Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 2 March 2024

கலாஷேத்ரா முன்னாள் மாணவர், அமெரிக்காவில் கொடூரமாகச் சுட்டுக் கொலை! - அரசிடம் உதவி கோரும் தோழி

அமெரிக்காவில் இந்தியர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கொல்லப்படும் சம்பவங்கள், தொடர்கதையாகயிருக்கின்றன. பெரும்பாலும், கல்லூரியில் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படித்துக் கொண்டிருந்தவர் அமர்நாத் கோஷ். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆகிய நடனக் கலைகளில் தேர்ந்தவர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர். மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். அமர்நாத் கோஷ்

இந்த நிலையில், இவர் அமெரிக்காவின் மிசோரியில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரால் பல முறை சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்த, அமர்நாத் கோஷின் தோழியும், தொலைக்காட்சி நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, ``என் நண்பர் அமர்நாத் கோஷ் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெற்றோருக்கு இவர் ஒரே மகன்.

சிறுவயதில் தந்தையை இழந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அம்மாவும் இறந்துவிட்டார். யார் கொலைசெய்தது என்பது குறித்த எந்த விவரங்களும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள், அமர்நாத் கோஷின் உடலை மீட்க முயற்சி செய்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் முடிந்தால், எங்கள் நண்பர்களுக்கு உதவுங்கள். குறைந்தபட்சம் அவரது கொலைக்கான காரணத்தையாவது நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.காவல்துறை

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``மிசோரியில் இறந்த அமர்நாத் கோஷின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். நாங்கள் தடயவியல், காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விசாரணைக்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இறந்த அமர்நாத் கோஷின் உறவினர்களுக்குத் துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. துப்பாக்கித் தாக்குதல் தொடர்பான விசாரணையை காவல்துறை கடுமையாக முன்னெடுக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களின் நிலை என்ன? - சாந்தன் இறப்பும்... முகாம் சர்ச்சையும்!


http://dlvr.it/T3W94d

0 comments:

Post a Comment