
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவுசெய்திருக்கின்றனர். அதேசமயம், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப்புடன் அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உட்பட பலரும் களமிறங்கியிருக்கின்றனர். அவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவேக் ராமசாமி
இதற்கிடையே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருப்பவர்களுக்கு இடையிலான விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள மில்வாக்கி பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் பங்கேற்காத நிலையில், எட்டு வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பலரைக் கவர்ந்தன. முதல் விவாதத்திலேயே, சிறப்பாகப் பேசப்பட்ட வேட்பாளர்களில் ஒருவராக அவர் பிரகாசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் அவருக்கான ஆதரவு பெருகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சக போட்டியாளர்களின் கேள்விகளுக்கும் தாக்குதல்களுக்கும் சமயோசிதமாக பதிலளித்ததன் வாயிலாக, தன் திறமையை விவேக் நிரூபித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. பிரபல இணையதளப் பக்கமான கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் அவர் இருந்தார். விவாத நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் இந்திய மதிப்பில் அவருக்கு ஆதரவாக நான்கு கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவேக் ராமசாமியிடம், `ட்ரம்ப்புடன் துணை ஜனாதிபதியாக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியா?’ என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, ``இது என்னைப் பற்றியது அல்ல. இது நமது நாட்டைப் புதுப்பித்தல் பற்றியது. நமது இயக்கத்தின் தலைவராகவும், முகமாகவும் வெள்ளை மாளிகையிலிருந்து இதைச் செய்தால் மட்டுமே இந்த நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். என் வயதில் ஒருவருக்கு இது (துணை ஜனாதிபதி பதவி) ஒரு சிறந்த நிலை. நிச்சயமாக நான் அதை ஏற்பேன்” எனக் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துவரும் விவேக் ராமசாமி குறித்து சில மாதங்களுக்கு முன்பு பாராட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றிச் சொல்ல நல்ல விஷயங்களே இருக்கின்றன. சமீபத்திய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். என்னைப் பற்றியும், என் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiYஎலான் மாஸ்க்
சமீபத்தில் விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தும், குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் எலான் மஸ்க், விவேக் ராமசாமியைப் புகழ்ந்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதற்கிடையே, எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் விவேக் ராமசாமி, "ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரசு நிர்வாகத்துக்கு வழிகாட்டக் கொண்டுவர விரும்புகிறேன். சமீபகாலமாக, எலான் மஸ்க்கைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதில் மகிழ்கிறேன். ட்விட்டரிலுள்ள 75 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ட்விட்டரில் அவர் செய்த செயல், நிர்வாகரீதியாக அரசில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, முதலில் இரண்டு கட்சிகளும் அதிபர் வேட்பாளருக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தும். இதில் வெற்றிபெறும் நபர்களே அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். அந்த வகையில் இப்போது ட்ரம்ப்புக்கு நிகராக முன்னிறுத்தப்படும் விவேக் ராமசாமியின் பின்னணி என்ன?விவேக் ராமசாமியின் பெற்றோர்
அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கஞ்சேரியைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள். கேரளாவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த விவேக்கின் தந்தை வி.ஜி.ராமசாமி, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஓஹியோ (Ohio) மாகாணத்திலுள்ள General Electric Plant-ல் மின் பொறியாளராகப் பணிபுரிந்தார். அதேபோல, விவேக்கின் தாயாரான கீதாவும் அமெரிக்காவில் முதியோர் மனநல மருத்துவராகப் பணியாற்றினார். பெற்றோர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்திருந்ததால், விவேக் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்திலுள்ள சின்சினாட்டி (Cincinnati) பகுதியில்தான்.
பள்ளிப் படிப்பை சின்சினாட்டியிலுள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் 2003-ம் ஆண்டு முடித்தார். அதன் பிறகு, இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) படித்தார். தனது கல்லூரிக் காலங்களில் படிப்பில் மட்டுமல்லாமல் மியூசிக், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராக வலம் வந்தார் விவேக் ராமசாமி.
இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) சட்டப் படிப்பையும் படித்து முடித்தார். சட்டப் படிப்புக்குப் பிறகு டேவிஸ் போல்க், வார்டுவெல் என்ற சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர், 2014-ம் ஆண்டு `Roivant Sciences' என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக நிதியைத் திரட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின்கீழ் பல துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. குடும்பத்துடன் விவேக் ராமசாமி
2015-ம் ஆண்டு விவேக் ராமசாமியின் மருந்து மேம்பாட்டுப் பங்களிப்பு பற்றி புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `Chapter Medicare' என்ற இணை மருத்துவ நிறுவனத்தையும் தொடங்கினார். அமெரிக்காவின் மிகப்பெரிய பயோடெக் தொழிலதிபர் எனும் நிலைக்கு உயர்ந்தார். 2021-ம் ஆண்டுவரை Roivant Sciences நிறுவனத்தின் தலைமை நிர்வாக (CEO) அதிகாரியாகப் பணியாற்றியவர், தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது Strive Asset Management நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், நிர்வாகத் தலைவராகவும் பணியில் இருக்கிறார். அமெரிக்க மருத்துவத்துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம் வரும் விவேக் ராமசாமியின் மொத்தச் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 4,140 கோடி ரூபாய்க்கும் அதிகம். தொழிலதிபராக இருந்தபடியே Woke, Nation of victims ஆகிய இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார் விவேக் ராமசாமி.அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் மற்றொரு இந்திய வம்சாவளி... யார் இந்த விவேக் ராமசாமி?
‘பழைமைவாதி...’ என்று தன்னைத் தானே விவரிக்கும் விவேக் ராமசாமிக்கு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அரசியல் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்ற டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி, விவேக் ராமசாமிக்கு அரசியல் உத்வேகத்தை அளித்தது. மேலும், அமெரிக்க தேசியவாதத்தின் மீது தீவிர நம்பிக்கையையும் விவேக்கின் மனதில் விதைத்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராகக் களம் இறங்கும் விவேக் ராமசாமி இந்த ஆட்டத்தில் ஆடும் ஆட்டம் எப்படி அமையப்போகிறது என அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvHBZy