Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 8 May 2024

அமெரிக்கா: `பைடனின் வளர்ப்பு நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும்!' - ஆளுநர் பேச்சும் கிளம்பிய எதிர்ப்பும்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் வளர்ந்துவரும், இரண்டு வயதான ஜெர்மன் ஷெப்பர்டு நாய், இதுவரை வளர்ப்பு நாய் கமேண்டர், பைடனின் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும், பலரும் அந்த நாய் மீதான அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியதையடுத்து, கடந்தாண்டு அக்டோபரில் வெள்ளை மாளிகை மைதானத்திலிருந்து அந்த நாய் இடமாற்றப்பட்டதாக உயரதிகாரிகளிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் வெற்றி பெற்றால், துணை அதிபராக்கப்படுவார் எனப் பேசப்படும் தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம், வெளியிட்ட இத்தகைய அறிவிப்பிற்கு வெள்ளை மாளிகையிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.  கிறிஸ்டி நோம், "என்னுடைய ஒரு வயதுடைய வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்ததால், அதைச் சுட்டுக் கொன்றுவிட்டேன்" எனப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.நாய்

அதை பலரும் விமர்சித்த நிலையில், ``ஜோ பைடனின் நாய் இதுவரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளது, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பியதோடு, இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய நாய் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் கிறிஸ்டி நோம் தனது `நோ கோயிங் பேக்' என்கிற புத்தகத்தில், ``2025-ல் நான் துணை ஜனாதிபதியாகப் பெறுப்பேற்ற முதல் நாளில் என்னென்ன செய்வேன் என்கிற பட்டியல் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் நான் செய்யும் முதல் காரியம் ஜோ பைடனின் நாய் வெள்ளை மாளிகை மைதானத்தில் எங்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அதனை முதலில் சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து நம்மிடையே நிலவிவருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் அனைவரிடத்திலும் எளிதில் பழகவும், விரைவில் பக்குவப்படும் தன்மை கொண்டவை. மனிதர்களின் மனோநிலையை அறிந்து, அவர்களின் குறிப்பறிந்து செயல்படுவதில் செல்லப்பிராணிகளுக்குத் தனித்த இடமுண்டு. அதே செல்லப்பிராணிகள் நம்மைத் தாக்கும் போதுதான் சிக்கல் எழுகிறது. கிறிஸ்டி நோம்

மேலும் விலங்குகளின் மனநிலைகள் மாறுகின்ற போது அவை இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. அந்த சமயத்தில் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருந்தால் அவர்களின் நிலை இன்னும் மோசமாகக்கூடும். செல்லப்பிராணிகள் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறபோது அவற்றால், மனிதர்களாகிய நாம் பாதிப்பிற்குள்ளாகும்போது அவற்றைக் கொல்வதில் எந்த தவறும் இல்லை. நான்கூட இதுபோல் நடந்துகொண்ட என்னுடைய நாயைச் சுட்டுக் கொன்றுவிட்டேன். எனவே, அதிகாரி`அதிபர் ஜோ பைடனின் நாயையும் சுட்டுக் கொன்று அதற்குச் சரியான தண்டனை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கிறிஸ்டி நோம்ஆளுநர் கிறிஸ்டி நோமின் இத்தகைய பேச்சுக்கு, வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைமுடியைப் பொசுக்கி, அடித்துச் சித்ரவதை - ஜூனியர் மாணவருக்கு, சீனியர்களால் நேர்ந்த கொடுமை!


http://dlvr.it/T6ZjcJ

0 comments:

Post a Comment