ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போரில் இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர். இதனால் கடும் கோபமடைந்த இரான், கடந்த 13-ம் தேதி இஸ்ரேல்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - நெதன்யாகு
மேலும், ஐ.நா-வில், ``இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம்" என இரான் தெரிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்தால், இரானுக்கு எதிரான எதிர் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது" என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.ஜோ பைடன்
இதற்கு முன்னர் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,``இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும், ஆனால் போரை விரும்பவில்லை" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்!
http://dlvr.it/T5WM2Y
Monday, 15 April 2024
Home »
» ``இரான் மீதான இஸ்ரேலின் எதிர் தாக்குதலில், அமெரிக்கா பங்கேற்காது" - ஜோ பைடன்!







0 comments:
Post a Comment