அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றின் ICU பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாகப் பேசிய காவல்துரை தரப்பு, ``ரோனி விக்ஸ் என்பவர் அவரின் மனைவியை டயாலிஸிஸ் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அவருக்கு ICU பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.ICU
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில், சிகிச்சையிலிருந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனை செவிலியர்கள் உடனடியாக சிகிச்சையளித்தனர். இதற்கிடையில், ரோனி விக்ஸ் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகச் செவிலியர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இந்த செய்தியை மருத்துவமனை நிர்வாகம் எங்களுக்கு தெரிவித்தது. அதே நேரம் சிகிச்சையிலிருந்த ரோனி விக்ஸ்-ன் மனைவி இறந்துவிட்டார். எனவே, ரோனி விக்ஸ் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடம் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டதில், மருத்துவச் செலவுக்குப் பொருளாதார வசதி இல்லை என்றும், அதனால் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவேதான் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பும் இரண்டு முறை அவரைக் கொல்ல முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார். மேலதிக விசாரணை நடந்து வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.சென்னை: கடும் வாக்குவாதம்... ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர்!
http://dlvr.it/T6Xvhs
Tuesday, 7 May 2024
Home »
» ICU-வில் சிகிச்சையிலிருந்த மனைவி; கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவமும் பின்னணியும்!







0 comments:
Post a Comment