சீனாவில், வைரஸ்கள் குறித்து ஆய்வில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஷி ஜெங்லி (Shi Zhengli), `எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்துகள் உள்ளதாக எச்சரித்து இருக்கிறார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார், ஷி ஜெங்லி. அதிலும் குறிப்பாக வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் குறித்து ஆய்வு செய்து கவனம் பெற்றதால், இவர் `பேட்வுமன்' என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.வௌவால்
இவர் சமீபத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களோடு இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 40 வகையான வெவ்வேறு கொரோனா வைரஸ்கள் மனிதர்களில் பரவுவதற்கான அபாயத்தைக் குறித்து இக்குழு ஆய்வு செய்தது. இந்த வைரஸ்களில் பாதி, `மிகவும் ஆபத்தானவை' (highly risky) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த ஆய்வின் சங்கடமான முடிவே இவரை மற்றொரு கொரோனா பாதிப்பை குறித்து எச்சரிக்கத் தூண்டி இருக்கிறது. இக்குழு ஆய்வு செய்த கொரோனா வைரஸ்களில் ஏற்கெனவே ஆறு வைரஸ்கள் மனிதர்களைப் பாதித்துள்ளன. மூன்று வகையான கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில், ``முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருக்கிறார். கொரோனா`மனிதத்தன்மையற்ற செயல்'- கொரோனா சிகிச்சை செலவை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம்; கண்டித்த நீதிமன்றம்
இந்த ஆய்வு குறித்த முடிவுகள், ஆங்கில பத்திரிக்கையான எமர்ஜிங் மைக்ரோப்ஸ் அண்ட் இன்ஃபெக்ஷன்ஸ் இதழின் 2023 ஜூன் மாத பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் மீண்டிருக்கும் நிலையில், இந்த ஆய்வு குறித்தான எச்சரிக்கை கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/SwZRW5
Monday, 25 September 2023
Home »
» எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்!







0 comments:
Post a Comment