நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடந்த 11-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, ``10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளிலேயே (சொந்த நாட்டிலேயே) கொல்லப்படுகின்றனர். பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது என்.டி.ஏ ஆட்சியில்தான். இன்று, நாட்டில் வலுவான அரசு இருக்கிறது.மோடி
இந்த நாட்டின் இந்திய மூவர்ணக் கொடி, போர் மண்டலத்திலும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக மாறியுள்ளது. முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற திட்டங்களை எங்கள் அரசுதான் கொண்டுவந்தது. அண்டை நாடுகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த பயங்கரவாதத்தை ஒதுக்கி வைக்க முடியாது.
பயங்கரவாதம், வன்முறை இல்லாத ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது" எனக் கூறினார். இதற்கிடையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்றால், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
அதை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் நினைத்தால், அவர்கள் இந்தியாவின் உதவியைப் பெற விரும்பினால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கும். இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம், அதைத் தடுக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். எல்லை தாண்டி இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால்... எடுப்போம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே கொல்ல இந்தியா தயங்காது எனப் பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பேச்சு என் கவனத்துக்கு வந்தது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், அமெரிக்கா இந்த விவகாரத்தின் உள்ளே நுழையப் போவதில்லை.மேத்யூ மில்லர்
ஆனால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்த சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா ஏன் எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். இதுகுறித்து நாங்கள் இதுவரை வெளிப்படையாக விவாதிக்கவில்லை. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்காது." எனத் தெரிவித்திருக்கிறார்.தேர்தல் 2024: `தமிழ்நாடு டு இந்தியா... களம் யாருக்குச் சாதகம்?' - விவரிக்கும் ரவீந்திரன் துரைசாமி
http://dlvr.it/T5cfL3
Wednesday, 17 April 2024
Home »
» `பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது'- பிரதமர் பேச்சும் அமெரிக்கா பதிலும்







0 comments:
Post a Comment