அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இந்தாண்டு இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான ட்ரம்ப், அதிர்ஷ்டவசமாக வேறுபக்கமாக தலையைத் திருப்ப தோட்டா காதில் உரசிச் சென்றதையடுத்து உயிர் தப்பினார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாகத் தனது கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ட்ரம்ப், கடவுள் தன் பக்கம் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.Trump: `இவான்கா, ட்ரம்ப் முதல் ஹல்க் ஹோகன் வரை..! - குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு க்ளிக்ஸ்
மில்வாக்கியில் நேற்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் (RNC) நான்காம் நாள் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ``அமெரிக்க அதிபர் பதவிக்கான உங்கள் தேர்வை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு மதம், இனம் சார்ந்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்கான புதிய சகாப்தத்தை நாம் ஒன்றாகத் தொடங்குவோம். நம் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் பிரிவினைவாதம் களைய வேண்டும்" என்றார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)
அதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய ட்ரம்ப், ``அந்த சமயத்தில் கடவுள் என் பக்கம் இருந்தார். அன்று அந்த நொடியில் தலையை நான் திருப்பாமல் இருந்திருந்தால், இப்போது உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். மேலும், அப்போது எனக்கு எதுவும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவே என் வலதுகையை உயர்த்திக் காட்டினேன். நீங்கள் காட்டிய அன்புக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த சம்பவம் பற்றி பலரும் என்ன நடந்தது... என்ன நடந்தது.... தயவுசெய்து சொல்லுங்கள் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். இனி இரண்டாவது முறையாக நீங்கள் அதை என்னிடம் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் இது உண்மையில் சொல்வது மிகவும் வேதனையானது" என்றார் கூறினார்.அமெரிக்க அதிபராகப் போகிறாரா ட்ரம்ப்? - உளறிக்கொட்டும் பைடன்!
http://dlvr.it/T9p7nH
Friday, 19 July 2024
Home »
» Donald Trump: காதில் பேண்டேஜ்... துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய ட்ரம்ப்!







0 comments:
Post a Comment