மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் (Genetically Modified crops) பயன்பாட்டிற்கு இந்திய விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள் மரபணு மாற்று தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சில விதைகளைப் பயன்படுத்தி வருகிறது. maize field (Representational Image)மரபணு மாற்றப்பட்ட கடுகு... ஆதரவும் எதிர்ப்பும் - ஆர்வலர்கள் சொல்வதென்ன?
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியாவோடு சேர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த சீனா, தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளோடு கைகோர்த்துள்ள சீனா, 2023 அக்டோபர் முதல் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் ஆகியவற்றின் பல மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அங்கீகரித்துள்ளது.
அக்டோபர் முதல், சீனா 64 வகையான மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்திற்கும், 17 வகையான மரபணு மாற்றப்பட்ட சோயாபீனுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
அக்டோபர் 2023-ல் சீன அரசு, 37 மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள வகைகள் மற்றும் 14 மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. 2024 மார்ச் மாதத்தில் கூடுதலாக மரபணு மாற்றப்பட்ட 27 மக்காச்சோளம் மற்றும் 3 சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.விதைகள்எத்தனால் பயன்பாடு...அடிக்குது ஜாக்பாட்... கரும்புக்கு மாற்றாக மக்காச்சோளம்!
மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் விளைச்சலை அதிகரிக்க இதுவரை 81 மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சீனா அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் பி.டி கத்தரி (India’s Bt brinjal) மற்றும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரலாலும், இதுசம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகளாலும் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அண்டை நாடான சீனா மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி அளித்திருப்பது சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/T5Dmll
Monday, 8 April 2024
Home »
» GM Crops: மக்காச்சோளம், சோயாபீன்.. 81 மரபணு மாற்று விதைகளுக்கு சீனா அனுமதி! சூழலியலாளர்கள் அதிர்ச்சி







0 comments:
Post a Comment