ஃபுளோரிடாவில் இருக்கிற கருக்கலைப்புத் தடை சட்டத்தால், அம்மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தையின் மரணத்தைக் கண்ணெதிரே பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ளமா காணங்களில் ஒன்று ஃபுளோரிடா. இங்கு வசித்து வருகிறார்கள் டெபோரா டோர்பர்ட் மற்றும் லீ டோர்பர்ட் தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிருக்க, தற்போது இரண்டாவது முறையாக கருத்தரிக்கிறார் டெபோரா. சென்ற வருடம் நவம்பர் மாதம் கருவின் வளர்ச்சி நிலையைத் தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கருக்கலைப்புச் சட்டம்
இந்தக் குழந்தை பிறந்தால் அதன் சிறுநீரகங்களால் உடலில் உருவாகிற கழிவுகளை வெளியேற்ற முடியாது; கூடிய விரைவில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் என்பதுதான் நிலைமை. தவிர, கர்ப்பப்பைக்குள் நீரின் அளவு குறைவாக இருப்பதால், குழந்தையால் மூச்சு விடவும் முடியாத நிலைமை. இதை பாட்டர் சிண்ட்ரோம் (Potter syndrome) என்பார்கள். இந்தப் பிரச்னை இருக்கிற சிசுக்கள் பெரும்பாலும் தாயின் வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடலாம் அல்லது பிறந்த சில நிமிடங்களில் அல்லது சிலமணி நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடையலாம்.
கருவிலிருக்கிற சிசுவின் நிலையை அறிந்துகொண்ட பெற்றோர், உடனடியாக கருவைக் கலைப்பது என முடிவு செய்தனர். மருத்துவரும், 'கருக்கலைப்பு செய்யலாம். ஆனால் 28-வது வாரத்திலிருந்து 32-வது வாரம் வரைக்கும் கருவைக் கலைக்க முடியாது' என அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாடு தழுவிய கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்ததை அடுத்து, ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர, கரு உருவான 15 வாரங்களுக்குப் பிறகு அதைக் கலைக்க முடியாது. முக்கியமாக கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் கலைப்பதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, டெபோராவை 37-வது வாரம் வரைக்கும் காத்திருக்குமாறு பணித்திருக்கிறார்கள்.கருக்கலைப்புச் சட்டம்அமெரிக்கா: கருக்கலைப்பு தீர்ப்பு; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமி சந்தித்த சிக்கல்!
இந்தச் சட்டத்தை மீறும் மருத்துவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்; அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்பதால் டெபோராவுக்கு எந்த மருத்துவரும் உதவி செய்ய முடியாத நிலைமை. பொருளாதார சூழ்நிலை காரணமாக, வேறொரு மாகாணத்திற்குச் சென்றும் டெபோரா தம்பதியரால், கருக்கலைப்பு செய்துகொள்ள முடியவில்லை.
'என்னுடைய ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் எது சிறந்தது என மருத்துவர்கள் முடிவெடுப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது' என்கிறார் டெபோரா டோர்பர்ட். அவருடைய கணவரோ, 'எங்களுடைய பிரச்னை விதிவிலக்கானது. இதையும் நீங்கள் யோசிக்க வேண்டும்' என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
http://dlvr.it/Sjl50p
Tuesday, 21 February 2023
Home »
» கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு... குழந்தையின் மரணத்தைப் பார்க்க வேண்டிய அவலத்தில் பெற்றோர்!







0 comments:
Post a Comment