Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 13 December 2023

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்... இல்லாவிட்டாலும் காஸா போர் தொடரும்" - இஸ்ரேல் திட்டவட்டம்

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல் குடிமக்கள் 1200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,500-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஜோ பைடன் - காஸா

ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதற்கிடையில், 4 நாள் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில், ஹமாஸ் குழு கைது செய்து வைத்திருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளையும், இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளையும் பரஸ்பரமாக விடுவித்தனர். ஆனால், இன்றளவும் தாக்குதல்கள் தொடர்ந்துவருகிறது.

இந்தப் போரின் ஆரம்பத்தில் 'இஸ்ரேலை உலகின் பெரும்பகுதி ஆதரித்துவருகிறது" எனப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒருகட்டத்தில், "இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால், தாக்குதலால் உலகின் ஆதரவை இழக்கத் தொடங்குகிறது" எனக் கண்டனம் தெரிவித்தார். போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டறிக்கையிலும், "காஸாவில் குடிமக்களுக்கான பாதுகாப்பான இடம் குறைந்து வருவதைக் கண்டு பீதியடைந்துள்ளோம்" என எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.காஸா

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஐ.நா-வின் தகவலின்படி, பாலஸ்தீனத்தின் 2.4 மில்லியன் மக்களில் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்துத் தங்கிவருகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 100 உதவி வாகனங்களிலிருந்து மட்டுமே அவர்களுக்கான அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களைப் பெறுகிறார்கள்.

காஸாவில் 60 சதவிகித தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இணையில்லாத சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய காஸாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் குளிரிலும், மழையிலும், குழந்தைகளுடனும், போரால் ஏற்பட்ட காயங்களுடனும், போதிய மருத்துவச் சிகிச்சையோ, மருந்தோ, உணவோ, தண்ணீரோ இல்லாமல் தவித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் தீர்ந்துவிட்டதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.வடக்கிலிருந்து தெற்கு காஸா நோக்கிப் பயணப்படும் பாலஸ்தீனர்கள்

தொடர்ந்து ஒலிக்கும் சைரன் சப்தத்தால் பதற்றத்துடன் நாட்களை நகர்த்துகிறார்கள். இதைத் தொடர்ந்து, உலக வங்கி நடத்திய ஆய்வில், "காஸாவில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையின் வேகமும், சேதங்களின் அளவும் தொடர்ந்து இணையற்ற அளவில் அதிகரித்து வருகிறது" என எச்சரித்திருக்கிறது.

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,'காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது' எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் (Eli Cohen)," எங்களின் முக்கியக் கூட்டாளிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், சர்வதேச ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும். தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் என்பது பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஒரு பரிசாகும். அதனால், அது திரும்பவும் இஸ்ரேலில் வசிப்பவர்களை அச்சுறுத்த வாய்ப்பிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர்; WHO இரங்கல்!


http://dlvr.it/T06p7c

0 comments:

Post a Comment