America-வில் பெற்றோர் தற்கொலை:
தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இருவரும் திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இருவரும் அமெரிக்காவில் மிஸிசிப்பி மாகாணத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு அமெரிக்காவிலேயே ஆண் குழந்தை பிறந்தது. Boy child
விஸ்ருத் என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது அமெரிக்காவில் (America) பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர். பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை, அவர்களுக்கு அருகில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த தம்பதியர் தத்தெடுத்துக்கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வசித்து வரும் குழந்தையின் பாட்டி மற்றும் சித்தி குழந்தையைத் தாங்கள் வளர்க்க விருப்பம் தெரிவித்தனர்.
குழந்தையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் முறையிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதியை உடனடியாக அமெரிக்கா சென்று இப்பிரச்னைக்குத் தீர்வு காண உத்தரவிட்டார். சென்னை விமான நிலையத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் கார்த்திகேய சிவசேனாபதிபெண் கல்வி அதிகம் உள்ள மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் மிகவும் குறைவு... | Child Marriage
அயலக தமிழர் நல வாரியம்:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா சென்ற கார்த்திகேய சிவசேனாபதி மிஸிசிப்பி மாகாணத்தின் இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மிஸிசிப்பி மாநில ஆளுநர் டேட் ரிவிஸுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மிஸிசிப்பி நகர தமிழ் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவுக்கான அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளுக்குப் பங்களித்தது.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள டென்னசி மாகாணத்தில் குழந்தையை மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்க உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, அட்லாண்டா இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மிட் சௌத் தமிழ்சங்க உறுப்பினர்கள், அயலகத் தமிழர்களுக்காகச் செயல்பட்டு வரும் REACTION அமைப்பின் பிரதிநிதிகள், குழந்தையின் சித்தி, அபிநயா ஆகியோர் கலந்துகொண்டனர். அமெரிக்கா I AmericaFord: அமெரிக்கா என்னும் போக்குவரத்துப் பொன்னாடு! - ஒரு கவிஞரின் வெளிநாட்டுப் பயணம்!
இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த சட்ட போராட்டங்களைக் கடந்து நேற்று (ஏப்ரல் 1), நான்கு வயதாகும் குழந்தை விஸ்ருத் தன் சித்தி மற்றும் பாட்டியுடன் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அபிநயா, "என் அக்காவும் மாமாவும் இறந்த செய்தி எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்களுடைய 17 மாத குழந்தையை வேறொருத்தர் தத்தெடுத்துக்கிட்டாருன்னு கேள்விப்பட்டதும் எங்களால தாங்கவே முடியல.
அயலக தமிழர் நல வாரியம் மூலமா தமிழக அரசு எங்களுக்கு இவ்ளோ பெரிய உதவி செய்ததுக்கு மனமார்ந்த நன்றி. அமெரிக்காவுல சட்ட ரீதியான அனைத்து பிரச்னைகளும் தீர்வு காண கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட குழு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தாங்க. இவங்க உதவி இல்லைன்னா குழந்தை எங்ககிட்ட வந்து சேர்ந்திருக்காது. சித்தி அபிநயா மற்றும் உறவினர்களுடன் குழந்தைகொடை தந்த வடக வியாபாரி, கண்களைக் குளமாக்கிய வாச்சாத்தி- வாசகரைக் கவர்ந்த விகடன் நம்பிக்கை விருதுகள்!
ஊர்ல எங்க சொந்த வீட்டை வித்துதான் அமெரிக்காவுக்குப் போனோம். அமெரிக்காவில ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கியிருந்தோம். அதுக்கான உதவிகளை அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள்தான் செய்துகொடுத்தாங்க. அக்கா, மாமா இல்லாத குறை தெரியாம குழந்தையை வளர்க்கணும்ன்றது மட்டும்தான் எங்க ஆசை" என்றார்.
அமெரிக்க சட்டம் சொல்வதென்ன..?
இதற்கான முயற்சிகளை எடுத்த கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், "அமெரிக்காவில் ஓராண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே தங்க முடியும். ஆனாலும், இந்தப் பிரச்னைக்காக இவர்கள் தங்குவதற்கு அந்நாட்டில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. குழந்தை தற்போது அவரின் சித்தியின் பராமரிப்பில் வளர வேண்டும். இந்தக் குழந்தை அமெரிக்காவில் பிறந்ததால் அவர் அமெரிக்க குடிமகன். சட்டம்மும்பை டு அமெரிக்கா... புல்லாங்குழல் வகுப்புகளில் கலக்கும் கல்லிடைக்குறிச்சி ஹேமா
எனவே, ஒவ்வோர்ஆண்டும் குழந்தையின் நிலை குறித்து அமெரிக்க அரசாங்கத்துக்கு அபிநயா தகவல் அளிக்க வேண்டும். குழந்தை மேஜர் ஆன பிறகு எந்த நாட்டின் குடிமகனாக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். அதுவரை அமெரிக்க அரசாங்கத்துக்கு குழந்தையின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்வது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஆலோசிக்கப்படும்" என்றார்.
http://dlvr.it/T4xrCr
Tuesday, 2 April 2024
Home »
» America: பெற்றோர் தற்கொலை... 2 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் வந்த 4 வயது குழந்தை!







0 comments:
Post a Comment