செயற்கை நுண்ணறிவு (AI) என்பது, தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் எனக்கூறிக் கொண்டாலும், அதன் ஆபத்து விளைவிக்கும் நாசகர செயல்கள் குறித்த அச்சம், தொழில்நுட்ப வல்லுநர்களிடம் பரவலாக இருக்கிறது. ஏஐ-ன் வளர்ச்சியில் அரசு தலையிட்டு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு குறித்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வெள்ளை மாளிகையில் பைடன் அரசு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. Google CEO Sundar Pichai
இந்த கூட்டத்திற்கு, கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, OpenAI நிறுவனத்தின் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic நிறுவனத்தின் சி.இ. ஓ டேரியோ அமோடி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பைடனின் தலைமை பணியாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை இயக்குனர் ஆரத்தி பிரபாகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நம்பகமான ஏஐ நிறுவனங்களை நிறுவ, 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அதேநேரத்தில் ஜனநாயக நிறுவனங்கள், அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதிக்கும் அபாயங்களை கருத்தில் கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Artificial Intelligenceபங்குச் சந்தையையும் விட்டுவைக்காத ஏ.ஐ... இந்தியாவில் 'ஆல்கோ' நிலை என்ன?
`ஏஐ நம் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் அது வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு, முதலில் அதன் அபாயங்களைக் குறைக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு தனியார்த்துறை நிறுவனங்களுக்கு உண்டு' என, அதிபர் பைடன் ஆலோசனை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sncc2J
Saturday, 6 May 2023
Home »
» வெள்ளை மாளிகைக்கு சென்ற சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா... AI-ன் ஆபத்துகள் குறித்து கேள்வி!







0 comments:
Post a Comment