Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 22 August 2023

நடுக்கடலில் உயிருக்குப் போராடிய சீன பிரஜை: நள்ளிரவில் ஹெலிகாப்டரில் சென்று மீட்ட இந்தியக் கடற்படை!

இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா இந்திய நிலப்பரப்பை அபகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான படைகளைக் குவித்திருக்கிறது. அதேசமயம் மனிதாபிமான உதவிகளை இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. சீனாவிலிருந்து யுஏஇ நாட்டுக்கு ஆராய்ச்சி கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பல் மும்பையிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் சென்றபோது அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்தியா - சீனா மாரடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே உதவி கேட்டு சீன கப்பலிலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. இது குறித்து மும்பையிலுள்ள கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் கிடைத்ததும், உடனே அந்த கப்பலுடன், கடற்படை அதிகாரிகள் தொடர்புகொண்டனர். முதல் கட்டமாக போன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 17-ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று சீன கப்பல் இருந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடலில் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் சென்று கப்பலில் இருந்த நோயாளியை மீட்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும், இந்தியக் கடற்படையினர் மிகவும் இருட்டான சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சீன பிரஜையை மீட்டனர். என் வெய்யாங் என்ற அந்த நோயாளியை இந்தியக் கடற்படை அதிகாரிகள் மீட்டு, அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சீன பிரஜையைத் தக்க நேரத்தில் காப்பாற்றியதற்கு இந்தியாவிலுள்ள சீன தூதரகம் இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsணோவ்... துல்கர்ணா.. ! நீ மாஸ்ணா... ! தி ரியல் பேன் இந்தியா ஸ்டார் - துல்கர் சல்மான் ஏன் தெரியுமா? 
http://dlvr.it/Sv0nsw

0 comments:

Post a Comment