Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 30 November 2023

சதித்திட்டம்: `இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம்’ - அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.`கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்ற கனடாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் அமெரிக்காவும், ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன்

மேலும், சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்துச் செயல்படும் நியூயார்க் வாசியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் ஒருவருடன் 52 வயது நபர் பணிபுரிந்ததாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று, இஸ்ரேலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், "இந்திய அரசு அமெரிக்காவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இது இந்தியா அரசின் பொருத்தமான முடிவு. மேலும் இந்தியாவின் நடவடிக்கையைக் காண எதிர்நோக்கி உள்ளோம்," எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
``அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்!" - ஜஸ்டின் ட்ரூடோ


http://dlvr.it/SzYG51

Wednesday, 29 November 2023

சாலட்டில் பரிமாறப்பட்ட மனித விரல்; அதிர்ந்துபோன வாடிக்கையாளர்! - என்ன நடந்தது?

லண்டனைச் சேர்ந்தவர் அலிசன் கோஸி. இவர் அமெரிக்காவுக்குத் தொழில்முறைப் பயணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருக்கிறார். அப்போது நியூயார்க்கின் மவுன்ட் கிஸ்கோவிலுள்ள ஒரு உயர்தர உணவகத்தில் சாப்பிடச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குப் பரிமாறப்பட்ட சாலட்டில் மனித விரல் துண்டு இருந்திருக்கிறது. அதைக் கவனிக்காமல் கடித்தவர், அது விரல் துண்டு என்பதை உணர்ந்ததும், கடுமையான பதற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார்.அமெரிக்கா

இது தொடர்பாக அவர் வெளியே கூறுவதற்கு முன்பு கடுமையான அதிர்ச்சி காரணமாக ஒற்றைத் தலைவலி, மனநலக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் பதற்றம், குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றால் அவதிப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை, வெஸ்ட்செஸ்டர் மாவட்ட சுகாதாரத்துறை ஜெர்னலிடம், இந்த விவகாரம் குறித்துப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது.

இது தொடர்பாகப் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், ``சம்பவம் நடந்த அன்று, உணவகத்தில் மேலாளர் ஒருவர் அருகுலா எனும் இலையை நறுக்கும்போது தவறுதலாக அவரின் சுட்டு விரலை வெட்டிவிட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இதற்கிடையில், துண்டான விரல், வாடிக்கையாளருக்காகத் தயாரிக்கப்பட்ட சாலட்டில் விழுந்திருக்கிறது. உணவு பரிமாறிய நபர், அதை கவனிக்காமல் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.உணவகம்

அலிசன் கோஸியும் அதை அப்படியே கடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. எனவே, உணவு விடுதியின் இந்த அஜாக்கிரதையான செயலுக்கு 900 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.

ஆனால், அலிசன் கோஸி, ``இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எனக்குத் திருப்தி இல்லை. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான எனக்கு, இன்னும் ஏதேனும் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.சந்துக்கடைகளும், போலி மதுபான விற்பனையும்; அச்சம் தெரிவிக்கும் சேலம் மக்கள்- கண்டுகொள்ளுமா காவல்துறை?


http://dlvr.it/SzVmjB

``அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்!" - ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா பிரதமர், ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார். `கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா - கனடாவுக்கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.ஜஸ்டின் ட்ரூடோ - மோடி

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் அமெரிக்காவும், இந்தியாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `அமெரிக்க மண்ணில் சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரைக் கொல்வதற்காக நடந்த சதித்திட்டத்தை அமெரிக்கா மிகுந்த தீவிரத்துடன் எதிர்கொண்டிருக்கிறது.

சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்துச் செயல்படும் நியூயார்க் நகரவாசியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் ஒருவருடன் 52 வயது நபர் பணிபுரிந்த தகவலும் கிடைத்திருக்கிறது. இது குறித்து இந்திய அரசிடம் கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். அமெரிக்க மண்ணில் நடந்த சீக்கியர்மீதான கொலை முயற்சி ஆச்சர்யத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது' எனத் தெரிவித்திருந்தது.ஜஸ்டின் ட்ரூடோ

இந்த நிலையில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திகள் அனைத்தும், ஆரம்பத்திலிருந்தே நாம் பேசி வருவதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதை இந்தியா பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்தியா இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.`குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?'- ஜஸ்டின் ட்ரூடோ கேள்வியும், நெதன்யாகு பதிலும்!


http://dlvr.it/SzVXdq

அமெரிக்கா: தாத்தா, பாட்டி, மாமாவைச் சுட்டுக் கொன்ற இந்திய மாணவர் - என்ன காரணம்... போலீஸ் விசாரணை!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலுள்ள நியூ டர்ஹாம் சாலையில் வசித்தவர் ஓம் பிரம்பட் (23). குஜராத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் படித்துவருகிறார். ஓம் பிரம்பட்டுடன் அவரின் தாத்தா, பாட்டியான திலீப்குமார் பிரம்பட் (72), பிந்து பிரம்பட் (72), மாமா யஷ்குமார் பிரம்பட் (38) ஆகியோர் வசித்துவந்தனர். இந்த நிலையில், ஓப் பிரம்பட் வீட்டிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.முதிய தம்பதி

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், திலீப்குமார் பிரம்பட், பிந்து பிரம்பட் ஆகியோரைச் சடலமாக மீட்டனர். யஷ்குமார் பிரம்பட்டை பலத்த காயமடைந்த நிலையில் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தாத்தா, பாட்டி, மாமா ஆகியோர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களைக் கொன்ற குற்றத்துக்காக ஓம் பிரம்பட் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

தன்னுடைய உறவினர்களைச் சுடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாகத் தெரிவித்த ஓம் பிரம்பட், எதற்காகக் கொலைசெய்தார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாகப் பேசிய ஓம் பிரம்பட் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், ``திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். இதற்கு முன்னரே அந்த வீட்டுக்குள் குடும்பத் தகராறு நடந்தது, ஞாபகம் இருக்கிறது. அப்போதே காவல்துறையும் வந்தது.காவல்துறை

அதன் பிறகு, ஓம் பிரம்பட் மட்டும் சில மாதங்கள் வேறு ஓர் இடத்தில் தனியே தங்கியிருந்தான். குடியிருப்பு முழுவதும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, அதை ஆய்வு செய்தாலே குற்றம் குறித்த அதிக தகவல்கள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்ல சதி'- அமெரிக்காவின் தகவலும், இந்தியாவின் பதிலும்!


http://dlvr.it/SzT0nY

Tuesday, 28 November 2023

100 சிங்கிள்ஸுக்கு டேட்டிங் ஏற்பாடு செய்த தென்கொரியா அரசு... என்ன நடந்தது தெரியுமா..?

ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் குறையும் போது, அதனை நிவர்த்தி செய்ய அரசு சில முயற்சிகளை மேற்கொள்ளும். இந்தநிலையில் தென்கொரியா நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இளைஞர்களிடையே பிளைண்டு டேட்டிங் (Blind Dating) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. 

தென்கொரியாவின் சியாங்னம் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 100 தென்கொரிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 20 முதல் 30 வயதுக்குட்பட்ட `சிங்கிள்ஸ்' பங்கேற்றனர். அழகான ஆடைகளை அணிந்து கொண்டு அதில் நேம் டேகையும் தொங்கவிட்டு இருந்தார்கள்.Datingஇரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா?

இவர்களை மகிழ்ச்சியாக வைக்க கேம்களும், இலவச ஒப்பனை சேவைகளும் ரெட் ஒயின் மற்றும் சாக்லேட்டுகளும் இருந்தன. 

இளைஞர்களிடையே திருமணம் மீதான ஈடுபாடு குறைந்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கொருவர் பழகி அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்த டேட்டிங்கில் தங்களுக்கான இணையை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். அதோடு தேர்ந்தெடுத்த இணையோடு வரும்காலத்தில் குழந்தையைப் பெறுவார்கள் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

`இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மூன்று முறை விண்ணப்பிக்க வேண்டும். இது எந்தளவு போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை’ என தென்கொரியாவில் அரசு ஊழியராக இருக்கும் 36 வயதான லீ யூ-மி தெரிவித்துள்ளார்.``காஸாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது!" - உலக சுகாதார அமைப்பு வேதனை

இந்த ஆண்டு ஐந்து சுற்று நிகழ்வுகளுக்குப் பிறகு, 460 பேரில் 198 பேர் ஜோடிகளாக நிகழ்வை விட்டு வெளியேறினர். தங்கள் ஜோடிகளுடன் தொடர்புகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டனர் என தென்கொரிய அரசு கூறியுள்ளது.

சிங்கிள்ஸ் பலரும் `இந்த நிகழ்ச்சிக்கு நாங்களும் வரலாமா' என்பது போன்ற நகைச்சுவையான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்...  


http://dlvr.it/SzQ4Cw

Saturday, 25 November 2023

சீனாவில் இருந்து கூரியர் மூலம் கெமிக்கல்... மும்பையில் போதைப்பொருள் தயாரிப்பு!

மும்பை அருகே மொகாடா என்ற இடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்து வந்த சமீர்(45) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மும்பை முழுவதும் சிறு போதைப்பொருள் வியாபாரிகளுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சமீர் இதற்கு முன்பு ஐதராபாத்தில் கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை செய்த அனுபவம் பெற்றவர். சீனாவில் இருந்து கெமிக்கல்களை இறக்குமதி செய்வது தொடர்பான முன் அனுபவங்களையும் பெற்றார். போதைப்பொருள் தொழிற்சாலை

அந்த அனுபவங்களை பயன்படுத்தி சீனாவில் இருந்து கெமிக்கல்களை இறக்குமதி செய்து போதைப்பொருள் தயாரித்து இருப்பது தெரிய வந்தது. ஆன்லைன் மூலம் குறைந்த கட்டணத்தில் கெமிக்கல்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களை தேடினார். இறுதியில் சீனா நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஏஜென்ட் மூலம் கெமிக்கல்களை குறைந்த கட்டணத்தில் சப்ளை செய்வதாக தெரிவித்தது. இதையடுத்து அந்நிறுவனத்துடன் சமீர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனத்திடம் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய கெமிக்கலை நேரடியாக தனது பெயருக்கு வரவழைத்தால் தெரிந்துவிடும் என்று கருதி ரத்னகிரியில் உள்ள தனது நண்பர் பெயருக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.

அங்கிருந்து அதனை சாலை மார்க்கமாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு தேவையான பணத்தை ஹவாலா முறையில் சமீர் கொடுத்துள்ளார். இது போன்ற பரிவர்த்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கு புதிய போன் நம்பரை பயன்படுத்தி வந்துள்ளார். பார்க்க மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் சமீர் தனது போதைப்பொருள் தொழிற்சாலையில் போதைப்பொருளை தயாரித்து அதனை தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டு வருவார். அவற்றை பயந்தரை சேர்ந்த கெளதம் கோஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். போதை பொருள் பறிமுதல்

கெளதம் கோஷ் போதைப்பொருளை சிறிய பாக்கெட்களாக மாற்றி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் விற்பனை செய்துள்ளார். சமீருக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்களை சப்ளை செய்த ஒருவர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். அவரை இவ்வழக்கில் சாட்சியாக மாற்றி இருக்கிறோம்'' என்று தெரிவித்தார். கடந்த மாதம் 21ம் தேதி பயந்தர் லாட்ஜ் ஒன்றில் போலீஸார் ரெய்டு நடத்தி 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />

http://dlvr.it/SzHq6Q

Friday, 24 November 2023

``இதயம் பலவீனப்பட்டாலும் கொள்கை தளராது" நோபல் பரிசு வென்ற நம்பிக்கை மனுஷி நர்கேஸ் முகமதி..!

பெண் உடையைச் சுற்றிய அரசியல் உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவில் விரவிக்கிடக்கிறது. பண்டைய காலந்தொட்டே பெண்ணின் ஆடைத்தேர்வில் அவளின் குடும்பமும் சமூகமுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அவ்வப்போது வெடித்துள்ளன. சமீபத்திய உதாரணம், இரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம். இரானிய பெண்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்துள்ள இந்தப் போராட்டத்தில் திரையுலகினர், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்த பெண்களும் களமிறங்கியுள்ளனர். அவர்களில் முக்கிய முகம் நோபல் பரிசு பெற்ற நர்கேஸ் முகமதி. நர்கேஸ் முகமதி| Narges Mohammadi அமைதிக்கான நோபல் பரிசு: ``வெற்றி நிச்சயம் கிடைக்கும்” சிறையிலிருந்து நர்கஸ் முகமதி எழுதிய கடிதம்...

யார் இந்த நர்கேஸ் முகமதி?



இரானில் ஸான்ஜென் என்னுமிடத்தில் 1972-ம் ஆண்டு பிறந்தவர் நர்கேஸ் முகமதி. இரானிலுள்ள `Payam hajar’ என்னும் வார இதழில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். மனித உரிமை அமைப்பொன்றில் இணைந்து பொது வாழ்க்கையிலும் ஈடுபடத் தொடங்கினார். தேசிய அமைதிக்கான சபையை ( National peace council) நிறுவியுள்ளார். மனித உரிமைப் போராட்டத்திலும் பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நர்கேஸ் முகமதி, 2011-ம் ஆண்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த பிறகு, மரண தண்டனைக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இதனால் 2015-ம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னுடைய 51 வருட வாழ்க்கையில் 13 முறை கைது செய்யப்பட்டார் நர்கேஸ். சிறை வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. உறவுகளின் பிரிவு, மன அழுத்தம், ஆரோக்கிய மான உணவு கிடைக்காதது போன்ற பல இன்னல்கள் இருக்கும், ஆனால், மக்களுக்கான அரசியலில் பிடிப்பும், மன உறுதியும் இருந்தால் மட்டுமே அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முடியும். சிறைக்குள் பெண்கள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுவதைக் கண்ட முகமதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சிறைக்குள் அடைத்தாலும் தன்னுடைய இயக்கத்தைத் தடுக்க முடியாது என்று செயலில் நிரூபித்தார். பொது வாழ்க்கை, சிறைவாசம் எல்லாம் குடும்ப உறவுகளை அவரிடமிருந்து தூரப்படுத்தியுள்ளன. 2012-ம் ஆண்டு முகமதியின் கணவர் தகி ரஹ்மானி சில காரணங்களால் இரானை விட்டு வெளியேறினார், தாய் முகமதி சிறையில் இருப்பதால் குழந்தைகளும் அப்பாவுடன் சேர்ந்து இரானை விட்டு வெளியேறியுள்ளனர்.நர்கேஸ் முகமதிஹிஜாப் முதல் சமூக வலைதளப் பயன்பாடு வரை... இரான் பெண்களுக்கு விடுதலையே இல்லையா?

நர்கேஸ் முகமதியைப் பார்க்கும்போது, ``ஆண்கள் பெண்களுக்கு தாய்மை ஒன்றுதான் பேறு என்று சொல்லும்போது, பெண்களின் மற்ற உரிமைகள் பறிபோகும். தாய்மையை அனுபவிக்கும் பெண்களுக்கு அது குறித்துக் கூற அதிக உரிமை உண்டு. பெண் தாய்மையை போராட்டத்துடன் இணைக்கும்போது அது பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக உள்ளது” என்ற எழுத்தாளர் வ.கீதாவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. தன் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லையே என்னும் ஆற்றாமையை அனைத்து மக்கள் மீது அன்பு செலுத்துவதில், அவர்களின் உரிமைக்காகப் போராடுவதில் தீர்த்துக்கொள்கிறார் நர்கேஸ்.

2018-ம் ஆண்டு இரான் அரசின் சீர்திருத்த முடியாத தன்மையை வன்மையாகக் கண்டித்த அரசியல் ஆளுமைகளில் முகமதியும் ஒருவர். சமீபத்தில் இரானில் கட்டாய ஹிஜாப் அறிவிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாஷா அமினி என்ற இளம்பெண் கொலைசெய்யப்பட்ட பின்னர் தீவிரமடைந்த போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் நர்கேஸ் முகமதி 2022-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.சிறைஹிஜாப் அகற்றம்; சமூக ஊடகப் பதிவுகள் - இரானில் நடிகைகள் கைது!

சிறையில் இருந்தபோதே 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நர்கேஸுக்கு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாம் இரானிய பெண் நர்கேஸ் முகமதி. இவ்வளவு பெரிய அங்கீகாரத்துக்குப் பின்னும் அவரது சிறை வாழ்க்கை தொடர்கிறது. 51 வயதாகும் நர்கேஸுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பெறச் சென்ற அவர் ஹிஜாப் அணிய மறுத்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கெதிராக உண்ணாவிரத போராட்டத்தை நிகழ்த்தினார் நர்கேஸ்.

இதயம்தான் பலவீனப்பட்டுள்ளதே தவிர தன்னுடைய மன உறுதியும் கொள்கையும் அரசியல் பிடிப்பும் பலவீனப் படவில்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கும் நர்கேஸ் முகமதிக்கு வாழ்த்துகள்.


http://dlvr.it/SzG0mW

Thursday, 23 November 2023

அமெரிக்காவில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய இளைஞர் மரணம்; கொலையா... நடந்தது என்ன?

அமெரிக்காவில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய இளைஞர், மர்மமான முறையில் காரில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி உயிரிழந்ததாக அறியப்படும் இந்தியர் ஆதித்யா அட்லாகா. இவர், கடந்த 2018-ல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் இந்திய இளைஞர் மரணம்

அதைத் தொடர்ந்து, 2020-ல் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உடலியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இத்தகைய சூழலில், கடந்த நான்காண்டுகளாக சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் படித்துவந்தார். இந்த நிலையில், நவம்பர் 9-ம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்டில் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார் ஆதித்யா அட்லாகா.

காரின் பக்கவாட்டிலுள்ள ஒரு கண்ணாடியில் குறைந்தது மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது. அப்போது அந்த வழியாகச் சென்ற ஓட்டுநர்கள் 911 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு போலீஸிடம் இதனைத் தெரிவித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து UC மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆதித்யா அட்லாகா, இரண்டுநாள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ மையத்திலேயே உயிரிழந்தார். இதனை விவரித்த சின்சினாட்டி போலீஸ் லெப்டினன்ட் ஜொனாதன் கன்னிங்ஹாம், சம்பவம் நடந்த அன்று காலை 6:20 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவித்தார்.ஆதித்யா அட்லாகா

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, ``ஒரு கல்லூரியாகவும், ஆதித்யா அட்லாகாவின் கல்வி இல்லமாகவும், அவரின் குடும்பத்தினருக்கும், அவரை நண்பராகவும், சக ஆராய்ச்சியாளராக அறிந்தவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியிருக்கிறது. அதேசமயம். இதுதொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இதுவரையில் எந்தவொரு நபரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸார் தொடர்ந்து இதில் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.கற்கை நன்றே... `அமெரிக்காவில் பயிலும் 4 வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியர்' - ஆய்வுத் தகவல்!


http://dlvr.it/SzDVCf

சீனாவில் என்ன நடக்கிறது..? குழந்தைகளை பாதிக்கும் மர்ம நோய்கள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!

கோவிட் தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத சீனா மீண்டும் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

சீனாவில் மர்மமான நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவிட் நிமோனியாகசப்புத் தக்காளி, பக்வீட், கினோவா, டெப், தினை... லாபம் கொடுக்கும் சர்வதேச பயிர்கள்! சாகுபடி எப்படி?

பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர்.

ஏற்கெனவே கோவிட் தொற்றுப்பரவல் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவியதால் இந்த பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவில் பரவும் மர்ம நோய்...



இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், ``மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.  

கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன'' என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை காரணமாகச் சுட்டிக் காட்டி உள்ளனர்.நிமோனியா Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று?

நோய் எவ்வாறு பரவுகிறது, ஆய்வக முடிவுகள், குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது. 

அதேசமயம் மக்களிடையே நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையையும் வழங்கி உள்ளது.

ஏற்கெனவே கோவிட் தொற்று சமயத்தில் சீனாவின் வெளிப்படையற்ற தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. தற்போது சீனாவிடம் கேட்டுள்ள விவரங்கள் அளிக்கப்படுமா என்பதை வரும் நாள்களில் தான் பார்க்க வேண்டும்.


http://dlvr.it/SzD8DG

கான்பூர் நகர் அருகே ரயிலில் தீ! பெரும் புகை!!

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று  வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது. நல்லவேளையாக யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

கான்பூர் நகர் மாவட்டத்தில் உத்ரிபுர - பில்ஹர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மாலை திடீரென பொதுப் பெட்டியொன்றில் திடீரென பெரும் புகை ஏற்பட்டது.

தீப்பற்றியதாகவும் வெறும் புகை மட்டுமே என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயிலின் பிரேக் அமைப்பில் நேரிட்ட கோளாறு காரணமாக உராய்வு ஏற்பட்டதால் புகை தோன்றியதாக ரயில்வே வட்டாரங்கள்  தெரிவித்தன.

இதையும் படிக்க: தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் வாகன நெரிசல்!

பிரேக் அமைப்பு சீர் செய்யப்பட்ட பின் ரயில் புறப்பட்டுச் சென்றதாகவும் தீப்பிடிக்கவில்லை என்றும் இந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Dkq8LzP https://ift.tt/CKUNrZ8
via IFTTT

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச் சதி'- அமெரிக்காவின் தகவலும், இந்தியாவின் பதிலும்!

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா பிரதமர், ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார்.இந்தியா- கனடா

`கனட குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்!' என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா - கனடாவுக்கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவும், இந்தியாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் கூறுகிறது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `அமெரிக்க மண்ணில் சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரைக் கொல்வதற்காக நடந்த சதித்திட்டத்தை அமெரிக்கா மிகுந்த தீவிரத்துடன் எதிர்கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய அரசிடம் உயர்மட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். அமெரிக்க மண்ணில் நடந்த சீக்கியர்மீதான கொலை முயற்சி ஆச்சர்யத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இது போன்று செயல்படுவது இந்தியர்களின் கொள்கையல்ல.குர்பத்வந்த் சிங்

இந்திய அரசும் இந்தப் பிரச்னையை விசாரித்து வருகிறது என்பதை புரிந்துகொள்கிறோம். மேலும், வரும் நாள்களில் இதைப் பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிப்போம். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பாக, இந்தியா இந்த விவகாரத்தைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``அமெரிக்க மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலைசெய்யும் திட்டத்தை, அமெரிக்கா முறியடித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு மற்றவர்களுடனான தொடர்பு குறித்து அமெரிக்கா வெளியிட்டிருக்கும் தகவல்கள் குறித்து, விசாரித்து வருகிறோம். இந்த விவகாரம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், இது போன்ற செய்திகளை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. எனவே, இது போன்ற சிக்கல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கெனவே ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.41 தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்ற கனடா: `நிலைமை மோசமாகாமல் இருக்க நடவடிக்கை’ என விளக்கம்!


http://dlvr.it/SzCPtM

Monday, 20 November 2023

சீனாவில் நடந்த சூதாட்டம்; 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்தாரா மகாராஷ்டிரா பாஜக தலைவர்? | பின்னணி

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு பா.ஜ.க தலைவர்களும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி.சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பா.ஜ.க.தலைவர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே சீனாவில் நடந்த சூதாட்டத்தில் ரூ.3.5 கோடியை செலவு செய்துள்ளார். சூதாட்டத்தில் பவன்குலே

இது தொடர்பாக என்னிடம் 27 புகைப்படங்கள் மற்றும் ஐந்து வீடியோக்கள் இருக்கிறது. ஆனால் நான் அதனை வெளியிடவில்லை. அதனை வெளியிட்டால் பவன்குலேவுக்கும் அவரது கட்சிக்கும் தர்மசங்கடமாகிவிடும். சூதாட்டம் நடக்கும் நடக்கும் இடத்தில் பவன்குலே என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான் எனது கேள்வி. ஒரு நாள் இரவில் ரூ.3.5 கோடியை செலவு செய்துவிட்டதாக சிலர் என்னிடம் சொன்னார்கள். சூதாட்டம் விளையாடவில்லை என்றால் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்.

அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத்தில் பொழுதை கழிக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் ராவத்

இதற்கு பா.ஜ.க. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''எங்களது மாநில கட்சி தலைவர் எப்போதும் சூதாட்டத்தில் பங்கேற்றது கிடையாது. அங்கு அவர் குடும்பத்தோடு சென்று இருந்தார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `ஆதித்ய தாக்கரே கையில் இருப்பது என்ன பிராண்ட் விஸ்கி?’ என்று கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக ஒரு புகைப்படத்தையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''பவன்குலே தனது குடும்பத்தோடு ரெஸ்டாரன்டுக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு சூதாட்டமும் நடந்திருக்கிறது'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />

http://dlvr.it/Sz5scw

`நாய் இறைச்சியை உட்கொள்ளும் நூற்றாண்டு கால பழக்கம்' - தடை விதிக்க முன்வந்த தென் கொரியா அரசு!

தென் கொரியாவின் நூற்றாண்டு கால பழமையான பாரம்பர்ய பழக்க வழங்கங்களில் ஒன்று, நாய் இறைச்சியை உட்கொள்ளுதல். இந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. இத்தகைய சூழலில்தான், தென் கொரியாவின் ஆளுங்கட்சியான பீப்பிள் பவர் கட்சி (People Power Party), இந்தாண்டின் இறுதிக்குள் நாய் இறைச்சியை உட்கொள்வதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. நாய் இறைச்சியை உட்கொள்ளும் தென் கொரிய மக்களின் பழக்கத்துக்கு, சர்வதேச அளவில் பல விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தற்போது, தென் கொரியாவிலேயே இதற்கான எதிர்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.நாய் | மாதிரிப் படம்

இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது, அந்த நாட்டு இளைய தலைமுறையிடம் வளர்ந்துவரும் பொது உணர்வு தான். இது, விலங்குகளின் நலன் மீதான தென் கொரியச் சமூகத்தின் மாறுபாடடைந்த பார்வையைப் பிரதிபலிக்கிறது. மேலும், சர்வதேச விலங்கு உரிமைக் குழுக்களின் விமர்சனங்கள் மற்றும் உலகளவில் வளர்ந்து வரும் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாய் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகங்களுக்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவியுடன் கூடிய சலுகைக் காலம் வழங்குவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது.

தென் கொரிய அரசின் இத்தகைய முடிவை விலங்குகள் உரிமைக் குழுக்கள் வரவேற்றிருக்கின்றன. இதுபற்றி ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் ஒரு அறிக்கையில், ``பல ஆண்டுகளாக இந்தக் கொடுமைக்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்களின் கனவு, இந்த முடிவால் நனவாகும்" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் விலங்குகள் உரிமைச் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய ஆளும் பீப்பிள் பவர் கட்சியின் கொள்கைத் தலைவர் யு இயு-டாங் (Yu Eui-dong), ``நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிராக வரும் சமூக விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு, சிறப்புச் சட்டம் இயற்றுவதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல்

தென் கொரிய அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) கூட, நாய் இறைச்சி உண்பதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். எதிர்ப்பதோடு நிற்காமல், தன் கணவரான அதிபர் யூன் சுக் இயோலுடன் (Yoon Suk Yeol) சேர்ந்து தெருநாய்களையும் தத்தெடுத்திருக்கிறார் கிம் கியோன் ஹீ.

இதற்கு முன்பு, இயற்றப்பட்ட இறைச்சி நுகர்வு தடுப்பு மசோதாக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு, விவசாயிகள், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலைகளால் தோல்வியடைந்தன. அதோடு, நாய் இறைச்சி உண்ணும் இந்த பழம்பெரும் வழக்கம், கோடை வெப்பத்தை வெல்வதற்கான வழியாகவும் கருதப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்த நடைமுறை பெரும்பான்மையாகக் குறைந்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமே இன்னமும் நாய் இறைச்சி உண்பதாகவும், சிறிய உணவகங்களில் மட்டுமே அவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.தென் கொரியா

தென் கொரியாவில் இப்போதைக்கு, சுமார் 1,150 நாய் வளர்ப்புப் பண்ணைகள், 34 இறைச்சிக் கூடங்கள், 219 விநியோக நிறுவனங்கள், சுமார் 1,600 நாய் இறைச்சி உபயோகிக்கும் உணவகங்கள் இயங்கி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்து ஆண்டு நடத்தப்பட்ட Gallup Korea கணக்கெடுப்பின்படி 64 சதவிகிதம் பேர் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டில் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே நாய் இறைச்சி உட்கொண்டதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இது, 2015-ல் 27 சதவிகிதத்திலிருந்து இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது.ஒரு வயது வரை குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம்... தென்கொரியா அறிவித்த சலுகைக்கு காரணம் என்ன?


http://dlvr.it/Sz59SC

Sunday, 19 November 2023

``இந்தியா தனது ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்!" - மாலத்தீவு புதிய அதிபரின் கோரிக்கையும் பின்னணியும்

மாலத்தீவின் புதிய அதிபராக நவம்பர் 17-ம் தேதி அன்று பதவியேற்ற முகமது மூயிஸு (Mohamed Muizzu), மாலத்தீவிலிருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முகமது மூயிஸு தனது கோரிக்கையை, இந்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடனான சந்திப்பின்போது முறையாக தெரிவித்தும் இருக்கிறார்.முகமது மூயிஸ் - கிரண் ரிஜிஜூ

முக்கியமான சுற்றுலாத் தலமான மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸு பதவியேற்ற உடனேயே இவ்வாறு இந்தியாவுக்கு அழுத்தம் தரும் வகையில் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

முகமது மூயிஸும், சீனாவும்!

மாலே மாகாணத்தின் முன்னாள் அமைச்சரும், மேயருமான அதிபர் முகமது முய்ஸு, 2013 முதல் 2018 வரை மாலத்தீவின் அதிபராக இருந்து சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கிய முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு (Abdulla Yameen) நெருக்கமானவர். இதே முகமது முய்ஸுதான், சீனாவுடன் வலுவான உறவை விரும்புவதாக ஒரு வருடத்துக்கு முன்பு கூறியிருந்தார்.சீனா - மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

அதாவது, ``2023-ல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்நோக்குகிறோம். அப்படி ஆட்சிக்கு வருகையில், அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எங்கள் இரு நாடுகளுக்கும் (சீனா - மாலத்தீவு) இடையிலான வலுவான உறவுகளின் அத்தியாயத்தை எழுதுவோம்" என்று கூறியிருந்தார். இதற்கிடையில், ஊழல் செய்த குற்றவியல் வழக்கில் அப்துல்லா யாமீன் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதன் காரணமாகத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து, தன்னுடைய இடத்துக்கு முகமது முய்ஸுவை அவர் பரிந்துரை செய்தார்.

புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு!

டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு விளங்குகிறது. அதேசமயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் முக்கிய ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில், மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாடாக மாறியிருக்கிறது. இந்தியாவும், சீனாவும் நீண்ட கால புவிசார் அரசியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவின் வளர்ச்சியில் தாராளமாக முதலீடுகள் செய்திருக்கின்றன.மாலத்தீவு

மாலத்தீவில் இந்திய ராணுவம்!

மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக, இந்திய போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏதுவாக இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்களின் இந்த சிறிய குழு பல ஆண்டுகளாக மாலத்தீவில் நிலைகொண்டிருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு, பல மருத்துவ அவசர காலங்களில் இந்திய ஹெலிகாப்டர்கள் உதவியதையும் குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு

முகமது மூயிஸு பேசியது என்ன?

``எங்களின் பாதுகாப்பு என்று வரும்போது, அதற்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வரைவேன். அதேசமயம், மற்ற நாடுகளின் எல்லைக் கோடுகளையும் மாலத்தீவு மதிக்கும். மேலும், இந்திய ராணுவத்துக்குப் பதிலாக சீனப் படைகளைக் கொண்டு பிராந்திய சமநிலையை உயர்த்த விரும்பவில்லை" என்று ஊடகத்திடம் முகமது மூயிஸு தெளிவுபடுத்தியிருக்கிறார். முகமது மூயிஸு சீனாவிடம் நெருக்கம் காட்டுபவராக அறியப்பட்டாலும், இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த விவகாரம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரியும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
பற்றவைக்கும் சீனா... பாதை மாறும் நேச நாடுகள்... இந்திய தீபகற்பத்தின் அமைதியைக் குலைக்க சதியா?


http://dlvr.it/Sz3DfC

Saturday, 18 November 2023

Colorado: உயிரிழந்த எஜமானர்; கடும் குளிரில் 72 நாள்கள் தப்பிப் பிழைத்த நாய்!

கொலராடோ மலைப் பகுதியில் கடும் குளிரில் 72 நாள்கள் சிக்கித் தவித்த நாய் ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அமெரிக்காவின் கொலராடோ பகுதியைச் சேர்ந்தவர் ரிச் மூர். 71 வயதான இவர் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அன்று கொலராடோ மலைப் பகுதியில் உள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு ட்ரெக்கிங் செல்ல முடிவு செய்திருக்கிறார். அவருடன் அவர் செல்லமாக வளர்த்த ஃபின்னி என்ற நாயையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.  மலை ஏறும்பொழுது கடும் குளிரைத் தாங்க முடியாமல் ரிச் மூர் உயிரிழந்திருக்கிறார். ஃபின்னி என்ற அந்த நாய் இறந்துப்போன தனது உரிமையாளரின் அருகிலேயே 72  நாள்களாக கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு இருந்திருக்கிறது.  ஃபின்னி

ரிச் மூரின் உறவினர்கள் அவரையும், ஃபின்னியையும் தேடி அலைந்திருக்கின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இறந்துப்போன ரிச் மூரின் உடலை உறவினர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இறந்துபோன அவரின் உடல் அருகிலேயே கடும் குளிரில் 72 நாள்கள் சிக்கித் தவித்திருந்த   ஃபின்னியைக் காப்பாற்றியிருக்கின்றனர். ஃபின்னியின் எடைக் குறைந்து அதன் எலும்புகள் எல்லாம் தெரிகிற அளவிற்கு மோசமான நிலையில் இருந்திருக்கிறது.IND v AUS: "நான் மேட்ச் பார்த்தா இந்தியா தோத்துருவாங்க!" - அமிதாப் பச்சன் வேடிக்கைஃபின்னி

இருப்பினும் ஃபின்னி 72 நாள்கள் கடும் குளிரைத் தாக்குப் பிடித்துகொண்டு உயிருடன் இருந்தது ரிச் மூரின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் என பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது ஃபின்னி மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாக ரிச் மூரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


http://dlvr.it/Sz0PgL

Thursday, 16 November 2023

கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்... உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?!

ஒரு நீண்ட அமைதிக்குப் பின்னர் கோவிட் தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கோவிட் வைரஸின் தாக்கம் குறைந்தாலும் அதிலிருந்து புதிய வேரியன்ட்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிடுகின்றன.

தற்போது அமெரிக்காவில் JN.1 மற்றும் HV.1 என்ற இரண்டு புதிய கோவிட் வேரியன்ட்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் எச்சரித்துள்ளது. கோவிட்-19கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு - WHO எச்சரிக்கை

புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தற்போது இந்த நோயின் பாதிப்பு இங்கிலாந்து, அமெரிக்கா, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

HV.1 கோடைக்காலத்தின் நடுப்பகுதியில் தோன்றி செப்டம்பர் மாதத்தில் வேகமாக மக்களிடையே பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் கிட்டத்தட்ட 20% பாதிப்பை இந்த வேரியன்ட்கள் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.  

``JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86-க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே, அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியைவிட JN.1-க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார். கோவிட் மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO... தரவுகளைப் பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்!

இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், ``நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய வேரியன்ட்கள் வந்துகொண்டேதான் இருக்கும். முந்தைய வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள புதிய வேரியன்ட்கள் சிறிய மாற்றங்களைக் கொண்டுள்ளன.

தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் புதிய வேரியன்ட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை சிடிசி மற்றும் பிற ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் விரைவாக எச்சரிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளது.    


http://dlvr.it/Syvl4S

அமெரிக்கா: சர்ச்சில் வாக்குவாதம்; கேரள கர்ப்பிணி மீது துப்பாக்கிச்சூடு - கணவனை கைது செய்த காவல்துறை

கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரை சேர்ந்த, அமல் ரெஜியும் அவரின் மனைவி மீராவும் கடந்த ஆறு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. தம்பதியினரிடையே சில குடும்பப் பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இருக்கும் தேவாலயத்துக்குத் தம்பதிகள் சென்றிருக்கிறார்கள்.கணவன் - மனைவி சண்டை

இருவரும் பிரார்த்தனை முடிந்து கார் பார்க்கிங் ஏரியாவில்  காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது.  தேவாலயத்திலிருந்தவர்கள் சத்தம் வந்த திசைக்குச் சென்றபோது மீரா ஆபிரகாமின் வயிற்றிலும், கன்னத்திலும் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. உடனே காவல்துறைக்கு தகவலளித்து, மீரா ஆபிரகாமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீரா ஆபிரகாம் மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மீரா ஆபிரகாமுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அந்தக் கர்ப்பம் தொடர்பான விவாதத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என அவர்களது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். மீரா ஆபிரகாமின் இரட்டை சகோதரிகளும், அமல் ரெஜியின் மூன்று சகோதரர்களும் குடும்பத்துடன் அமெரிக்காவில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவலளித்த காவல்துறை அமல் ரெஜியை கைது செய்து விசாரித்து வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி; 5 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை...


http://dlvr.it/SyvMyv

Wednesday, 15 November 2023

ஒருபுறம் எச்சரிக்கை, மறுபுறம் இஸ்ரேலுக்கு நவீன ஆயுத சப்ளையா? - அமெரிக்கா குறித்த அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில், காஸாவில் மட்டும் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி, காஸா பகுதி மக்கள் பெரும் சோகத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஐ,நா., உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.தாக்கப்பட்ட காஸா மருத்துவமனை

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும், இரான், சிரியா, உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பெரும் திரளான மக்கள் இஸ்ரேலைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஹமாஸ் குழு மருத்துவமனைகளுக்குக் கீழே தங்கியிருப்பதாகக் கூறி, பெருமளவில் மருத்துவமனைகளைச் சேதப்படுத்துகிறது இஸ்ரேல்.

இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம், "காஸாவின் பிரதான மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காஸாவில் இருக்கும் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலால், நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உலக மருத்துவத் தொண்டுக் குழுவான MSF தெரிவித்திருக்கிறது.இஸ்ரேல் பாலஸ்தீன போர்

மருத்துவமனைகளில் போர் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் நோயாளிகளைப் பாதுகாக்கவும், மருத்துவமனைகள் பாதுகாக்கப்படுவதையும் விரும்புகிறோம். நாங்கள் இது குறித்து இஸ்ரேல் அரசுடன் பேசியிருக்கிறோம். எனவே, மருத்துவமனைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து காஸா பகுதியில் பொதுமக்கள் இறப்பதைத் தவிர்க்க முயல்வது குறித்து, அதிபர் ஜோ பைடனும், அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலை எச்சரித்துப் பேசி வருகின்றனர்.

ஆனால், அதே நேரம், இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அதிகரித்திருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், ``இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அதன் சிறப்பு ஆயுதமான அப்பாச்சி கன்ஷிப், கடற்படைக்கான லேசர்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், அத்துடன் 155 மி.மீ குண்டுகள், இரவு நேரத்தில் எதிரிகளைத் துல்லியமாகப் பார்க்கப் பயன்படுத்தப்படும் பார்வைச் சாதனங்கள், பதுங்குக் குழியை வெடிக்க வைக்கும் ஆயுதங்கள், புதிய ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது.ஜோ பைடன் - காஸா

கடந்த மாத இறுதியில், 36,000 ரவுண்டுகள் உள்ள 30 மி.மீ பீரங்கி வெடிப்பொருள்கள், 1,800 M141 பதுங்குக் குழி `பஸ்டர்' வெடிமருந்துகள், 3,500 இரவு பார்வைச் சாதனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த ஆயுத உதவி தினசரி அடிப்படையில் தொடர்ந்து செய்யப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை 30-க்கும் மேற்பட்ட நிவாரண அமைப்புகள், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு, `155 மி.மீ குண்டுகளை அனுப்ப வேண்டாம். 155 மி.மீ பீரங்கி குண்டுகள் அதிக மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்றான காஸாவில் கண்மூடித்தனமான உயிர்ப்பலியை ஏற்படுத்தும்.

இந்த வெடிமருந்துகள் சரியாக வழிகாட்டப்படாதவை. எனவே, அதிக உயிர்பலிக்கான சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்' என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேல் 57,000-க்கும் மேற்பட்ட 155 மி.மீ வெடிக்கும் பீரங்கி குண்டுகள், 20,000 M4A1 துப்பாக்கிகள், 5,000 PVS-14 இரவு பார்வைச் சாதனங்கள், 3,000 M141 கையடக்க பதுங்குக் குழி வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கேட்டிருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறது.ஜோ பைடன்

இதே போன்றுதான் ரஷ்யா - உக்ரைன் போரின்போது 2 மில்லியனுக்கும் அதிகமான 155 மி.மீ குண்டுகளையும், 105 மி.மீ ரவுண்டு 8,00,000 பீரங்கிகளையும் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.காஸா மருத்துவமனை: `இஸ்ரேல் மீது இருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்..!' - ஜோ பைடன் சொல்வதென்ன?


http://dlvr.it/Syskyt

``போலி செய்திகள் இரக்கமின்றி அவரை பின்தொடர்ந்தன" - சகோதரியின் மறைவு குறித்து ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) சகோதரியும், அமெரிக்க முன்னாள் நீதிபதியுமான 86 வயது மரியானே ட்ரம்ப் பாரி (Maryanne Trump Barry) உயிரிழந்ததையடுத்து, போலி செய்திகள் அவரை இரக்கமின்றி பின்தொடர்ந்தாக, அமெரிக்க ஊடகங்களை மறைமுகமாக குற்றம்சாட்டியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.மரியானே ட்ரம்ப் பாரி - டொனால்ட் ட்ரம்ப்

முன்னதாக, மேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில், மரியானே தனது வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். அதேசமயம், அவரின் வீட்டில் அசம்பாவிதம் நடந்தது என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. அதோடு, அவரின் இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தகவல் வெளியிடப்படவில்லை.

மறைந்த மரியானேவை, முதன்முதலாக 1983-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), நியூஜெர்சியின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் (Bill Clinton), மூன்றாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மரியானேவை நியமித்தார். இருப்பினும், 2019-ல் வரிகளைத் தவிர்ப்பதற்கான திட்டம் தொடர்பான புகாரின் மீது தவறான நடத்தை விசாரணையை எதிர்கொண்டதால் தன்னுடைய பணியிலிருந்து மரியானே ஓய்வு பெற்றார்.மரியானே ட்ரம்ப் பாரி - டொனால்ட் ட்ரம்ப்

இன்னொருபக்கம், ட்ரம்ப் ஆலோசனை கேட்கும் சில நபர்களில் இவரும் ஒருவர் என்கிற அளவுக்கு ட்ரம்ப்ம்புக்கு நெருக்கமானவர் மரியானே. இருப்பினும், ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், அவரது ஆட்சியின் கடைசி ஆண்டு 2020-ல் ட்ரம்பின் மருமகள் மேரி ட்ரம்ப், ட்ரம்ப் குறித்து மரியானே விமர்சித்துப் பேசிய ஆடியோவை வெளியிட்டது சர்ச்சையானது. அந்த ஆடியோவில், `ட்ரம்ப்பை கொடூரமானவர், அவருக்கென்று கொள்கைகள் இல்லை. அவரை நம்ப முடியாது' என்று மரியானே விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மறைந்த சகோதரி மரியானேக்கு நேற்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப், போலி செய்திகள் தனது சகோதரியை இரக்கமின்றி பின்தொடர்ந்ததாகக் கூறியிருக்கிறார்.டொனால்ட் ட்ரம்ப்

இதுகுறித்து, ட்ரம்ப் தனது சமூக வலைதளமான தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social), ``அதிபர் தேர்தலில் நான் போட்டியிடும் வரை, என் சகோதரியின் வாழ்க்கை பெரும்பாலும் பிரச்னைகளில்லாமல் சரியாக இருந்தது. அதன் பிறகுதான், அவரின் வாழ்க்கையை கடினமானதாக மாறியது. போலி செய்திகளும், மற்றவர்களும் இரக்கமின்றி அவரைப் பின்தொடர்ந்தனர். அதனால், 2016 முதல் தான் ஓய்வுபெறும் வரை பெரும் துன்பத்துக்கு ஆளானார் அவர்" என்று பதிவிட்டிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
'டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர்' - தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி... யார் இந்த உபாத்யாயா?!


http://dlvr.it/SysKwb

Tuesday, 14 November 2023

காஸா மருத்துவமனை: `இஸ்ரேல் மீது இருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்..!' - ஜோ பைடன் சொல்வதென்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி, காஸா பகுதி மக்கள் பெரும் சோகத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஐ,நா., உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.பாலஸ்தீன ஆதரவு போராட்டம் - பிரிட்டன்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும், இரான், சிரியா, உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பெரும் திரளான மக்கள் இஸ்ரேலைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனாலும், 'ஹமாஸை அழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது' என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவைச் சுற்றிவளைத்து தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. ஹமாஸ் குழு மருத்துவமனைகளுக்குக் கீழே தங்கியிருப்பதாகக் கூறி பெருமளவில் மருத்துவமனைகளைச் சேதப்படுத்துகிறது.

நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமலும், மருத்துவமனையிலிருந்து வெளியே வர முடியாமலும் அங்கேயே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. பாலஸ்தீனப் பகுதிகளிலுள்ள உலக சுகாதார அமைப்பு, "குறைந்தது 2,300 நோயாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.ஜோ பைடன்

அப்போது, "காஸாவின் பிரதான மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காஸாவில் இருக்கும் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற சூழலில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித்தவிப்பதாக உலக மருத்துவத் தொண்டுக் குழுவான MSF தெரிவித்திருக்கிறது. மருத்துவமனைகளில் போர் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் நோயாளிகளைப் பாதுகாக்கவும், மருத்துவமனைகள் பாதுகாக்கப்படுவதையும் விரும்புகிறோம். நாங்கள் இது குறித்து இஸ்ரேலிய அரசுடன் பேசியிருக்கிறோம். எனவே, மருத்துவமனை விவகாரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என நம்புகிறேன்... அதையே எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேலில் ஜோ பைடன்... காஸா மீது தீவிரமடையும் தாக்குதல்! - இனி என்ன?!


http://dlvr.it/SypXH7

Sunday, 12 November 2023

``இன்னைக்கு ஒரு புடி''... பிரபலமடையும் பாம்பு பீட்ஸா... எப்படி, எங்கு செய்கிறார்கள் தெரியுமா?!

ஹாங்காங் மற்றும் சீனாவின் உணவு கலாசாரத்தில் பாம்பிற்கு  முக்கிய இடம் உண்டு. பல காலகட்டங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்யூஷன் செய்யப்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஹாங்காங்கில் உள்ள பீட்ஸா ஹட் ஒன்று பாம்பினால் செய்யப்பட்ட பீட்ஸாவை வழங்கி வருகிறது. `பாம்பு பீட்ஸா’ தற்போது அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளிடம் பிரபலமடைந்து வருகிறது. snake (representational Image)`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ'... மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

துண்டாக்கப்பட்ட பாம்பின் இறைச்சி, கறுப்பு காளான்கள் மற்றும் பன்றியின் கால் இறைச்சி, கிளாசிக் கான்டோனீஸ் பாம்பு சூப் ஆகியவை சேர்த்து இந்த பீட்ஸா தயாரிக்கப்படுகிறது. இலையுதிர் மாதங்களில் பாம்புகளைச் சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக நம்புகிறார்கள். 

பாம்பு பீட்ஸாவை குறித்து ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு சூப் பிரியர் ரேச்சல் வோங் கூறுகையில், ``சிறிதளவு கோழி இறைச்சியைப் போன்றும், மீன் மற்றும் பிற கடல் உணவுகள் போன்றும் இந்த பாம்பு பீட்ஸாவின்  சுவை இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இதைச் சாப்பிட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். Food (Representational Image)பாம்பு விஷம் போதை தருமா? பிரபல யூடியூபர் செய்த காரியம்... காவல்துறை விசாரணை!

மற்றோர் உணவுப் பிரியர் மாபெல் சீஹ் கூறுகையில், ``இது பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்… பல கலாசாரங்களில், குறிப்பாக மேற்கு நாடுகளில் பாம்புகள் உணவல்ல" என்று கூறியிருக்கிறார்.

`இதையெல்லாம் சாப்பிடுகிறார்களா'… என நீங்கள் கேள்விப்பட்ட உணவுகள் இருந்தால் கமென்டில் சொல்லுங்கள்?!


http://dlvr.it/SylcHY

Saturday, 11 November 2023

'சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்களம்' - குடியரசு, ஜனநாயகக் கட்சிகளில் கடும் போட்டி; ஒரு பார்வை!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பருடன் நிறைவடைகிறது. இதையடுத்து 2024 நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் வழக்கம்போல குடியரசு, ஜனநாயகக் கட்சிகளுக்கிடையேதான் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.டொனால்டு ட்ரம்ப்

குடியரசுக் கட்சி:

டொனால்டு ட்ரம்ப்:

குடியரசுக் கட்சிக்கான அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். 77 வயதான அவர்மீதான குற்ற வழக்குகள், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவர், 'இரண்டாவது முறையாக நான் அதிபராவதைத் தடுக்கும் முயற்சிதான் இது' எனக் குற்றச்சாட்டியிருக்கிறார். ட்ரம்ப்பின் இத்தகைய குற்றச்சாட்டை, அந்நாட்டின் நீதித்துறை திட்டவட்டமாக மறுக்கிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த குடியரசுக் கட்சியின் விவாதக் கூட்டத்தில் பங்கேற்ற இருவர், `ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை வேட்பாளராக ஆதரிக்க மாட்டோம்' எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ட்ரம்ப், 'அமெரிக்காவில் குடியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சீனாவுடனான வர்த்தகத்திலும் ஏராளமான கட்டுப்பாடுகள் இயற்றப்படும். எனக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படும்' என சபதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரான் டிசாண்டிஸ்:

இவர் ட்ரம்பின் முதன்மையான போட்டியாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்காகப் போராடியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்திலும் சேவை செய்த டிசாண்டிஸ், கருத்துக்கணிப்புகளில் ட்ரம்பை-விட கிட்டத்தட்ட 40% புள்ளிகள் பின்தங்கி இருக்கிறார். அவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை பணிநீக்கம் செய்த சர்ச்சை நிலவி வருகிறது. மே மாதத்திலிருந்து தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஆனால் இது அவருக்கான ஆதரவை அதிகரிக்கவில்லை.

விவேக் ராமசாமி:

தொழிலதிபரான விவேக் ராமசாமி அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். `அமெரிக்கா மருத்துவ மேம்பாடு, சுகாதாரம் ஆகியவற்றுக்காக சீனாவை நம்பி இருப்பதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், ட்ரம்ப்பை மன்னித்துவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார். விவேக் ராமசாமி

நிக்கி ஹேலி:

இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். குடியரசுக் கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். தென் கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஐக்கிய நாடுகளின் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் இவர், பைடன், ட்ரம்ப் ஆகியோருடன் ஒப்பிடும்போது, தான் இளமையானவர் என்றும், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் மகள் என்ற பின்னணியையும் பெற்றிருக்கிறார். மேலும், குடியரசுக் கட்சியில் ஒரு திடமான பழைமைவாதியாக நற்பெயரைப் பெற்றுள்ளார். இவர் பாலினம் மற்றும் இனம் தொடர்பான பிரச்னைகளை நம்பகமான முறையில் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளார். வெளிநாட்டில் அமெரிக்க நலன்களின் உறுதியான பாதுகாவலராகவும் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். கருத்துக்கணிப்புகளின்படி, குடியரசுக் கட்சியினரிடையே இவருக்கு, ஒற்றை இலக்க ஆதரவு உள்ளது.

டிம் ஸ்காட்:

இவர் பிளவுபட்டிருக்கும் கட்சியை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவே ட்ரம்ப், டிசாண்டிஸிடமிருந்து மாறுபட்டு காட்ட உதவுகிறது. இது எப்படியும் வெற்றி பெற போதுமானதாக இருக்காது. 58 வயதான ஸ்காட், குடியரசுக் கட்சியினரிடையே 2% ஆதரவைப் பெற்றுள்ளார் என சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.நிக்கி ஹேலி

கிறிஸ் கிறிஸ்டி

61 வயதான கிறிஸ்டி, முதலில் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தார். அவரது பிரசாரத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால், முன்னாள் ஜனாதிபதியைக் கடுமையாக விமர்சித்தார். இவருக்கும் கருத்துக்கணிப்புகளின்படி 2% ஆதரவே இருக்கிறது.

ஆசா ஹட்சின்சன்:

`தன்மீதான குற்றச்சாட்டுகளைச் சமாளிக்க, ட்ரம்ப் போட்டியிலிருந்து ஒதுங்க வேண்டும்' என்ற முழக்கத்துடன் வெள்ளை மாளிகையைப் பிடிப்பதற்கான தனது முயற்சியை மேற்கொள்ள தொடங்கினார். 72 வயதான ஹட்சின்சன், தனது அனுபவத்தின் மூலமாக வரிக் குறைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தன்னால் மேற்கோள்ள முடியும் என பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது.

டக் பர்கம்:

67 வயதான பர்கம், 2001-ம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு தனது மென்பொருள் வணிகத்தை விற்றபிறகு, வடக்கு டகோட்டாவின் ஆளுநராக இரண்டாவது நான்கு ஆண்டுக்கால பதவியை வகித்து வருகிறார். குறைந்த வரிகள் மற்றும் குறைவான விதிமுறைகளை ஆதரிப்பாதக தெரிவித்து வருகிறார். இவருக்கும் ஆதரவு மிகக் குறைவாகவே இருக்கிறது.ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சி

ஜோ பைடன்:

80 வயதான பைடன், ஏற்கெனவே இதுவரை இல்லாத மூத்த அமெரிக்க அதிபராக உள்ளார். மேலும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளைச் சமாளிக்க வேண்டும். ஆனால், ட்ரம்பை தோற்கடிக்கக்கூடிய ஒரே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன்தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, 'அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பது எனது வேலை' என அறிவித்தார். மேலும் அவர், ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க தலைநகர்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு கொதித்தார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தனது ஆதரவை பைடனுக்கு வழங்கி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில், 'அமெரிக்கா எதிர்பார்க்கப்பட்ட மந்தநிலையிலிருந்து தப்பி, பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. பணவீக்கம் 2022-ல் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உணவு மற்றும் எரிவாயு விலை குறைவு. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமெரிக்காவின் செயல்பாடு' போன்றவற்றை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜோ பிடன் - ட்ரம்ப்

மரியன்னே வில்லியம்சன்:

71 வயதான மரியன்னே வில்லியம்சன் ஒரு பிரபல எழுத்தாளராவார். 'நீதி மற்றும் அன்பின் கொள்கை' எனத் தனது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் 2020-ம் ஆண்டு நடத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

டீன் பிலிப்ஸ்:

அதிகம் அறியப்படாத அமெரிக்க காங்கிரஸ்காரர் டீன் பிலிப்ஸ். இவர், பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாட்டார் எனத் தெரிவித்திருக்கிறார். 54 வயதான இவர், கோடீஸ்வர தொழிலதிபராவார். இவர் ஆன்லைனில் வெளியிட்ட ஒரு நிமிட வீடியோவில், 'எங்களுக்குச் சில சவால்கள் உள்ளன. இந்தப் பொருளாதாரத்தை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். மேலும் நாங்கள் அமெரிக்காவை சரிசெய்யப் போகிறோம்" எனக் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் எட்டுத்திக்கும் தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம், அமெரிக்க அரசியல் போக்கை!'அமெரிக்கா - தென்கொரியா போர் ஒத்திகை' - ஏவுகணையை ஏவிய வடகொரியா; என்னதான் நடக்கிறது?!


http://dlvr.it/Syjx7C

1,000 Volvo Cars: `வரலாற்றின் மிகப்பெரிய கார் திருட்டு' - 49 ஆண்டுகளாக ஸ்வீடனை ஏமாற்றும் வடகொரியா!

இன்றைய உலகில், அமெரிக்காவை அச்சுறுத்தும் சர்வதேச சக்திகளில் ஒன்றாக வடகொரியா திகழ்கிறது. மிகவும் கடுமையான சட்டத்திட்டங்கள் கொண்ட நாடும்கூட. சிறிய விஷயமாக இருந்தாலும் அரசின் ஆணைகளைப் பின்பற்றாவிட்டால், மரண தண்டனைக்கூட கொடுக்கத் தயங்காதவர் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில், இப்படிப்பட்ட வடகொரியா அரசு பற்றிய சுமார் அரை நூற்றாண்டு தகவல் ஒன்று, தற்போது வெளிவந்திருக்கிறது.வடகொரியா - ஸ்வீடன்

அதாவது, 1970-களில் பொருளாதாரத்தில் வலுவான நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கிய வடகொரியா, தனது வெளிநாட்டு மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அணுகலை விரிவுபடுத்த, மேற்கத்திய தொழில்மயமான நாடுகளிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது. கிட்டத்தட்ட அதேசமயத்தில்தான், ஸ்வீடிஷ் வணிகங்களும் ஒரு நம்பிக்கைக்குரிய புதிய சந்தையாக விரிவடைவதை எதிர்பார்த்துக் கிடந்தன. அதற்கான சாத்தியக்கூறுகளாக வடகொரியாவைப் பார்த்தது ஸ்வீடிஷ் வணிகங்கள்.

அப்போது, ஸ்வீடன் 1974-ல் 1,000 வோல்வோ 144s மாடல் கார்களை ஏற்றுமதி செய்வதாக வடகொரியாவுடன் பெரிய அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த 1,000 வோல்வோ 144s மாடல் கார்களும் இறக்குமதி செய்ய, இப்போது அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல்-சங் அன்று ஆர்டர் செய்தார். இதன் அப்போதைய மதிப்பு 73 மில்லியன் டாலர். அந்த ஆண்டின் இறுதியிலேயே மொத்த கார்களும் வடகொரியாவில் வந்திறங்கிவிட்டன.Volvo Car

தற்போது, இதில் சோகம் என்னவென்றால், இது நடந்து 49 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், ஒப்பந்தத்தின்படி 1,000 வோல்வோ கார்களுக்கான பணத்தை, ஸ்வீடனுக்கு இன்றுவரை வழங்காமலிருக்கிறது வடகொரியா. அதேசமயம், கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஸ்வீடன் அரசு தனது பொது நிதியிலிருந்து மொத்த தொகையையும் ஏற்கெனவே செலுத்திவிட்டது.

தற்போது வட்டியும், முதலுமாகச் சேர்த்து ஸ்வீடனுக்கு வடகொரியா வழங்கவேண்டிய மொத்த தொகை தோராயமாக 330 மில்லியன் டாலர். ஸ்வீடன் அதிகாரிகளும், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை வட கொரியாவுக்கு பில்களை (Bills) அனுப்பிவருகின்றனர். ஆனால், வடகொரியா இதனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இனியும் கண்டுகொள்ளுமா என்றும் தெரியவில்லை.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

இதில், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் சிறப்பு நோக்கங்களுக்காக இந்த கார்களை இன்றும் பயன்படுத்திவருகிறது வடகொரியா. இப்படியிருக்க, ஹிஸ்டரி விட்ஸ் (History Vids) என்ற X வலைதள பக்கம், இதனை `வரலாற்றின் மிகப்பெரிய கார் திருட்டு' எனக் குறிப்பிட்டு, சாலையில் வோல்வோ கார் செல்லும் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறது.

In the 1970s, North Korea ordered 1,000 Volvo cars from Sweden. The cars were shipped & delivered but North Korea just didn't bother paying & ignored the invoice. Till this day the bill remains unpaid making it the largest car theft in history. pic.twitter.com/SYbubt8due— Historic Vids (@historyinmemes) February 1, 2023

கடந்த பிப்ரவரியில் பகிரப்பட்ட அந்தப் பதிவில், ``1970-களில் வடகொரியா ஸ்வீடனிடம் 1,000 வால்வோ கார்களை ஆர்டர் செய்தது. கார்களும் டெலிவரி செய்யப்பட்டன. ஆனால், அதற்குப் பணம் தரவேண்டும் என்பதை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பில்களை புறக்கணித்தது. இன்றுவரை பில் செலுத்தப்படாமல் இருக்கிறது. இதுவே வரலாற்றில் மிகப்பெரிய கார் திருட்டு" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.வடகொரியா: பைபிள் வைத்திருந்த குடும்பமே கைது; 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை-அமெரிக்கா பகீர் தகவல்


http://dlvr.it/Syhh14

Friday, 10 November 2023

Israel-Gaza: `தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்; காஸாவை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை!' - இஸ்ரேல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சர்வதேச நாடுகளும், ஐ.நா சபையும் பலமுறை போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தும், இன்றுவரை அதைப் புறக்கணித்துப் போர் தொடரும் என அறைகூவல் விடுகிறது இஸ்ரேல். பிணைக்கைதிகளை விடுவிக்காமல், தங்கள் நாட்டு மக்களைப் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறது ஹமாஸ்.வடக்கிலிருந்து தெற்கு காஸா நோக்கிப் பயணப்படும் பாலஸ்தீனர்கள்

இந்த நிலையில், வடக்கு காஸாவில் தினசரி நான்கு மணிநேரம் மனிதாபிமான அடிப்படையில் போர் இடை நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பாலஸ்தீனத்தின்மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட முறையில் பலமுறை பேசியிருக்கிறார்.

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்கு காஸாவில் தினசரி நான்கு மணிநேரம் மனிதாபிமான போர் இடை நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்றும், இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கிறது.இஸ்ரேல் - காஸா தாக்குதல்

மேலும் ஒவ்வொரு நாளும் போர் இடை நிறுத்தம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு, எப்போதிலிருந்து எப்போதுவரை போர் நிறுத்தப்படும் என்ற நேரம் அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் நிவாரணங்களையும், உணவு, தண்ணீர், மருந்துகளைப் பெறவும் தெற்கு காஸாவுக்கு மக்கள் செல்வது அனுமதிக்கப்படும். எத்தனை நாள்கள் இது தொடரும் எனத் தெரியவில்லை. நேற்று மட்டும் சுமார் 50,000 பாலஸ்தீனர்கள் தெற்கு காஸாவை நோக்கி இடம் பெயர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சட்டத்துக்கு இணங்குவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சரியான திசையில் இஸ்ரேல் பயணிக்கும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தெய்வாதீனமாக இஸ்ரேலிய ராணுவம் சிறப்பாகச் செயல்படுவதாக நான் நினைக்கிறேன். எவ்வளவு நாள்கள் ஆனாலும், எங்களின் குறிக்கோள் நிறைவேறும்வரை போரை நிறுத்தமாட்டோம்.  நாங்கள் போரை நிறுத்தினால், அது சரணடைதலாகும். மேலும், நாங்கள் காஸாவை ஆக்கிரமிக்க நினைக்கவில்லை.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அதை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இஸ்ரேல் யாரையும் அகதிகளாக்க விரும்பாது. பாலஸ்தீனத்தில் உறுதியான ஓர் அரசை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் ஹமாஸ் போன்ற அமைப்பு மீண்டும் தோன்றுவதைத் தடுக்கும். காஸாவுக்குள் மீண்டும் நுழைவதற்கு இஸ்ரேலியப் படைகள் தயாராக இருக்க வேண்டும். ஹமாஸ் குழு அழிக்கப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்துடனான எங்கள் பேச்சுவார்த்தை தொடரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காஸா... இனி என்ன?!


http://dlvr.it/Syf6x7

Thursday, 9 November 2023

`பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்'- அமெரிக்க ஜிம்மில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய இளைஞர் மரணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள உடற்பயிற்சி மையம் (Gym) ஒன்றில், தலையில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயதான இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்டவராக அறியப்படும் இந்திய இளைஞர் வருண் ராஜ் புச்சோ, தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவின் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்திருக்கிறார். இவர் நாள்தோறும் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று உடற்பயிற்சிகளை‌ மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி மையத்துக்குச் சென்ற வருணை, ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவர் அவரின் தலையில் கத்தியால் குத்தியிருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த வருண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (புதன்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஜோர்டான் ஆண்ட்ரேட் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது, கொடிய ஆயுதத்தால் ஆபத்து விளைவித்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வருண் மிகவும் அமைதியான மாணவர் என்றும் இவர்கள் இருவரும் இதற்கு முன்பு பேசியதில்லை என்றும் தெரியவந்தது.கொல்லப்பட்ட இந்திய இளைஞர் வருண் ராஜ் புச்சோ

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த ஜோர்டான் ஆண்ட்ரேட், ``உடற்பயிற்சி மையத்தின் மசாஜ் அறைக்குள் நுழைந்தபோது அங்கு வருண் இருந்தான். அவன், பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை அவன் தள்ளிவிட முயன்றான். அதனால் என்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவன் தலையில் கத்தியால் குத்தினேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், உடற்பயிற்சி மையத்தில் அவர்கள் இருவரும் என்ன உரையாடினர், இந்தக் கொலைக்குப் பின்னால் வெறும் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இன்னொருபக்கம், வருணின் குடும்பத்துக்கு உதவுவதற்காக, வட அமெரிக்க தெலுங்கு சங்கம் 'GoFundMe' மூலம் 90,000 டாலர் நிதி திரட்டியிருக்கிறது.Gaza Camp: `50,000 பேருக்கு 4 கழிவறைகள்... 4 மணி நேரமே தண்ணீர்!' - அமெரிக்க நர்ஸின் உருக்கமான பேட்டி


http://dlvr.it/SydbSl

`Please sit down; மோடி ஆட்சியில் இருந்து பாருங்கள்' - அமெரிக்கப் பாடகியைச் சாடிய பிரியங்கா சதுர்வேதி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், `நான் பேசியது தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது' எனக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் நிதிஷ். இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றபோது, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அமெரிக்கப் பாடகியும், நடிகையுமான மேரி மில்பென், இந்தியாவின் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைக் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.மேரி மில்பென்

அதில், ``பீகார் முதல்வரின் பேச்சால் இன்று, இந்தியா ஒரு சவாலான தருணத்தை எதிர்கொள்கிறது, அங்கு பெண்களின் மதிப்பு குறிவைக்கப்படுகிறது. இந்தச் சவாலுக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். முதல்வர் நிதிஷ் குமாரின் கருத்துக்கு பதிலளிக்கும் தைரியமான பெண் ஒருவரை பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஒருவேளை நான் இந்தியக் குடிமகளாக இருந்திருந்தால், பீகாருக்குச் சென்று முதலமைச்சராகப் போட்டியிடுவேன்.

2024 தேர்தல் களத்திலும் இந்தியாவை வழிநடத்த பிரதமர் மோடிதான் பொருத்தமானவர். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அவரது முயற்சிகள் வரவேற்கத்தக்கவை" எனக் குறிப்பிட்டார். பாடகி மேரி மில்பென் பதிவுக்கு பதிலளித்த சிவசேனா தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் பக்கத்தில்,``மேரி மில்பெனிடம் மணிப்பூர் பற்றி என்ன கருத்து இருக்கிறது... ஆனால், பீகார் முதல்வர் குறித்து மேரி மில்பென் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேரி மில்பென் 2024-ல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தையும் சேர்த்து பிரசாரமாக்குகிறார். எனவே, அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமையைப் பெற வேண்டும். அதன் மூலம் பிரதமர் மோடியின் உண்மையான ஆட்சியை அனுபவிக்க வேண்டும். அதுவரை தயவுசெய்து அமைதியாக உட்காருங்கள்" எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.பாலியல் வழக்கு! - சென்னை போலீஸுக்குக் கண்ணாம்பூச்சி காட்டும் சதுர்வேதி சாமியார்


http://dlvr.it/SycMLX

`மனிதனா... காய்கறிப் பெட்டியா?' - குழம்பிய ரோபோ... இறுக்கிக் கொல்லப்பட்ட நபர்! - தென்கொரிய கொடூரம்

தென்கொரியாவில் காய்கறிப் பெட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல், ரோபோ ஒருவரைக் கொன்றுவிட்டதாகச் செய்தி நிறுவனம் ஒன்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறது. தென்கொரியாவில் ரோபோட்டிக் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 40 வயது நபர் ஒருவர், தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள விளைபொருள்கள் விநியோக மையத்திலும் பணிபுரிந்திருக்கிறார். அந்த மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.ரோபோ

இந்த நிலையில், அதில் ஒரு ரோபோ காய்கறிப் பெட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி, அங்கு பணி செய்துகொண்டிருந்த ரோபோட்டிக் நிறுவன ஊழியரைக் காய்கறிப் பெட்டி என நினைத்துத் தூக்கி, மரப்பெட்டிகளுக்கு இறுக்கமாக சீல் வைக்கும் மெஷினின் பெல்ட்டில் வைத்திருக்கிறது. இறுக்கமான பிடியிலிருந்து தப்ப முடியாமல் திணறிய அந்த நபரை, பெல்ட்டில்வைத்து மெஷினுக்குள் திணித்திருக்கிறது அந்த ரோபோ. இதனால், அந்த நபரின் தலை, முகம், நெஞ்சுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். தென்கொரியாவில், ரோபோ தொழிநுட்பக் கோளாறு காரணமாக தாக்குதலுக்காளாகி, இந்த ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் இரண்டாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், தென்கொரியாவைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்தபோது, ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வாழ்ந்து காட்டணும்னு சொன்னான்... வெட்டி வீசிட்டாங்க... - காதல் ஜோடி கொலை... தூத்துக்குடி கொடூரம்!


http://dlvr.it/SybYCT

Wednesday, 8 November 2023

6 மாத வாடகை பாக்கி; வீட்டை காலிசெய்ய மறுத்த குடும்பம் - 6 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்த முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புரூக்ளின் பகுதியில் 6 குழந்தைகளுடன் ஒரு தம்பதி இரண்டாவது மாடியிலிருந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் திடீரென வீடு தீபற்றியது. உடனே தம்பதிகள் குழந்தைகளுடன் தப்பித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் அந்தக் குடும்பத்தின் பொருள்கள் சேதமடைந்தது. இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த காவல்துறை, அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்தது.காவல்துறை

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள்,"இந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை சோதித்ததில் ஒரு முதியவர் வந்து வீட்டுக்குத் தீ வைத்தது பதிவாகியிருக்கிறது. அதை ஆய்வு செய்ததில் வீட்டு உரிமையாளர் ரபிகுல் இஸ்லாம்(66) என்பது உறுதியானது. அதன் அடிப்படையில் கைது செய்தோம். ஏன் தீ வைத்தார் என விசாரித்ததில், அந்த வீட்டில் குடியிருந்த தம்பதி கடந்த 6 மாதமாக வாடகைத் தரவில்லை. மேலும், வீட்டை காலி செய்யக் கூறியும் மறுத்து எதிர்வாதம் செய்திருக்கிறார்கள்.

இதனால், விரக்தியடைந்த முதியவர் வீட்டுக்குத் தீ வைத்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு முன்னாலேயே இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிடுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வாழ்ந்து காட்டணும்னு சொன்னான்... வெட்டி வீசிட்டாங்க... - காதல் ஜோடி கொலை... தூத்துக்குடி கொடூரம்!


http://dlvr.it/Syb11q

Palestine: பிஞ்சுகளின் கனவுகளைச் சிதைக்கும் இஸ்ரேல்; கால்களை இழந்து கண்ணீர் சிந்தும் குழந்தைகள்!

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் கண்டனங்களை மீறி, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. போரின் தொடக்கத்தில், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி இஸ்ரேலுக்குப் போர் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா, சர்வதேச நாடுகளிடமிருந்து வலுவான போர் எதிர்ப்புக் குரல்கள் வந்த பிறகு, `இஸ்ரேலியப் படைகள் காஸாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலிய மக்களுக்கும் நல்லதல்ல' என தற்போது கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டைவேடம், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.இஸ்ரேல் தாக்குதல்

சர்வதேச நாடுகளிடமிருந்து இத்தகைய வலுவான எதிர்ப்புகள் வருவதற்குக் காரணம், ஹமாஸை அழிக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுதான். குறிப்பாக, 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மட்டும் இதில் உயிரிழந்த பிறகும், இஸ்ரேல் இந்தப் போரைத் தொடர்வது கவலையளிக்கிறது.

உரிமைக் குரலுக்கும், அதிகார வேட்கைக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் எதற்காக அப்பாவி மக்களும், சிறுவர்களும் கொல்லப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களையும் சேர்த்தே, போர் நிறுத்தக் குரல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் கால்களை இழந்து, புன்னகைக்க மறந்து, மழலையாய் கனவுகளை எண்ணி அழும் சிறுமிகளின் கண்ணீர்த் துளிகள் ஈரங்கொண்ட நெஞ்சங்களை உலுக்குகின்றன.பாலஸ்தீன குழந்தைகள்

`இனி எப்படி பள்ளிக்குச் செல்வேன்?'

இஸ்ரேல் தாக்குதலால் கால்களை இழந்த லயன் அல்-பாஸ் (Layan al-Baz) எனும் 13 வயது சிறுமி, `நான் எப்படி மீண்டும் பள்ளிக்குச் செல்வேன்' எனக் கண்ணீரோடு கேட்பது, கலங்கடிக்கச் செய்கிறது. தற்போது காஸாவின் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி லயன் அல்-பாஸ், கால்கள் துண்டிக்கப்பட்டப் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட வலிநிவாரணிகளின் தாக்கம் குறைந்ததும், ``எனக்கு செயற்கை கால்கள் வேண்டாம். என்னுடைய நண்பர்களெல்லாம் நடக்கும்போது, நான் எப்படி மீண்டும் பள்ளிக்குச் செல்வேன்..?" என தன்னுடைய தாய் லாமியா அல்-பாஸிடம் (Lamia al-Baz) கண்ணீர்விட்டு அழுகிறார்.

`நிறைய வலிகள்... டாக்டர் ஆகணும்!'

அதே மருத்துவமனையில் தீக்காயங்கள் பிரிவில் ஒரு காலை இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி லாமா அல்-அகா, ``செவிலியர்கள் என்னை இங்கு மாற்றியபோது, உட்காருவதற்கு எனக்கு உதவுமாறு அவர்களிடம் கேட்டேன். அப்போதுதான், என் கால் துண்டிக்கப்பட்டதையே நான் அறிந்தேன். நிறைய வலிகளை நான் அனுபவிக்கிறேன், இருந்தாலும் நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். செயற்கை கால் மூலம் என்னுடைய படிப்பை நான் தொடர்வேன். அதன் மூலம், மருத்துவராகவேண்டும் என்ற கனவை நான் நிச்சயம் அடைய முடியும், என் குடும்பத்துக்கும் நான் வலுவாக இருக்க முடியும்" என்றார்.பாலஸ்தீனக் குழந்தைகள்

`இனிமேல் கால்பந்து ஆட முடியாதா..?'

இவர் மட்டுமல்லாமல், இஸ்ரேல் தாக்குதலில் ஒரு காலை இழந்த 14 வயது சிறுவன் அஹ்மத் அபு ஷாமா (Ahmad Abu Shahmah), ``சிகிச்சை முடிந்து நான் எழுந்தபோது, என்னுடைய கால்கள் எங்கே என்று என் சகோதரனிடம் கேட்டேன். அதற்கு, `கால் இருக்கிறது. மயக்க மருந்து காரணமாக உன்னால் அதை உணர முடியவில்லை' என என்னிடம் பொய் சொன்னான். அடுத்தநாள் என் உறவினர்கள் உண்மையைச் சொன்னதும், `இனி என்னால் தினமும் நடக்கவோ, கால்பந்து விளையாடவோ முடியாது' என்பதுதான் நினைவுக்கு வந்தது. கதறி அழுதேன். தாக்குதல் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், ஓர் அகாடமியில் சேர்வதற்கு கையெழுத்திட்டுவிட்டு வந்தேன்" என்று கண்ணீர்விட்டார்.

அஹ்மத் அபு ஷாமா, எஃ.ப்சி பார்சிலோனா (FC Barcelona) கால்பந்து அணியின் தீவிர ரசிகர். அவரின் உறவினர்கள் ரியல் மேட்ரிட் (Real Madrid) கால்பந்து அணியின் தீவிர ரசிகர்கள். அந்த உறவினர்களில் ஒருவரான ஃபரித் அபு ஷாமா (Farid Abu Shahmah), ``காலத்தைப் பின்னோக்கித் திருப்பி, அஹ்மத் அபு ஷாமாவுக்கு மீண்டும் கால்கள் கிடைத்தால், ரியல் மேட்ரிட்டை ஆதரிப்பதை விட்டுவிட்டு, நானும் பார்சிலோனா அணியின் ரசிகராக மாற தயாராக இருப்பேன்" என்று உருகினார்.பாலஸ்தீனக் குழந்தைகள்பிஞ்சுகளின் ரத்தத் துளிகளிலும், கண்ணீர்த் துளிகளிலும்தான் போரின் வெற்றி அடங்கியிருக்கிறதா... நாளைய தலைமுறையின் கனவுகளைப் பறித்துவிட்டு யாருக்காக இந்தப் போர்... இனியும் மனிதத்தை இழக்க வேண்டாம். இந்தப் பிஞ்சுகள் மீண்டும் புன்னகைப்பதற்காகவாவது போர் முடியட்டும்!Israel Palestine Conflict: `இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?!’ - போரின் கோர தாண்டவம்


http://dlvr.it/SyYLZx

Tuesday, 7 November 2023

புதைபடிவுகளிலிருந்து எரிபொருள் எடுக்க அனுமதியா? லண்டனில் ஓவியம் உடைப்பு!

 

லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்குள் புகுந்து புகழ்பெற்ற ஓவியர் டீகோ விலாஸ்க் ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடியை உடைத்ததாக இரு பருவநிலை மாற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து ‘வீனஸின் குளியறை’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தை சுத்தியல்களால் உடைத்தனர்.

இதில் அந்த ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடிச் சட்டகம் உடைந்தது. பல இடங்களில் கண்ணாடியில் ஓட்டைகளும் விழுந்துவிட்டன.

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற இந்த அமைப்பினர் ஏற்கெனவே இதேபோன்று புகழ்பெற்ற கலைப் பொருள்களையும் அரசு கட்டடங்களையும் இலக்காகக் கொண்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பிரிட்டனில் புதைபடிவுகளைக் கண்டறிந்து எரிபொருள் எடுக்க அனுமதிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவர்கள் இந்தப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட ஓவியம் பின்னர் பரிசோதிப்பதற்காக அகற்றப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/h0JbWD8 https://ift.tt/WAy2YfP
via IFTTT

``இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சி செய்யும் என எதிர்பார்க்கிறேன்!" - மோடியிடம் இரான் அதிபர்

ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் ஒரு மாதமாக குண்டுமழை பொழிந்துவருகிறது இஸ்ரேல். அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தாகக் கூறும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தன்னுடைய தாக்குதல் மூலம் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் இறப்புக்கு முழு காரணமாகியிருக்கிறது.பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதல்

அதோடு, `ஹமாஸை அழித்து வெற்றி பெறும் வரை போரை நிறுத்த மாட்டோம்' என இஸ்ரேல் கூறிவருகிறது. இன்னொருபக்கம், போரை நிறுத்த வலியுறுத்துமாறு அமெரிக்காவுக்கு அரபு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சி செய்யும் என எதிர்பார்ப்பதாக இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கூறியிருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடியிடம் நேற்று தொலைபேசியில் உரையாடிய இப்ராஹிம் ரைசி, ``காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர, தன்னால் முடிந்த அனைத்தையும் இந்தியா செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன மக்களின் தொடர் உயிரிழப்புகள், உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த உயிரிழப்புகள் பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - மோடி

எனவே, அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் பாலஸ்தீனிய மக்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். அதோடு, நிதியுதவி, ஆயுத உதவி, உளவுத்துறை உதவிகள் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தை ஆதரிப்பதிலும், போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முறியடிக்க தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதிலும் அமெரிக்கா பொறுப்புக்கூற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.Israel: ``இது ஓர் இனப்படுகொலை; பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலை ஊக்குவிக்கிறது அமெரிக்கா!" - இரான்


http://dlvr.it/SyVmjb