Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 25 September 2023

`காற்று மாசுபாட்டால் அதிகரித்துள்ள மார்பகப் புற்றுநோய்' - எச்சரிக்கும் ஆய்வு தகவல்..!

அதிகரிக்கும் காற்று மாசுபட்டால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) -ன் ஒரு பகுதியான தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் (NIEHS)  மற்றும் அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் (NCI) ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.காற்று மாசு ஆராய்ச்சி முடிவுகள், அமெரிக்க நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் இதழில் வெளியாகி உள்ளன. அதில், ``அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கும், பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கும்  இடையேஉள்ள தொடர்புகள் குறித்து அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், ஸ்பேடியோடெம்போரல் மாதிரியைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். காற்று மாசு அளவு பி.எம்.2 அளவு குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக நுண்துகள் அளவு (பி.எம்.2.5) இருக்கும் பகுதியில் வாழும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மோட்டார் வாகன வெளியேற்றம்,  எண்ணெய், நிலக்கரி, மரம், தாவரங்கள் ஆகியவற்றை எரிப்பதன் மூலமும், தொழிற்சாலை உமிழ்வுகள் போன்றவற்றின் மூலமும் புகையில் வெளிவரும் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமாக எளிதில் நுரையீரலுக்குள் செல்கின்றன. இதனால் 10 முதல் 15 ஆண்டுக்கால இடைவெளியில், பி.எம்.2.5 அதிகரிப்பால், மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவிகிதம் அதிகரிக்கிறது. இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்று குறிபிட்டுள்ளது.காற்று மாசுஅதிகரிக்கும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை... குறையுமா காற்று மாசு? ஓர் அலசல்! காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரத்தை அளவிட்டுக் கூறுகின்றனர். காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என  பல்வேறு  நோய்களால் பாதிப்பை சந்திக்கும் நாடுகளின்  பட்டியலில் இந்தியாவும் உள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் தான் அதிகளவு காற்று மாசுபாடு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இதே நிலை நீடித்தால், இங்கு வாழும் மனிதனின் ஆயுள் 5 ஆண்டுகள் குறைவதோடு பல்வேறு நோய்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது. காற்று மாசுபட பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,  மாசுபாட்டை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
http://dlvr.it/SwZ4sj

0 comments:

Post a Comment