அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் கவுண்டியில் உள்ள ஃபெர்குசன் பகுதியில், நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த ஆசிரியையின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, ஐவர் உயிரிழந்த சம்பவத்தில், திருப்புமுனையாக, அது விபத்து அல்ல `கொலை - தற்கொலை' என போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில், `2013-ல் Missouri Teacher of the Year' எனும் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர் (Bernadine Birdie Pruessner) என்பவரின் வீட்டில் திங்களன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், பேர்டி ப்ரூஸ்னர் உட்பட அவரின் குழந்தைகளான 9 வயது இரட்டையர்கள் எல்லி ப்ரூஸ்னர் (Ellie Pruessner), ஐவி ப்ரூஸ்னர் (Ivy Pruessner), 5 வயது ஜாக்சன் ஸ்பேடர் (Jackson Spader), 2 வயது மிலி ஸ்பேடர் (MIllie Spader) ஆகியோர் உயிரிழந்தனர்.குழந்தைகளுடன் பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர்
முதலில் இது விபத்து என்றே நம்பப்பட்டது. இருப்பினும், இதில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட செயின்ட் லூயிஸ் கவுண்டி போலீஸ், இந்த சம்பவத்தைக் கொலை - தற்கொலை என்று கூறியிருக்கிறது. இது குறித்து புதனன்று கவுண்டி போலீஸ் அலுவலகம் ஓர் அறிக்கையில், ``பேர்டி ப்ரூஸ்னர் வேண்டுமென்றே படுக்கைக்குத் தீ வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனெனில், விசாரணையில் தீ படுக்கையிலிருந்துதான் பரவியிருக்கிறது. மேலும், பேர்டி ப்ரூஸ்னர் தனது உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் குறித்தும், ஒரு குறிப்பு வெளியிட்டிருக்கிறார்" என அதன் உள்ளடக்கங்கள் எதுவும் வெளியிடாமல் தெரிவித்திருக்கிறது. போலீஸாரின் இத்தகைய கூற்றுக்கு ஏற்றவாறே, பேர்டி ப்ரூஸ்னர் தனது மூகநூலில் இறுதியாகப் பதிவிட்ட மூன்று பதிவுகள் கவனிக்க வைத்திருக்கிறது.
அதில், ஞாயிறு அன்று ``எல்லா நாளும், கடைசி நாள் என்று வாழக்கூடியவர்களில் ஒருவராக இன்றைய நாளை உருவாக்குங்கள். ஹாப்பி சண்டே" என்று பதிவிட்டிருந்தார். திங்களன்று தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``இவர்களின் அம்மாவாக இருப்பதில் நான் மிகவும் பாக்யசாலி. இவர்கள் தங்களின் சிறிய வாழ்க்கையில், தாங்கள் எதிர்கொள்ள வேண்டியதைவிட பலவற்றைக் கடந்துவிட்டார்கள்" என்றும், ``என் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக என் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். அவர்கள் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்காக நான் எதையும் செய்வேன்" என்றும் பதிவிட்டிருந்தார்.குழந்தைகளுடன் பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர்
இன்னொருபக்கம், பேர்டி ப்ரூஸ்னரிடமிருந்து 2017-ல் பிரிந்த முன்னாள் கணவரும், இரட்டை குழந்தை எல்லி, ஐவி-யின் தந்தையுமான டேவிட் ப்ரூஸ்னரும் (David Pruessner), ஜாக்சன் மற்றும் மிலி-யின் தந்தையும், பேர்டி ப்ரூஸ்னரின் முன்னாள் காதலனுமான ஜாரெட் ஸ்பேடரும் (Jared Spader), குழந்தைகளைப் பராமரிக்க முடியாது என விட்டுச் சென்றதையடுத்து, அதற்கெதிராக நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்து போராடிவந்தார். இத்தகைய சூழலில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.யூடியூபில் Parental Care... வீட்டில் Child Abuse - அமெரிக்க பெண் யூடியூபருக்கு 60 ஆண்டுகள் சிறை!
http://dlvr.it/T38VdX
Friday, 23 February 2024
Home »
» பற்றியெரிந்த வீடு; 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்? - அதிர்ச்சி சம்பவம்!







0 comments:
Post a Comment