சில விமான விபத்துகளும் அதற்கான காரணமும் மர்மமாகவே இருக்கும். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த மலேசியா விமான விபத்தைக் கூறலாம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விமானத்தின் சில பகுதிகள் கடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதே போன்ற ஒரு விமான விபத்துக்கான அதிர்ச்சிக் காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. 1994-ம் ஆண்டு மார்ச் 23 அன்று, ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, சீனாவின் ஹாங்காங்கிற்குச் சென்ற ஏரோஃப்ளோட் 593 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 75 பேரும் உயிரிழந்தனர். விமான விபத்து
இந்த விபத்துக்கான காரணம் கடந்த 30 ஆண்டுகளாக வெளிப்படுத்தபடாமலே இருந்தது. இந்த நிலையில், Simple Flying செய்தி நிறுவனம் அந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டிருக்கிறது. ஏரோஃப்ளோட் 593 விமானத்தில், 12 விமான ஊழியர்கள், 63 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தை விமானி யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கி, கேப்டன் ஆண்ட்ரே டானிலோவ் ஆகியோர் இயக்கினர். இதில் விமானி யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கி அவருடைய 15 மகனையும், 12 வயது மகளையும் அழைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானி ஆண்ட்ரே டானிலோவ் ஓய்வெடுப்பதற்காக ஆட்டோ பைலட் மோடில் செலுத்திவிட்டு, யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது விமானி அறைக்கு வந்த யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கியின் குழந்தைகள், விமானியின் இருக்கையில் அமரவும், அதை இயக்கவும் கேட்டிருக்கிறார்கள்.விமான விபத்து
அப்போது யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கி இருவருக்கும் விளையாட்டாக விமானத்தை இயக்குவதுபோல செய்திருக்கிறார். அப்போதுதான் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, தெற்கு ரஷ்யாவின் குஸ்னெட்ஸ்க் அலடாவ் மலைத்தொடரில் சுமார் 160 மைல் வேகத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருந்தவை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.காரியாபட்டி: கல்குவாரி வெடி விபத்து; தொழிலாளர்கள் 4 பேர் உடல் சிதறி பலி - பொதுமக்கள் சாலைமறியல்!
http://dlvr.it/T6Gb5T
Wednesday, 1 May 2024
Home »
» 1994-ல் 75 பேரை பலிகொண்ட விமான விபத்து; 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அதிர்ச்சித் தகவல்!







0 comments:
Post a Comment