர் பதவியிலிருந்து Vince McMahon விலகல்!

உலகின் மிகப்பெரிய, பிரபலமான மல்யுத்த நிறுவனம் WWE. 90's கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவராலும் இன்றளவும் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த வாரம் நெட்ஃபிக்ஸுடன் WWE-ன் Raw நிகழ்ச்சியை ஜனவரி 2025 முதல் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யவும், 31 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக , வின்ஸ் மக்மஹோன் (78) இருந்து வருகிறார். 2022-ம் ஆண்டில், வின்ஸ் மக்மஹோன் மீது பாலியல் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர் WWE-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார். வின்ஸ் மக்மஹோனுக்கு பதிலாக அவரது மகள் தற்காலிக தலைமை நிர்வாகி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 2023-ல், குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனம் விசாரணையை முடித்த பின்னர், அவர் WWE-ன் தலைமை நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தில் WWE-ன் முன்னாள் ஊழியர் ஜேனல் கிராண்ட் என்பவர், கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

அதில், ``மக்மஹோன் WWE-ன் தலைமை நிர்வாகி பதவியிலிருந்தபோது, அவர் என்னை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, மனநல சித்ரவதை செய்து, உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டார். வேலை வேண்டுமானால், அவரோடு படுக்கையைப் பகிர்ந்திருக்க வேண்டும் எனக் கேட்டார். என் குடும்பச் சூழலை அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார். அந்த நேரத்தில் பாலியல் உறவு கொள்ள ஜான் லாரினிடிஸ் உட்பட சில நபர்களை மக்மஹோன் பயன்படுத்திக் கொண்டார்.

வேலை நேரத்தில்கூட, WWE தலைமையகத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபடுவர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.கைது

இது குறித்துப் பேசிய வின்ஸ் மக்மஹோன், ``கிராண்ட்டின் வழக்கு அபத்தமான கற்பனைகள். ஒருபோதும் நடக்காத பொய் சம்பவங்கள். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் என்னைப் பாதுகாக்க முயல்வேன். நான் குற்றமற்றவன் என்ற முறையில் என் பெயரைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டர். மக்மஹோன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த WWE ஒரு சட்டக் குழுவை நியமித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வின்ஸ மக்மஹோன் WWWE மற்றும் அதன் தாய் நிறுவனமான TKO ஆகியவற்றில், தான் வகித்துவந்த பதவிகளிலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார்.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்னென்ன?!


http://dlvr.it/T20rJk

Friday, 26 January 2024

Trump: பெண் எழுத்தாளர் பாலியல் வழக்கு... ட்ரம்ப்பே ஷாக்கான அபராத தொகை - எவ்வளவு தெரியுமா?!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் அவருக்கு 83.3 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 690 கோடி ரூபாய். முன்னதாக, அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல் (E Jean Carroll), 1990-களின் காலகட்டத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தன்னைச் சந்தித்த ட்ரம்ப், டிரெஸ்ஸிங் ரூமில் தன்னைத் தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின்னர் இந்த விஷயம் வெளியில் சொல்ல ஆரம்பித்ததும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் நீதிகேட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார்.இ.ஜீன் கரோல் - டொனால்டு ட்ரம்ப்

பின்னர் வழக்கின் விசாரணையில், கரோலுக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு ட்ரம்ப்புக்கு கடந்த மே மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த வழக்கையே முற்றிலுமாக மறுத்த ட்ரம்ப் வழக்கறிஞர், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடவிருப்பதால் பணத்துக்காக கரோல் இந்த வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றும் கூறி, மேல்முறையீட்டுக்குச் செல்வோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், ``என் குழந்தைகள்மீது சத்தியமாக, அவரை நான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை" என குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பும் தெரிவித்தார்.

இந்த நிலையில், நியூயார்க்கிலுள்ள நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், ட்ரம்புக்கு 83.3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தீர்ப்பில், கரோல் மீது அவதூறு பரப்பியதற்காகவும், அதனை சரிசெய்வதற்காகவும் மொத்தமாக 18.3 மில்லியன் டாலர் அவருக்கு இழப்பீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்றும், தண்டனைக்குரிய அபராதமாக 65 மில்லியன் டாலர் செலுத்துமாறும் ட்ரம்ப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.டொனால்டு ட்ரம்ப்

தீர்ப்பு வந்ததும், மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்த ட்ரம்ப், ``இது முற்றிலும் அபத்தமானது. இதுவரை வந்த இரண்டு தீர்ப்புகளிலும் எனக்கு உடன்பாடில்லை. பைடனின் சூழ்ச்சிக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்வேன். இது அமெரிக்கா அல்ல. சட்ட அமைப்பு இங்கு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

இதுவரை ட்ரம்ப் மீது 22-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஅமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய விவேக் ராமசாமி - காரணம் என்ன?!


http://dlvr.it/T1xNT1

`விவசாயத்தில் லாபம் பெறுவதற்கு வளங்கள் இருந்தால் மட்டும் போதாது' பில்லியனர் ஜாக்மா சொல்வது என்ன?

அதிக அளவில் சம்பளம் வாங்கி வந்தவர்கள் கூட ஒருகட்டத்தில் தொழில்நுட்ப வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயம் செய்கிறார்கள். ஜெயித்த பின் வரும் வெற்றி சிறிது காலத்திற்கு பின் பலரை விவசாயத்தின் பக்கம் திருப்பியுள்ளது. அந்தவகையில், பிரபல சீனத் தொழிலதிபரான ஜாக் மா விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இ - காமர்ஸ் பிஸினஸில் கலக்கி வரும் சீன நிறுவனமான அலிபாபா 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அலிபாபாவை நிறுவிய 19 பேரில் ஜாக் மாவும் ஒருவர். 29 பில்லியன் சொத்து மதிப்புகளோடு உலகின் சாதனை மனிதராக வலம் வந்தவர். அலிபாபாதண்ணீர்... தண்ணீர்...
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க களமிறங்கிய வனத்துறை!

2019-ல் அலிபாபாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஜாக் மா. அதன்பிறகு பொது வாழ்விலிருந்து விலகி, தனிப்பட்ட வாழ்வினை வாழத் தொடங்கினார். 

அலிபாபாவைத் தொடங்குவதற்கு முன்னர் அவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். தனது வாழ்வின் அடுத்தகட்டம் நோக்கி நகர ஆரம்பித்தவர், 2020-ல் இருந்து விவசாயம் குறித்து உலகம் முழுவதுமுள்ள பல கல்வி நிறுவனங்களில் பயின்றார்.

ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் அக்ரோ டெக் (Agro Tech) படித்தார். 2023 நவம்பரில் `ஹாங்ஜோ மாஸ் கிச்சன் ஃபுட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விவசாயப் பொருள்களை பதப்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனை செய்வதில் நிறுவனம் ஈடுபட்டது. விவசாயத்திற்கு ஏன் செல்கிறார் என்பது குறித்து அவர் பகிரங்கமாக பேசவில்லை. ’ஜாக் மா’பிளான் பண்ணாமல் ஜெயித்த அதிசய மனிதர் ஜாக் மா..!

ஆனால், ஆகஸ்ட் 2023-ல் கிராமப்புற ஆசிரியர்களுக்கு ஒரு வீடியோவில் பேசியிருந்த ஜாக் மா, "விவசாயத்துறையில் வெற்றி பெறுவதற்கு அதிக வளங்கள் தேவையில்லை; ஆனால், தனித்துவமான சிந்தனை திறனும் கற்பனையும் உள்ளவர்களால் அதில் வெற்றிபெற முடியும் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

கிராமப்புறங்களுக்கு தொழில்நுட்பங்கள் அதிகம் தேவை. அதே நேரத்தில் மற்றத் துறைகளைப் போலவே விவசாயத்தில் வளர்வதற்கு தனித்துவமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். 


http://dlvr.it/T1xC8P

1988 கொலை வழக்கு: கைகொடுக்காத ஊசி... உலகின் முதல் 'நைட்ரஜன் வாயு' மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் - எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டாலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார்.

இருவரும், 1988-ம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை செய்தனர். எலிசபெத் சென்னட் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சார்லஸ் சென்னட் தற்கொலை செய்துக்கொண்டார். கொலை குற்றம்சாட்டப்பட கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.கென்னத் யூஜின் ஸ்மித்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் மரணதண்டனை விதித்தது. இதில், ஜான் பார்க்கர்க்கு 2010-ல் ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு கென்னத் யூஜின் ஸ்மித் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது மரண ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று நைட்ரஜன் ஹைபோக்ஸியாவால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நைட்ரஜன் ஹைபோக்ஸி மரண தண்டனை:

நைட்ரஜன் ஹைபோக்ஸியா மரண தண்டனை என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ஒரு முகமூடி அணிவிக்கப்படும். அதில் நைட்ரஜனை மட்டுமே சுவாசிக்கும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். மனித வாழ்வுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை தவித்து நைட்ரஜனை தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் நிகழும். இந்த மரண தண்டனையால் கைதிக்கு பெரும் சிரமங்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது.முகமூடி

கென்னத் யூஜின் ஸ்மி மரணிக்க சுமார் 22 நிமிடங்கள் ஆனதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர், 1999-ம் ஆண்டு ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது, நைட்ரஜனை வைத்து முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படிருக்கிறது. இதுபோன்ற மரண தண்டனைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYAI: அடையாளம் தெரியாமல் கிடந்த சடலம்; கொலை வழக்கில் AI மூலம் துப்பு துலக்கிய போலீஸ்! - என்ன நடந்தது?


http://dlvr.it/T1vKvG

Thursday, 25 January 2024

`ஒரு கப் டீ, ஒரு சிட்டிகை உப்பு...' டீக்காக சண்டையிடும் அமெரிக்கா - இங்கிலாந்து: என்ன நடக்கிறது?!

நல்ல ஒரு டீ, சோகமான மனநிலையைக்கூட மாற்றிவிடும். அதனாலேயே தரமான, சுவையான டீயை தேடி சில கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பவர்களும் உண்டு. சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் உலகில் தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியான மக்கள் குடிக்கும் ஒரு பானமாக டீ இருக்கிறது.

அமெரிக்காவின் பிரைன் மார் கல்லூரியில் (Bryn Mawr College) வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிபவர், மிஷெல் ஃபிராங்க். இவர் சிறப்பான டீயை தயாரிக்க வேண்டுமெனில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். தேநீருக்கான சரியான செய்முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி, தனது வேதியியல் ஆய்வு குறித்த தகவல்களை `Steeped: The Chemistry of Tea' என்ற புத்தகமாக வெளியிட்டு இருந்தார்.salt``விமான பயணத்தில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொன்ன வெற்றி ரகசியம்..." - இளைஞரின் வைரல் பதிவு!

அதில், ``அமெரிக்காவில் உங்களுக்கு சில மோசமான டீ கிடைக்கிறது. அது பயங்கரமாக உள்ளது. நான் மத்திய மேற்கு பகுதியில் வளர்ந்தேன். இது காபி குடிக்கும் நாடு. ஆனால், டீ எனக்கு எப்போதும் விருப்பமான பானமாக இருந்தது. அது குறித்து படிப்பதற்காக நான் நிறைய நேரத்தைச் செலவழித்தேன்.

இத்தனை வருடங்களில் டீ குடித்து, வேதியலை ஆராய்ச்சி செய்த பின்னர், எனது கோப்பை டீயில் என்ன இருக்கிறது, எப்படி சிறந்த டீ தயாரிப்பது என்பது பற்றி புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். டீ பிரியர்கள் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்'' எனக் கூறியிருந்தார். 

இங்கிலாந்தின் தேசிய பானம் டீ. இவரின் கருத்து இங்கிலாந்தில் டீ குடிப்பவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு இந்த விஷயத்தில் தலையிட நேரிட்டது. அமெரிக்கப் பேராசிரியரின் `ஸ்பெஷல் டீ' குறித்த ரெசிபி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதைத் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டது. அதில், ``தேநீர் என்பது தோழமையின் அமுதம், நம் நாடுகளை இணைக்கும் புனித பந்தம். நமது சிறப்பான உறவின் அடித்தளத்தை அச்சுறுத்தும் மூர்க்கத்தனமான முன்மொழிவைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது.`300 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்'... டீ தான் காரணமா? - மருத்துவர் கூறும் விளக்கம்!

ஒரு கோப்பை டீயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பது எங்களின் கொள்கை அல்ல; ஒருபோதும் அப்படி இருந்தது இல்லை. அவர்கள் டீயை மைக்ரோவேவில் வைத்துச் சரியான முறையில் செய்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது. 

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் இங்கிலாந்து அரசின் கேபினட் ஆபீஸ் அறிக்கை வெளியிட்டது. அதில், ``நமது சிறப்பான உறவைப் பாராட்டுகிறோம். இருந்தபோதும் நாங்கள் முழு மனதுடன் உடன்படவில்லை. டீயை கெட்டிலை (Kettle) பயன்படுத்தி மட்டுமே தயாரிக்க வேண்டும்’’ என்று கிண்டல் அடித்துள்ளது.

நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த நகைச்சுவை விவாதங்கள், சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளன.


http://dlvr.it/T1sFwk

Wednesday, 24 January 2024

Israel - Hamas War: `அமெரிக்கா தனது ஆதரவை நிறுத்தினால் நெதன்யாகு 10 நிமிடம் கூட..!' - இரான் அமைச்சர்

ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக சொல்லப்பட்டது. போரின் தொடக்கத்தில், ஹமாஸ் தீவிரவாத குழு, அதை ஒழித்தாக வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆதரவளித்தன.பைடன் - நெதன்யாகு

அதன் விளைவு, போரை நிறுத்துவதற்கான ஐ.நா தீர்மானம், பல நாடுகள் வலியுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸை ஒழிப்பதே இலக்கு, அதுவரை போர் ஓயாது என பகிரங்கமாக கூறிவருகிறார். அதோடு, இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன அப்பாவி மக்களின் பலி எண்ணிக்கையும் 25,000-ஐ கடந்து நீண்டுகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில். அமெரிக்கா தனது ஆதரவை நிறுத்திவிட்டால் நெதன்யாகு 10 நிமிடம் கூட உயிரோடு இருக்கமாட்டார் என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இஸ்ரேலின் தாக்குதலில் குறித்து ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், ``இஸ்ரேலின் இனப்படுகொலை போரில், போர் தளவாடங்கள், ஆயுதங்கள், அரசியல், ஊடக ஆதரவை அமெரிக்கா இன்று நிறுத்தினால், நெதன்யாகு 10 நிமிடங்கள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்.இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்

எனவே, போரை நிறுத்துவதற்கான திறவுகோலாக இஸ்ரேலுக்கு முன் இருப்பது அமெரிக்கா. போர் நீள்வதை எதிர்ப்பதாக அமெரிக்கா கூறினாலும், மனிதாபிமான உதவிக்காக காஸாவில் போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா தீர்மானங்களையும் அது தடுத்திருக்கிறது. போரின் நோக்கம் விரிவடைந்திருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், பிராந்தியத்தில் ஒரு பரந்த யுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்திருக்கிறது" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஇஸ்ரேல்-ஹமாஸ் போரும்... அதிர்ச்சியளிக்கும் தரவுகளும்!


http://dlvr.it/T1rWMX

`ஆமாம், அந்த மாணவனுடன் பலமுறை உடலுறவு கொண்டேன்..!' - நீதிமன்றத்தில் ஆசிரியை `பகீர்' வாக்குமூலம்

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் நகரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ஹீதர் ஹேர் (33). இவர் கொரோனா தொற்றின்போது, ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வந்தார். அப்போது உயர் நிலை வகுப்பில் பயிலும் ஒரு மாணவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை வகுப்பில் சந்தித்தார். பாடம் தொடர்பாக உரையாட வேண்டும் என செல்போன் எண்களைப் பறிமாறிக்கொண்டனர். மாணவருடன் உரையாற்ற இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியை.பாலியல் தொல்லை

அதைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கின்றனர். அந்த மாணவர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து அங்கிருந்து வெளியில் சென்றுவிட்ட நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தான் ஆசிரியை ஹீதர் ஹேரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, 17 வயதான அந்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் காரணமாக ஆசிரியையான ஹீதர் ஹேர் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் அளித்த அந்த மாணவர், ``பாடம் குறித்துப் பேச செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, என்னுடன் உடலுறவுக் கொள்வதுபோலக் கனவு கண்டதாகத் தெரிவித்தார். அதை நேரில் செய்துபார்க்க வேண்டும் என வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டில், ஹோட்டலில், காரில், வகுப்பில், பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் எனச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், என்னுடன் உறவு வைத்துக்கொண்டார். 2021-2022 பள்ளியில் படிக்கும்போது ஏறக்குறைய 20 முதல் 30 முறை வற்புறுத்தி, என்னுடன் உடலுறவு கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.ஆசிரியை ஹீதர் ஹேர்

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது அழுதுகொண்டே பேசிய ஆசிரியை ஹீதர் ஹேர், ``2022-ம் ஆண்டு பள்ளியில் எங்களுக்கு மத்தியில் தொடர்பு ஏற்பட்டது. என் மாணவருடன் 20 - 30 முறை பாலியல் உறவு கொண்டேன். என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விழுப்புரம்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி முதல்வர் போக்சோ வழக்கில் கைது


http://dlvr.it/T1pmqx

Tuesday, 23 January 2024

மாலத்தீவை நோக்கி விரையும் சீனாவின் உளவுக் கப்பல்? - என்ன நடக்கிறது அங்கே?

இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக, மாலத்தீவு கருதப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர், லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.சீனா - மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

அந்தப் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, கூகுளில் அதிகம் `லட்சத்தீவு' குறித்துத் தேடப்பட்டது. இதற்கிடையில், மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடியை, ‘மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குப் பிரதமர் மோடி முயல்கிறார்.

மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது', `இஸ்ரேலின் ஊதுகுழல்' என விமர்சித்து கருத்துகள் தெரிவித்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே சர்ச்சை வெடித்தது.

அதைத் தொடர்ந்து, சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. அதே நேரம், சீனா சென்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு,``சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடு. எங்களின் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்று.ஐ.ஆர்.ஓ

சீனா, மாலத்தீவின் சுற்றுலா வணிகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை முதலிடத்திலிருந்தது. அதைத் தொடர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் தான் தற்போது மாலத்தீவை நோக்கி சீனாவின் உளவுக் கப்பல் வந்துகொண்டிருப்பதாக IOR (Indian Ocean Region) தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில்,``சீன உளவுக் கப்பல், 'ஆராய்ச்சி'க் கப்பல் என்ற பெயரில் மாலத்தீவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

Xiang Yang Hong 03 என்ற இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின் கடலில் பயணிப்பதை மரைன் டிராக்கர் செயலி காட்டுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி மாலத்தீவுக்கு வரவிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கப்பல் குறித்து முன்னணி புவியியல் நிபுணர் டேமியன் சைமன்,``Xiang Yang Hong 03 என்ற இந்தக் கப்பல் 2019 - 2020 காலகட்டத்தில் நீர்நிலைகளை ஆய்வு செய்தது.சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர்

4,300 டன் எடையுள்ள இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்யும் ஒரு 'ஆராய்ச்சி' கப்பலாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆராய்ச்சி மூலம், நீருக்கடியில் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் குறித்த தரவுகளைச் சேகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. மேலும், கடலின் தரையை மேப்பிங் செய்யும். இதனால், எதிர்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள், நீரில் மூழ்கக்கூடிய ட்ரோன்களைப் பயன்படுத்தச் சீனாவுக்கு உதவுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`ராணுவம் விழிப்புடன் உள்ளது; தைவானின் முயற்சிகளை நிச்சயம் முறியடிப்போம்!’ - எச்சரிக்கும் சீனா


http://dlvr.it/T1n45l

850 ஆண்டுகள் சிறை; கொலை வழக்கில் போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு அதிரடி தண்டனை! - எங்கு தெரியுமா?

மத்திய அமெரிக்காவில் இருக்கும் பகுதி நிகரகுவா. இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் `நிகரகுவாக்கள்' என அழைக்கப்படுகின்றனர். 2008-ம் ஆண்டு நிகரகுவாவிலிருந்து குவாத்தமாலாவிற்குள் பயணிகள் பேருந்து ஒன்று நுழைந்தது. அதில் நிகரகுவாக்கள் பயணித்தனர். அந்தப் பேருந்தில் வருபவர்கள் போதைப்பொருள் கடத்தி வருவதாக, போதைப்பொருள் கடத்தல் மன்னன் மார்வின் மான்டியேல் மரின் சந்தேகித்தார். அதற்காக, அந்தப் பேருந்தை நிறுத்தி அவர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா எனச் சோதித்தார்.மார்வின் மான்டியேல் மரின்

அவர்களிடம் அப்படி எதுவும் இல்லை என்றதும், ஏமாற்றத்தின் ஆத்திரத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த 16 நிகரகுவாக்களையும், ஒரு டச்சுக் குடிமகனையும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார். மேலும், அவர்களின் உடல்களை தனக்குச் சொந்தமான தோட்டத்தில் எரித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து, அந்த நபரைத் தேடிவந்தது. அப்போது தப்பித்தவர், 2022-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில்தான், போதைப் பொருள் கடத்தல் மன்னன் மார்வின் மான்டியேல் மரினுக்கு, அவர் செய்த ஒவ்வொரு கொலைக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, மொத்தம் 17 கொலைகளைச் செய்ததற்காக மார்வின் மான்டியேல் மரினுக்கு 850 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, இந்த வழக்கில் மார்வின் மான்டியேல் மரினின் மனைவி சாரா குரூஸ் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.பெண் தாக்கப்பட்ட வழக்கு; திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!


http://dlvr.it/T1mGFt

“திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்”: கனிமொழி எம்.பி.

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக் குழு என பல்வேறு குழுக்களும் அமைக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுக் கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா என பலர் கலந்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தேர்தல் அறிக்கையை உருவாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகளைப் பெற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசும்போது, “நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் அறிக்கைக் குழு இன்று கட்சி அலுவலகத்தில் கூடியது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதன் பிறகு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் முதலில் எந்தெந்த ஊர்களுக்குச் செல்வது எனும் பட்டியலை இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலுக்கான ஒப்புதலை முதல்வரிடம் பெற்ற பிறகு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து மக்களின் கருத்துகளைப் பெற இணைய முகவரி, வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.   



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/3e4fLWw https://ift.tt/vBcEO02
via IFTTT

Monday, 22 January 2024

Fire Fighter: 6 வயதில் `தீ'யால் சிதைந்த வாழ்க்கை; 26 வயதில் போராட களமிறங்கிய தன்னம்பிக்கை இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் டெர்ரி மெக்கர்த்தி. அப்போது அவனுக்கு 6 வயது. வழக்கம்போல தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனிலிருந்த மண்ணெண்ணெய் அவன்மீது சிதறியிருக்கிறது. அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான் டெர்ரி மெக்கர்த்தி. திடீரென அவனது உடலில் தீப்பற்றியது.டெர்ரி மெக்கர்த்தி

அதுவரை ஆரோக்கியமாக, அழகான தோற்றத்துடன் விளையாடிக்கொண்டிருந்த டெர்ரி மெக்கர்த்தியின் உடலில் பற்றிய தீ, 70 சதவிகிதம் அவனைத் தின்றுவிட்டது. கடுமையான தீக்காயங்களுடன் அவனுடைய பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவனது உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் மருத்துவர்கள், ``டெர்ரி மெக்கர்த்திக்கு 70 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

முகம், உடல், கை, கால்களில் சதைகள் சிதைந்துவிட்டது. இனி சாதாரண குழந்தைகளைப்போல இயல்பாக அவனால் இயங்க முடியாது. சாதாரண வேலை, படிப்பது போன்ற செயல்பாடுகளில் மற்ற மாணவர்களோடு ஒப்பிடும்போது திறன் குறைந்து, மந்தத்தன்மையில் இருப்பான். எனவே, அவனை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்" என அவனுடைய பெற்றோருக்கு அதிர்ச்சித் தகவலைக் கொடுத்தார்கள்.fire

சிகிச்சை முடிந்தும் அவனால், மற்றவர்கள்போல் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. சக நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, உறவினர்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு, படிப்பில் சோர்வு போன்ற காரணங்களால் தன்னுடைய இயல்பான உலகிலிருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டான் டெர்ரி மெக்கர்த்தி. அதனால், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்த டெர்ரி மெக்கர்த்தி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.

நாள்கள் கடந்தது. தனிமையில் தன்னையே நொந்து கொள்ளாமல், இந்த துரதிஷ்டத்திலிருந்து எப்படியாவது முன்னேறிச் சாதித்து விட வேண்டும். எந்த நெருப்பால் தன் வாழ்க்கை சூனியமாக்கப்பட்டதோ, அந்த நெருப்பிலிருந்து தன்னையும், தன்னைப்போலப் பாதிக்கப்படுபவர்களையும் மீட்க வேண்டும் என்ற முனைப்புடன், அது தொடர்பான படிப்புகளைத் தேடித் தேடிப் படித்தான்.டெர்ரி மெக்கர்த்தி

தற்போது டெர்ரி மெக்கர்த்திக்கு 26 வயது. அவரின் கடுமையான உழைப்பால், இப்போது அவர் பணி செய்வது தீயணைப்புத் துறையில். எந்தத் தீ தன்னை பயமுறுத்தியதோ, மூலையில் முடக்கியதோ அந்தத் தீயுடன் தற்போது போராடி, மக்களை மீட்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு அசத்தி வருகிறார். அவர் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.திருமணத்தில் விபரீதமான துப்பாக்கி விளையாட்டு... மணமகள் முகத்தில் சீறிப்பாய்ந்த நெருப்பு!


http://dlvr.it/T1kCSX

Saturday, 20 January 2024

`எரிந்துபோன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; நஷ்டஈடு ரூ.10 லட்சம்' - வாடிக்கையாளர் பெற்றது எப்படி?

இப்போது ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வதவதவென இருக்கின்றன. இதில் பெங்களூருதான் டாப்; அங்கே ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தெலங்கானா மாநிலத்தையும் சும்மா சொல்லக் கூடாது. அதில் முக்கியமான ஒரு நிறுவனம் – பென்லிங் இந்தியா (Benling India). இது இந்திய நிறுவனம் இல்லை; சீன நிறுவனம். ஆனால், தெலங்கானா மாநிலத்தில் சக்கைப் போடு போடும் நிறுவனம். Benling India என்பது பென்லிங் நிறுவனத்தின் சப்சிடரி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து Aura, Falcon and Kriti என்று 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிக் கொண்டு வருகின்றன. 

இந்த பென்லிங் நிறுவனத்தின் ஸ்கூட்டர் ஒன்று, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநிலத்தில் ஓர் ஊரில் தீப்பிடித்து எரிந்து போனதில், ஸ்கூட்டரின் பல பாகங்கள் தீக்கிரையாகின. பேட்டரி எக்ஸ்ப்ளோடு ஆகி ஸ்பார்க் ஆகி வெடித்ததால் தீ ஏற்பட்டது என்கிறார்கள். அந்த ஸ்கூட்டரின் வாடிக்கையாளர், ‘தனக்கு ரீ ப்ளேஸ்மென்ட் ஸ்கூட்டர் வேண்டும்; கூடவே பாதிப்புகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை வழங்க வேண்டும்’ என்கிற வேண்டுகோளோடு, கம்பெனிக்கும் டீலருக்கும் மாறி மாறி புகார் கொடுத்து நடையாய் நடந்தும், அதைக் கண்டுகொள்ளவில்லையாம் பென்லிங் டீலர்ஷிப். இதைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் கோர்ட் உதவியை நாடியும், அந்த கமிஷன் முன்பு பென்லிங் கம்பெனி ஆஜராகவில்லை போல் தெரிகிறது. 

இதனால் கடுப்பான தெலங்கானா கன்ஸ்யூமர் கமிஷன், ‘பென்லிங் இந்தியா டீலர்ஷிப், பாதிக்கப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது. Benling

அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் 2021–ல் பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். வாங்கிய மூன்றே ஆண்டுகளில் அது திடீரெனத் தீப்பற்றியது, தரம் குறைந்த பேட்டரிதான் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். 

ஸ்கூட்டர் வாங்கும்போது கம்பெனி அறிவுறுத்தியபடியே தான் வண்டி ஓட்டியதாகவும், ஓவர்லோடெல்லாம் அடிக்கவில்லை எனவும், சூரிய ஒளிக்குக் கீழே சார்ஜ் போடுவதில்லை எனவும், வழக்கம்போல் சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பேட்டரி வெடித்ததாகவும் சொல்கிறார் அந்த வாடிக்கையாளர். அவர், வழக்கமாக சார்ஜ் போடுவதுபோல், 2023, பிப்ரவரி 26–ம் தேதி இரவு 11.30 மணிக்கு சார்ஜ் போட்டுவிட்டுப் போனவர், 27–ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பேட்டரி வெடித்த சத்தம் கேட்டு வந்திருக்கிறார். திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து, அந்தப் புகை வீடு முழுவதும் பரவி, பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தனது புகாரில் சொல்லியிருக்கிறார். ஸ்கூட்டர் எரிந்ததில் இருந்து தனது குடும்பத்தினர் தினமும் இரவு நிம்மதியாக உறங்கவில்லை எனவும் அவர் மனம் நொந்திருந்தார். இந்த மனஉளைச்சலுக்காகவும் சேதாரத்துக்காகவும் தனக்கு 13.5 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

‘‘ஒரு எலெக்ட்ரிக் வாகனம் தீக்கிரையாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் என்ன காரணம் என்று வாகன உற்பத்தியாளர்தான் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த பென்லிங் ஸ்கூட்டர் விஷயத்தில், இந்த உற்பத்தியாளர்களிடம் குறைந்தபட்ச அக்கறைகூடக் காட்டவில்லை; இது மற்ற வாடிக்கையாளர்களையும் பாதிக்கக்கூடாது என்கிற நோக்கில் இந்த நஷ்டஈட்டுத் தொகையை அபராதமாக விதிக்கிறோம்!’’ என்று தெலங்கானா கன்ஸ்யூமர் கமிஷன் அறிவித்திருக்கிறது. 

இது தவிர, Litigation Charges எனும் வழக்கு தொடர்ந்த செலவுக்காகவும் 10,000 ரூபாயும் சேர்த்துத் தர வேண்டும் என்று பென்லிங் டீலர்ஷிப்புக்கு உத்தரவிட்டிருக்கிறது கமிஷன். 

வாடிக்கையாளருக்கு இது வெற்றி என்றாலும், உயிரைக் கையில் புடிச்சுக்கிட்டே அலைய முடியாதில்லையா!


http://dlvr.it/T1g0bp

`எங்களுடன் இருக்கிறாள்' - அரிய வகை நோயால் இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றிய பெற்றோர்..!

பிடித்தவர்கள் இறக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைத் தூக்கி எறியவோ, அவர்களது எண்ணை மொபைலில் இருந்து நீக்கவோ மனம் வராது. நெருக்கமானவர்களின் நினைவுகளை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களோடு சேர்த்து நம்மோடு வைத்துக் கொள்வோம். 

இந்த நிலையில், அமெரிக்காவின் இடாஹோ நகரத்தைச் சேர்ந்த கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸி என்ற தம்பதி, TBCD (Tubulin folding cofactor D) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் 15 மாத குழந்தையின் சாம்பலை அழகான கற்களாக மாற்றி தங்களோடு வைத்துள்ளனர். 

இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மூன்றாவது குழந்தையான பாப்பிக்கு, நான்கு மாதங்கள் ஆனபோது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்பதைப் பெற்றோர் அறிந்துள்ளனர்.மூன்று குழந்தைகள்Doctor Vikatan: சிசேரியன் செய்த தையலில் வலி... அறுவைசிகிச்சை இல்லாத தீர்வு உண்டா?

மருத்துவர்கள் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில், மூளையின் மையப் பகுதியான கார்பஸ் கலோசம் குழந்தைக்குச் சரியாக வளர்ச்சியடையவில்லை என்பது தெரிய வந்தது. 

தொடர்ச்சியான சோதனைகளிலும், குழந்தைக்கு ஏற்பட்ட நோய் பற்றி உறுதியாக அறியமுடியவில்லை. மரபணு பரிசோதனையில், அரிய வகை TBCD நோயால் குழந்தை பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.

உலகில், இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 38-வது குழந்தை பாப்பி என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது. இந்த நோயின் பாதிப்பு பற்றி கண்டுபிடிக்கவே பல மாதங்களாயின.

குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர் பெற்றோர். மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்தனர். அங்கிருந்து குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் குழந்தையை மாற்றியபோது குழந்தையின் இதயத் துடிப்பு நின்று போனது.

இது குறித்து கெய்லி கூறுகையில், ``நாங்கள் பாப்பியின் சாம்பலை எங்களுடன் வீட்டில் வைத்திருக்க விரும்பினோம். சாம்பலை கலசத்தில் கொண்டு வந்து வைக்கலாம். ஆனால், வீட்டில் இரண்டு சிறு குழந்தைகள் இருப்பதால், அவர்கள் பயப்படுவார்கள், அதை உடைக்க நேரிடலாம். அதை நாங்கள் விரும்பவில்லை. 

அப்போதுதான், இறந்துபோன அன்புக்குரியவர்களின் சாம்பலைக் கற்களாக மாற்றும் `பார்ட்டிங் ஸ்டோன்ஸ்’ (Parting Stones) என்ற அமைப்பு குறித்து அறிந்தோம். அவர்களைத் தொடர்பு கொண்டோம்.சாம்பலில் இருந்து கற்கள்! Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா?

சில மாதங்களுக்குப் பிறகு, கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்புடன் அட்டைப்பெட்டியில் சில கற்கள் வந்தன. அந்தக் குறிப்பில், `உங்கள் மகளை எங்களை நம்பி ஒப்படைத்ததற்கு நன்றி' என்று இருந்தது. இது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.  

அந்தப் பெட்டியில் 13 அல்லது 14 சிறிய கற்கள் இருந்தன. அவளது உடல் மிகவும் சிறியதாக இருந்தது. அதனால் நிச்சயமாக அதிக கற்கள் இருக்கப்போவதில்லை. அந்தக் கற்கள் வெள்ளை நிறத்தில் சிறிய மஞ்சள் புள்ளிகளுடன் இருந்தன.   

தற்போது குழந்தை உயிருடன் இல்லை என்றாலும் கற்களின் மூலமாக பாப்பியுடன் இருப்பது போல உணர்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

அன்பானவர்களின் நினைவாக நீங்கள் உங்களுடன் வைத்திருக்கும் பொருள் என்ன..? கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T1f0rp

தகர்க்கப்பட்ட பாலஸ்தீன பல்கலைக்கழக கட்டடம்: விளக்கம் கேட்கும் அமெரிக்கா! - தொடரும் சோகம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போர் 100 நாள்களைக் கடந்தும் முடிவுக்கு வராத நிலையில், தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற துயரச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் மருத்துவம், கல்வி, சாலை போன்ற உள்கட்டமைப்புகளையும் இஸ்ரேல் குறிவைத்துத் தகர்த்துவருவதாகவும், அதன் மூலம், பாலஸ்தீன நாட்டை இல்லாமல் ஆக்குவதாகவும் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இந்த நிலையில்தான், பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகர்க்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இது சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,``பாலஸ்தீனப் பல்கலைக்கழகம் தாக்கப்பட்டது குறித்து என்னிடம் போதுமான தகவல்கள் இல்லை. எனவே, இது குறித்து இஸ்ரேலிடம் விவரம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், மக்களின் உள்கட்டமைப்பை ஹமாஸ் குழு பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான் யூனிஸ் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ISRAEL just blew up the University of Palestine in GAZA — even though it has LITERALLY NOTHING to do with Hamas. pic.twitter.com/GermWmBT1l— Jackson Hinkle (@jacksonhinklle) January 18, 2024




இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம்,``தாக்கப்பட்ட பகுதி ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் கோட்டை" எனத் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் குறித்துப் பேசிய காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள்,``இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,620. தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்" எனக் குறிப்பிடுகிறார்கள். அதே நேரம், 9,000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீன மக்களின் அதிகளவிலான உயிரிழப்பு குறித்து மீண்டும் அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருப்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYபாலஸ்தீனம் - இஸ்ரேல்: 1945 முதல் 2023 வரை... அமெரிக்காவின் ஆதரவும் செயல்பாடும்! - ஒரு பார்வை!


http://dlvr.it/T1dTGJ

Friday, 19 January 2024

காலமானார்: ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடியும்  மூத்த தணிக்கையாளருமான சி.என். ஜெயச்சந்திரன் (92), இன்று (19.01.2024) காலை 8  மணியளவில் பெங்களூரில் காலமானார்.

பெங்களூரில் அவருடைய பேரன் வீட்டில் தங்கியிருந்த அவர், முதுமை காரணமாகக்  காலமானார். அவருடைய உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது.

சென்னை, அம்பத்தூர், திருவேங்கட நகரிலுள்ள இவருடைய சகோதரர்  கார்ல்  மார்க்ஸின் மகள் இல்லத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்  இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவர்  ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன். இவர் மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், வழக்கறிஞர் என்.டி. வானமாமலை போன்றோருடன் இணைந்து பணியாற்றியவர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இவரும் மறைந்த இந்திய கம்யூ. தலைவர் தா. பாண்டியனும்  வகுப்புத் தோழர்கள். மறைந்த மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியமும் இவரும் இணைந்துதான் தென்னக ஆய்வு மையத்தைத் தொடக்கினர்.

ஜெயச்சந்திரனின் மறைவு பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் அதன்  இணைப்பு அமைப்புகளின் நீண்ட கால தணிக்கையாளராகப் பணியாற்றியவர். இளம் தணிக்கையாளர்களை உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயச்சந்திரனின் மறைவு பெரும் வேதனையளிக்கிறது. அவர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தணிக்கையாளர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்றும் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/ckdaY94 https://ift.tt/FepWDvK
via IFTTT

Thursday, 18 January 2024

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போர் முடிந்ததும் உலக நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன?

முதலாம் உலகப்போரின் முக்கிய வில்லனாக ஜெர்மனி கருதப்படுவதற்குக் காரணம் போரைத் தொடங்கியது அதுதான். பிற நாடுகளில் அதிக நாசங்களை (முக்கியமாக பெல்ஜியத்திலும் பிரான்சிலும்) உண்டாக்கியதும் அதன் ராணுவம்தான். `நச்சு வாயு' என்ற கொடுமையான யுக்தியைப் போரில் முதலில் பயன்படுத்தியது அவர்கள்தான். என்றாலும் ஜெர்மனி அரசின் தவறுகளுக்காக ஜெர்மானிய மக்கள் அதிக அளவில் தண்டிக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் போர் வேண்டாம் என்ற குரல் அங்கு ஒலித்துக்கொண்டே இருந்தது. சொல்லப்போனால் அமைதி ஒப்பந்தத்தில் மிக மிக அதிகமாக ஜெர்மனி தண்டிக்கப்பட்டது கூட இரண்டாம் உலகப் போருக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பவர்கள் உண்டு.ஜெர்மனியை மட்டுமே முக்கிய குற்றவாளியாக்கிவிட முடியுமா? பார்ப்போம்.ஆஸ்திரியா - ஹங்கேரி

பல ஐரோப்பியச் சக்திகள் தொடக்கத்திலிருந்தே தங்களை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகளைத் தங்கள் காலனி தேசங்களாக்கி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்தப் போட்டியின் ஒரு விளைவு என்றும் முதலாம் உலகப்போரைக் கூற முடியும். போரில் கூட்டணி வைத்துக்கொண்டதும் நாசங்களை அதிகரித்தது. இரண்டு தனி நாடுகளாக ஆஸ்திரியா - ஹங்கேரியும் செர்பியாவும் மட்டும் போரிட்டிருந்தால் அது விரைவில் முடிந்து இருக்கும். தவிர வெறுப்புகளைக் களையும் அளவுக்குச் சக்தி வாய்ந்த தேசத் தலைவர்கள் அப்போது இல்லாமல் போனார்கள். புத்தம்புதிய நாசக்கார போர்க் கருவிகளை உருவாக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வேறு அப்போது வளர்ந்து தொலைத்திருந்தது. இப்படிப் பல காரணங்கள் முதலாம் உலகப்போருக்கு வழிவகுத்தன, அதை உக்கிரம் ஆக்கின.

அமைதி ஒப்பந்த நிபந்தனைகளில் அடிவாங்கிய ஜெர்மனியின் மக்கள் தங்களுக்கிடையே உறுதியான தலைவர் உருவாகி உலக அளவில் ஜெர்மனிக்கு மீண்டும் மரியாதையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினார்கள். (அதன் உச்சக்கட்டம்தான் நாஜி கட்சி உருவானதும் அதன் தலைவராக அடால்ஃப் ஹிட்லர் பின்னர் தலையெடுத்ததும்).

போரிலிருந்து திரும்பிய (எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) ராணுவ வீரர்களின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. அவர்களில் பலர் போர்ச் சூழலால் மன பாதிப்பு அடைந்து இருந்தனர். உடல் ஊனமுற்றும் இருந்தனர். இவர்களைச் சரி செய்வதற்காகப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவ்வளவு ராணுவ வீரர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் உண்டானது.

அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் பாரிஸ் ஈபிள் டவரில் இருந்து முதல் வெடியை வெடித்து அதைக் கொண்டாடியது பிரான்ஸ் நா​ட்டு அரசு. சுமார் 500 மாணவர்கள் அந்த நாட்டு ராணுவ அமைச்சக அலுவலகத்துக்கு முன்பாகக் கூடித் திரும்பி வந்த ராணுவ வீரர்களை வரவேற்றனர். ஜெர்மனி வீரர்கள்பிரிட்டனிலும் கொண்டாட்ட மனநிலை உருவானது. "பதுங்கு குழிகளிலிருந்து ஜெர்மன் ராணுவ வீரர்கள் வெளிப்பட்டனர். எங்களை வணங்கிவிட்டு தங்கள் வழியில் சென்றனர். அவ்வளவுதான். இதைவிடக் கொண்டாட வேறென்ன வேண்டும்?" என்று ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.

ஹென்றி குந்தெர் என்ற ராணுவ அதிகாரி மிக வித்தியாசமான காரணத்துக்காக நினைவு கொள்ளப்பட்டார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த இவர், அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் எதிரணியைச் சேர்ந்த 60 பேரைக் கொன்றார். ஜெர்மன் ராணுவத்தினர் இதற்குச் சிறிதும் தயாராக இல்லை. ஏனென்றால் அமைதி ஒப்பந்தம் விரைவில் (அன்றே) வந்துவிடப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். போரின் கடைசி நாளன்று ஒரு வித உக்கிரம் காணப்பட்டது. முடிந்தவரை எதிரிகளைக் கொன்றுவிட வேண்டும் என்ற வெறி! ஆனால் அது போர் வெற்றிகளுக்கு முரணானது என்பதால் பிரான்ஸில் நவம்பர் 11 அன்று இறந்த பல பிரெஞ்சு வீரர்களின் கல்லறைகளில் அவர்கள் நவம்பர் 10 அன்றே இறந்ததாகக் குறிப்பிடப்பட்டது.முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: `போருக்குக் காரணம் நாங்களா?' இறுதியில் ஜெர்மனி சந்தித்த அவமானங்கள்!நாடுகள் எல்லாம் போரில் மடிந்த தங்களின் ராணுவ வீரர்களுக்காக நினைவகங்களை எழுப்பின. புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அப்படிப்பட்ட ஒன்றுதான். பிரான்ஸில் உள்ள நியூவ் சாப்பலே பகுதியில் முதலாம் உலகப்போரிலிருந்து இந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.இந்தியா கேட்

முதலாம் உலகப்போரில் வேறுவிதமான பாதிப்பை சீனா சந்தித்தது. மனபாதிப்பு. அத்தனை நாடுகளும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்டதாக அது நினைத்தது. தொடக்கத்தில் நேச நாடுகள் சீனா தங்களுடன் இணைந்து போராடுவதில் அக்கறை காட்டவில்லை. பின்னர் போரில் தங்களுக்குப் பெரும் சேதம் விளைந்திருந்த நிலையில் பிப்ரவரி 1916ல் 'ஜப்பானும் பிற நேச நாடுகளும் ஒத்துக்கொண்டால் சீன ராணுவத்தை நம் தரப்பில் ஏற்றுக்கொள்ளலாம்’ என்று அறிவித்தார் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஜான் ஜோர்டான். ஜப்பான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்காசியாவில் தனது முக்கியத்துவம் குறையக்கூடாது என்று அது நினைத்தது.

எனினும் போரில் மறைமுகமாகப் பங்கு கொண்டது சீனா. ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியது. அவர்கள் பீரங்கிகளை ரிப்பேர் செய்வது, வெடிகுண்டுகளைச் சரியாகச் சேமித்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்கள். சில சமயம் பதுங்கு குழிகளை வெட்டவும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.

ரஷ்ய சாம்ராஜ்யம் பெரும் மாற்றம் கண்டது. ஓட்டோமான் சாம்ராஜ்யம் அழிந்தது. ஆஸ்திரியா - ஹங்கேரி பிளவு கண்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பெரும் கேள்விக்கு உள்ளானது. அமெரிக்காவுக்கு உலகளவில் முக்கியத்துவம் கிடைத்தது. லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற உலக சமாதான அமைப்பு உருவானது. ரஷ்யப் புரட்சி, ஜெர்மனியில் நாசிசம், இத்தாலியில் பாசிசம் போன்றவை உருவாகக் காரணமானது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பகைமையை அதிகப்படுத்தியது. நேச நாடுகள் அணிகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. போரில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அபாயகரமானது என்பதை உணர வைத்தது.முதலாம் உலகப்போரில் இளைஞர்கள்இத்தனை பெரும் மாறுதல்களுக்கும் காரணமான முதலாம் உலகப்போர் பத்து கோடி இளைஞர்களின் உயிர்களைக் காவு வாங்கியதோடு, இருபது கோடி பேரை உடல் ரீதியாகப் பாதித்து, அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டுத்தான் ஓய்ந்தது.

- போர் முடிந்தது...


http://dlvr.it/T1Y5yN

Wednesday, 17 January 2024

இரண்டாவது ஆண்டாக மீண்டும் சரிந்த சீன மக்கள் தொகை..!

சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவில் அமலில் இருந்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக சீன அரசாங்கம் ஒரு குழந்தை திட்டத்தை நீக்கியது. பின்னர் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி சீர் பெற்று இருந்த நிலையில், கோவிட்19  காலக்கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்பட்டதோடு, அந்நாட்டில்  பிறப்பு விகிதமும் சமீபமான இரண்டு வருடங்களில் குறைந்து உள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி 16 முதல் 59 வயதுக்கு உடபட்ட தொழிலாளர்கள்  10.75 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் கணிப்பின்படி சீனா இந்த ஆண்டு பொருளாதாரத்தில் 5.2℅ உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் , கணித்த  அளவு உயர்வு இல்லை. இது, கடந்த 30 வருடங்களில் சந்திக்காத பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இதற்கு  பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.



Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T1W1hl

பாகிஸ்தான் எல்லைக்குள் இரானின் தாக்குதல்... அத்துமீறல் எனக் கொதிக்கும் பாகிஸ்தான்! - என்ன நடந்தது?

ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது  வான்வெளியில் நடத்தப்பட்ட இரானின் அத்துமீறல் எனக் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்லின்  இரண்டு முக்கியமான தலைமையகங்கள் அழிக்கப்பட்டதாக அல் அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இரானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உயிரிழப்புகள் நடந்த இடத்தை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குறிப்பிடாத நிலையில், அந்த தளங்கள் பலுசிஸ்தானில் இருப்பதாகவும், அது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய தலைமையகத்தை  குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரானின் தாக்குதலை "தனது வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல்" என்று விவரித்த பாகிஸ்தான், ``இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது

"தீவிரவாதம் என்பது எல்லா நாடுகளும் சந்திக்கும் பொதுவான அச்சுறுதல். அதற்கு சரியான கூட்டு நடவடிக்கை வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறி வருகிறது.  இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகள் மீதான இருதரப்பு நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் கடுமையாக குறைக்கிறது" என்று பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்களில், பாகிஸ்தான் மீது இரான் நடத்திய தாக்குதலில் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறி சேதமடைந்த வீடுகள் காட்டப்படுகின்றன. இரான்

ஜெய்ஷ் அல்-அட்ல் என்பது 2012 ஆண்டு இரானில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும். இது இரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் செயல்படும் சன்னி பயங்கரவாதக் குழு. பல ஆண்டுகளாக, ஜெய்ஷ் அல்-அட்ல் இரானிய பாதுகாப்புப் படைகள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியது. 

டிசம்பரில், சிஸ்தான் - பலூசிஸ்தானில் உள்ள காவல்நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் பொறுப்பேற்றது. அதில்  11 காவல் துறையினர்  கொல்லப்பட்டனர்.சிஸ்தான்-பலுசிஸ்தான் என்பது  ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


http://dlvr.it/T1Vc6B

Monday, 15 January 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய விவேக் ராமசாமி - காரணம் என்ன?!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில், 2020-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டும்தான் பிரதான கட்சிகளாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.டொனால்டு ட்ரம்ப்

இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி (37)-யும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கானப் பணிகளையும் மும்முரமாகத் தொடர்ந்தார். இதற்கிடையில், அமெரிக்காவின் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், 'டொனால்டு ட்ரம்ப் மோசடியாளர். எனவே இந்திய-அமெரிக்கரான எனக்கு வாக்களியுங்கள்' எனப் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக விவேக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.விவேக் ராமசாமி

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், ``நான் எனது இலக்கை அடையவில்லை. வெள்ளை மாளிகையில் எங்களுக்கு ஓர் அமெரிக்க தேசபக்தர் தேவை. மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்று சத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள். எனவே, நான் எனது பிரசாரத்தை இடைநிறுத்துகிறேன். மேலும், டொனால்டு ட்ரம்ப்பை ஆதரிக்கிறேன். அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`குழந்தையை பராமரிக்க 80 லட்சம் சம்பளம்' விவேக் ராமசாமி வீட்டில் குவியும் விண்ணப்பம்..!


http://dlvr.it/T1RQPT

இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை தலைமையகம்; அமெரிக்கா கண்டனம்!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை தொடர்ந்து உருவாகிவருவது, உலக நாடுகளுக்கு மத்தியில் அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியான நிலையில், இன்றளவும் போர் தொடந்து வருகிறது. இதற்கிடையில், சோமாலியா கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதாக ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும் ஐ.நா வரை பேசப்பட்டது.

BREAKING: EXPLOSIONS NEAR ERBIL AIRPORT HOUSING U.S. FORCES

Multiple loud explosions, possibly up to five, have been reported near Erbil, Iraq, close to an airport with U.S. military presence.

Source: Al Mayadeen pic.twitter.com/uLJQLixpMH— Mario Nawfal (@MarioNawfal) January 15, 2024




இந்த நிலையில்தான், இராக்கின் மீது இரான் தக்குதல் நடத்திய சம்பவம் விவாதப் பொருளாகியிருக்கிறது. இராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீதும், உளவுத்துறை தலைமையகத்தின் மீதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இரான் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ உட்பட 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் குறித்து இரான்,``ஜனவரி 3 அன்று, கெர்மானில் உள்ள தளபதி காசிம் சுலைமானியின் சமாதிக்கு அருகில் கூடியிருந்த மக்கள் மீது, இராக்கின் தீவிரவாதக் குழு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் , ராஸ்கில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 இரானிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி தரும்விதமாக, அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

BREAKING: IRANIAN BALLISTIC MISSILES STRIKE NEAR U.S. CONSULATE IN IRAQ

Iran claims responsibility for the barrage of missiles near the U.S. Consulate in Erbil, Iraq, citing retaliation for an Israeli strike in Syria.

The attack reportedly involved Fateh-110 ballistic…
https://t.co/xIRTO7TKGg pic.twitter.com/FUUxtoTEUe— Mario Nawfal (@MarioNawfal) January 15, 2024




மேலும், உளவு நடவடிக்கைகளை அதிகரித்து நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு மையமாகச் செயல்பட்டுவருவதால், இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான 'மொசாட் உளவு அமைப்பு' தலைமையகம் தாக்கப்பட்டது." எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,``இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYமத்திய கிழக்கில் போர் அபாயம்: ஏமனை தாக்கிய அமெரிக்கா; ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி என விளக்கம்


http://dlvr.it/T1RQ5K

Sunday, 14 January 2024

`மார்ச் 15-ம் தேதிக்குள் உங்கள் ராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள்!' - இந்தியாவுக்கு மாலத்தீவு கெடு

மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு, தான் அதிபரானவுடன் இந்தியாவுடான உறவை மறு ஆய்வு செய்துள்ளார். அதோடு தங்களது நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்தப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். `இந்திய ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுவேன்' என்று பிரசாரம் செய்தே தேர்தலில் வெற்றி பெற்றார். சொன்னதுபோல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், `அந்நிய படைகள் மாலத்தீவில் இருக்கக் கூடாது' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு மக்கள் உணவு போன்ற பெரும்பாலான தேவைகளுக்கு இந்தியாவையே நம்பி இருக்கின்றனர். முகமது முய்ஸு

அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள சுற்றுலா பகுதிகள் குறித்து சுட்டிக்காட்டி இருந்தார். பிரதமரின் இச்செயலை மாலத்தீவு பெண் அமைச்சர் உட்பட 3 அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து 3 அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதையடுத்து மாலத்தீவு அதிபர், சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அதிபரைச் சந்தித்துப் பேசினார். மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தைத் திரும்ப பெற இரு நாடுகளும் உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்திருந்தன. இதன் முதல் கூட்டம் மாலத்தீவில் உள்ள மாலே நகரத்தில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இந்திய தூதர் மகேஷ்வரிடம் மாலத்தீவு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. லட்சத்தீவு - மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்?'

இச்செய்தியை இந்தியா உறுதிபடுத்தவில்லை. ஆனால் கடந்த நவம்பர் மாதம் மத்திய அமைச்சர் கிரண், மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போதைய அதிபரைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மாலத்தீவில் இந்திய ராணுவம் தொடர்ந்து இருக்க இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றை எட்ட மாலத்தீவு அதிபர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலத்தீவு இந்திய பெருங்கடலில் சிறிய நாடாக இருந்தாலும், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு இடையே கப்பல்கள் சென்று வருவதில்முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் இந்திய போர்க்கப்பல்கள் தொடர்ந்து இப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய போர் விமானங்கள்தான் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது.சீனா - மாலத்தீவு - மோடி - இந்தியா

இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களும் மாலத்தீவில் இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் மட்டுமே மாலத்தீவில் இருக்கின்றனர். அவர்கள் மாலத்தீவில் மனிதாபிமான பணிகள், பேரிடர் மீட்பு பணிகள் மற்றும் சட்டவிரோத கடல் நடமாட்டத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

2013-ம் ஆண்டே அப்போது மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், முதன்முறையாக இந்தியாவை மாலத்தீவில் இருந்து அகற்றிவிட்டு, சீனாவுடன் உறவை நெருக்கமாக்குவது என்ற முடிவை எடுத்தார். ஆனால் அதன் பிறகு வந்த அதிபர் இப்ராகிம், இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணினார். அப்துல்லாவிற்கு கிரிமினல் வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அப்துல்லாதான் தனது சார்பாக முகமது முய்ஸுவை அதிபருக்கான வேட்பாளராக நியமித்தார். எனவேதான் அப்துல்லாவின் கொள்கையை முய்ஸு இப்போது அமல்படுத்த முயற்சிக்கிறார்.சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர்

இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று கருதி, மாலத்தீவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா முயற்சி மேற்கொள்கிறது. மற்றொரு புறம் சீனா மாலத்தீவிற்கு கடன் கொடுத்து, அதனை தனது அடிமையாக்கிவிடும் என்று மாலத்தீவு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாலத்தீவிற்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இரு நாடுகளிடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதால், இந்தியாவில் இருந்து மாலத்தீவு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. `நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' - இந்தியாவை மறைமுகமாகச் சாடிய மாலத்தீவு அதிபர்


http://dlvr.it/T1NnGw

`நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' - இந்தியாவை மறைமுகமாகச் சாடிய மாலத்தீவு அதிபர்

இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives' என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வெடிக்கவே, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மோடி - மாலத்தீவு

இன்னொருபக்கம், மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்ற சில நாள்களிலேயே, மாலத்தீவில் இருக்கும் தங்கள் படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்று கூறவே, சீனாவுக்குப் பின்னாலிருந்து முகமது முய்ஸு செயல்படுகிறார் எனப் பேச்சுகள் அடிபட்டன. இத்தகைய சூழலில் தற்போது இந்தப் பிரச்னை வெடிக்கவே, முகமது முய்ஸு சீனாவுக்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சொந்தமில்லை, அதிலிருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சொந்தம் என முகமது முய்ஸு இந்தியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐந்து நாள்கள் சீனப் பயணம் முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பியபோது ஊடகத்திடம் பேசிய முகமது முய்ஸு, ``நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்களைக் கொடுமைப்படுத்துவதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்காது. இந்தியப் பெருங்கடலில் நாங்கள் சிறிய தீவுகளைக் கொண்டிருந்தாலும், எங்களிடம் 9,00,000 சதுர கி.மீ பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலம் இருக்கிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு (இந்தியா) மட்டும் சொந்தமானதல்ல. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது.சீனா - மாலத்தீவு - மோடி - இந்தியா

இந்தியப் பெருங்கடலின் மிகப்பெரிய பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. நாங்கள் யாருக்குப் பின்னாலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசு" என்று கூறினார். முன்னதாக, இந்த ஐந்து நாள்கள் சீனப் பயணத்தில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் முகமது முய்ஸு பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இரு நாடுகளும் தங்களுக்குள் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.லட்சத்தீவு - மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்?'


http://dlvr.it/T1MVCh

Saturday, 13 January 2024

`ராணுவம் விழிப்புடன் உள்ளது; தைவானின் முயற்சிகளை நிச்சயம் முறியடிப்போம்!’ - எச்சரிக்கும் சீனா

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக்கொண்ட தைவான், அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கிறது. அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக இருப்பது, சீனாவை எரிச்சலுடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், தைவானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தைவானைத் தொடர்ந்து உரிமைக் கொண்டாடும் சீனா, இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறது.தைவான் Vs சீனா

இதற்கிடையில், தைவானில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பய்ட்டது. அதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனாலும், தைவான் அரசு தேர்தல் ஏற்பாடுகளை செய்துவந்தது. இந்த நிலையில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியோகாங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``தைவானைத் தனிநாடாகக் கருதி, சீனாவை விடுத்து சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்படும். சீன மக்களும், சீன ராணுவம் முழு நேரமும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, தைவானின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மேலும், தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் தைவானைப் போரின் ஆபத்தான நிலைமைகளை நோக்கி தள்ளுகிறது" எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், இன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் டிபிபி-யின் லாய் சிங்-தே (Lai Ching-te - DDP), கே.எம்.டி-யின் ஹூ யு-இ (Hou Yu-ih - KMT) மற்றும் டிபிபியின் கோ வென்-ஜே (Ko Wen-je - TPP) ஆகிய மூவர் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.தைவான்

இதற்கான வாக்குப்பதிவு தைவானில் இன்று காலைமுதல் நடந்து வந்தது. 24 பில்லியன் தைவான் மக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். தைவான் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...



இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs``இது எங்கள் தெய்வப்பூ... காலநிலை மாற்றத்தால் காணாமல் போகிறது" - தைவான் பழங்குடி மக்களின் ஆதங்கம்!


http://dlvr.it/T1Ks1T

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஏமனை தாக்கிய அமெரிக்கா; ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி என விளக்கம்

கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள்மீது ஏமன் நாட்டின் கடற்கொள்ளையர்களாக கருதப்படும் ஹவுதிகள் குழு தாக்குதல் நடத்தியது, சர்வதேச அளவில் பிரச்னையாக வெடித்தது. அந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும்விதமாக, அமெரிக்காவும், பிரிட்டனும் ஏமன் நாட்டின், ஹவுதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றன.ஜோ பைடன்

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான செங்கடலில், சர்வதேச கப்பல்களுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால், கப்பல் பணியாளர்களுக்கும், கடற்படையினர் மற்றும் எங்களின் நட்பு நாடுகளுக்கும், வணிகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது கிளர்ச்சியாளர்கள் 27 முறை தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதனால், 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அவர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை கட்டுப்படுத்தும் விதத்தில், ஏமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வரலாற்றில் முதல் முறையாகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன." எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா கப்பல் படை

ஒருபுறம், 2022 - பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரும் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. இந்தப் போர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், ஏமன் நாடு இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், ஏமன் மீது அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகள் சிலவும் தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை உருவாக்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்... துரிதமாக செயல்பட்டு மீட்ட இந்திய கடற்படை - நடந்தது என்ன?!


http://dlvr.it/T1Kc1L

Friday, 12 January 2024

`மிஸ் அமெரிக்கா' போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் விமானப்படை அழகி'!

அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த பைலட் மேடிசன் மார்ஷ் மிஸ் அமெரிக்க அழகிப் பட்டத்திற்காக போட்டியிட உள்ள முதல் அதிகாரி என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார்.

22 வயதான மேடிசன் மார்ஷ், அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே, பைலட்டாக வேண்டும் என்ற கனவு மேடிசனுக்கு இருந்தது.  

அவருடைய பெற்றோர் மேடிசனின் 13 வயதில் விண்வெளி முகாமுக்கு அனுப்பி, விண்வெளி வீரர்களையும் போர் விமானிகளையும்  சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.  மேடிசன் மார்ஷ் பொங்கல் பண்டிகை: கிளாம்பாக்கம், கோயம்பேடு - நீங்கள் போக வேண்டியது எந்தப் பேருந்து நிலையம்?

தனது கனவை நிறைவேற்றும் முனைப்போடு இருந்த மேடிசன் விமானப்படை அகாடமியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். பட்டம் பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு 2023 மே மாதம் `மிஸ் கொலராடோ அழகிப் பட்டம்’ வென்றார். 

அதன்பின் ஹார்வர்டு கென்னடி பள்ளியில், பப்ளிக் பாலிசி (Public Policy) பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். விமானப் படை பிரிவில், செகண்ட் லெப்டினன்டாக சேர்ந்த, அதேவேளையில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டிக்கான பயிற்சியும் பெற்று வந்தார். 

இவர் ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் ஃபுளோரிடா அரங்கில் நடக்கவிருக்கும் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில், 49 போட்டியாளர்களுடன் இணைந்து போட்டியிட உள்ளார்.

அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்து கொண்டு அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  

இது குறித்து மேடிசன் மார்ஷ் கூறுகையில் ``எனது வாழ்வில் பிடித்த இரண்டு பக்கங்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு பயணிப்பது அற்புதமான அனுபவம். மேடிசன் மார்ஷ் `அட உலக அழகி ஐஸ்வர்யா ராயா இவங்க': நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த பெண்... யார் இவர்?

விமானப்படை அகாடமியில் சேர்ந்த பின், படிப்புக்கு அப்பாற்பட்ட போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தேன். 

நான் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் மற்றும் ராணுவத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற என் விருப்பங்கள் அழகிப் போட்டிப் பயிற்சியுடன் ஒத்துப்போகின்றன’’ என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ராணுவத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதால் அதிகப்படியான மெனக்கெடல்கள் தேவைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு எதிர்காலத்தில் தான் டாப் கன் போர் விமானியாக (Top Gun fighter pilot)  வேண்டும் என்று மேடிசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  


http://dlvr.it/T1HjRK

Thursday, 11 January 2024

தனி அறை; சுவர் முழுக்க நிர்வாணப் புகைப்படங்கள், ஆவணங்கள் - பாலியல் குற்றவாளி குறித்த பகீர் தகவல்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர்மீது சிறுமிகள், பெண்கள் எனப் பலரையும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2005-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 13 மாதங்கள், சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு, 2019-ல் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீண்டும் கைதானார்.காவல்துறை

அது தொடர்பான வழக்கு விசாரணை நடக்கும்போதே, ஜெஃப்ரி திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டன், அவர் மனைவி ஹிலாரி கிளின்ட்டன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக சில பகீர் தகவல்களும் வெளியாகின.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இங்கிலாந்து வணிக அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை ஜெஃப்ரி வைத்திருந்திருந்தார். இது தொடர்பாக வெளியான தகவலில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் முக்கிய சாட்சியான வர்ஜீனியா கியுஃப்ரே (பாதிக்கப்பட்டவர்) அளித்த வாக்குமூலத்தில், ``நியூயார்க் நகர டவுன்ஹவுஸில் தி டன்ஜியன் என்ற ரகசிய அறையை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வைத்திருந்தார். அந்த அறை முழுவதும், அவரும், பாதிக்கப்பட்ட பெண்களும் உறவில் ஈடுபடுவது போன்ற பெரிய புகைப்படங்கள் இருந்தன.ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பொழுதுபோக்கு அறை, படுக்கையறை உட்பட பல்வேறு இடங்களில் அத்தகைய புகைப்படங்கள் இருந்தன. அவரது மேஜையில் குறைந்தது 50 புகைப்படங்கள் இருந்தன. சில நிர்வாண புகைப்படங்கள், சில மோசமான நிலையில் பெண்களுடன் இருக்கும் படங்களும் இருந்தன" என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.``AI செயற்கை நுண்ணறிவு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்...” - உருவாக்கிய ஜெஃப்ரி ஹிண்டன் கவலை!


http://dlvr.it/T1Fh1t

`நான் ஒரு மிளகாய் பிரியன்...' உலகின் அதிக காரமான 10 மிளகாய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை!

காரத்திற்காக சமையலில் பயன்படுத்தப்படும் மிளகாயை தெரியாமல் மென்றுவிட்டாலே கண்களில் கண்ணீர் வந்துவிடும். அதுவே காரணமான மிளகாயாக இருந்தால் அவ்வளவு தான்.

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என்று அறியப்படும் 10 பூட் ஜோலோகியா மிளகாயை (Bhut Jolokia Chillie) 30.1 வினாடிகளில் சாப்பிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர் என்பவர் கின்னஸ் சாதனை படைத்தது இருக்கிறார்.

காரமான உணவை விரும்பும் கிரெக் தனது வீட்டில் மிளகாயை வளர்க்கிறார். பல ஆண்டுகளாகக் காரமான உணவைச் சாப்பிட்டு தனது சகிப்புத்தன்மையை அதிகரித்து இருக்கிறார்.கிரெக் ஃபோஸ்டர்!``சிறுதானியங்கள், ஆர்கானிக் காய்கறிகள்... "சிறைக்கைதிகளுக்கு புதிய உணவுப் பட்டியல்!

ஏனெனில் பூட் ஜோலோகியா மிளகாய் அதீத காரத்தன்மை உடையது. பூட் என்ற வார்த்தைக்கு பேய் என்ற அர்த்தமாம். இந்த மிளகாயை சாப்பிடுகையில், அதன் காரம் ஒரு பேயைப் போலத் தோன்றுமாம். இதன் காரணமாகவே பூட்டியஸ் மக்கள் இப்பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.    

அவர் 10 மிளகாயை அசால்டாக சாப்பிடும் காட்சிகள் கின்னஸின் அதிகாரப்பூர்வ  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மிளகாயாக அவர் சாப்பிட்டு முடித்துவுடன் இறுதியில் தனது நாக்கை வெளியே நீட்டிக் காட்டுகிறார். அவர் சாப்பிடும் போது பிறர் கண்களில் கண்ணீர் வந்துவிடும் போல இருக்கிறது.

சாதனை படைத்த அப்போதே அவருக்கு கின்னஸ் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சாதனை படைத்த கையோடு கிரெக் கூறுகையில், ``இது எனது தனிப்பட்ட சவால். இந்த சாதனை மிளகாய் மீது எனக்கு இருக்கும் காதலையும், என்னால் எவ்வளவு தூரம் வரை அவற்றைச் சாப்பிட முடியும் என்பதையும் காட்டுகிறது. 

ஒரு மிளகாய் பிரியர் என்ற முறையில், சூப்பர் ஹாட் மிளகாய் பற்றிய விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். நான் மேலும் முயற்சி செய்வதையும், மிளகாய் சாப்பிடுவதையும் விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். ஒரே ஒரு செடியுள்ள உலகின் மிகச் சிறிய பூங்கா... கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற கதை!

காரமான மிளகாயைச் சாப்பிட்டது கிரெக்கின் முதல் கின்னஸ் சாதனையல்ல. இவர் டிசம்பர் 2021-ல் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாயை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நவம்பர் 2021-ல் `ஒரு நிமிடத்தில் அதிக புட் ஜோலோகியா மிளகாயைச் சாப்பிட்டவர்' என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.

2017 -ல் ஒரு நிமிடத்தில் கரோலினா ரீப்பர் மிளகாயை மொத்தமாக120 கிராம் சாப்பிட்டு மற்றொரு சாதனையைப் படைத்தார். தொடர்ச்சியாகக் காரமான மிளகாயை சாப்பிட்டு கிரெக் சாதனை படைத்து வருகிறார்.

கண்களில் நீர் ததும்பும் காரமான உங்களது சாதனைக்கு வாழ்த்துகள் கிரெக்!


http://dlvr.it/T1FGy1