2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியைக் காண ஏராளமானோர் காத்திருப்பதால் டிக்கெட்டின் தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி கூறியிருக்கிறார்.IND vs PAK
இதுதொடர்பாக பேசிய அவர், “ஒவ்வொரு டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு போட்டி. இதற்கான டிக்கெட் தேவை என்பது அதிக அளவில் இருக்கிறது. 34,000 பேர் அமரக்கூடிய மைதானத்தை கட்டி வருகிறோம். டிக்கெட் இருப்பை விட 200 மடங்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வருகைப் புரிவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் நாட்டில் விளையாட்டுகளின் மீது தீவிர ஆர்வம் கொண்ட ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்டும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்பதை இந்தத் தொடர் மூலம் காட்டவுள்ளோம். 2028 மற்றும் 2032 ஒலிம்பிக்ஸ் சார்ந்தும் இது எங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். IND vs PAK
நாங்கள் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மக்கள் மத்தியில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். உலக நாடுகளுக்கு நாங்களும் கிரிக்கெட்டைக் கொண்டாடும் நாடு என்பதை காட்ட விரும்புகிறோம். வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கவும் விரும்புகிறோம்" என்றார்.
http://dlvr.it/T3BNdy
Saturday, 24 February 2024
Home »
» 200 மடங்கு அதிக டிமாண்ட்; இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு!







0 comments:
Post a Comment