`மங்கியில இருந்து ஒரு மனுஷ பய வந்தாலும் இன்னும் போகலயே வாலு’ என்ற பாடல் வரிகளைக் கேட்டு இருப்போம். பொதுவாகவே மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள் என்றும், பரிணாம வளர்ச்சியின் காரணமாக வால் மறைந்து போனது என்றும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் பிறந்த குழந்தை ஒன்று நான்கு இன்ச் (10 செ.மீ) வாலோடு பிறந்து மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.New born
ஹாங்சோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை துணைத் தலைமை மருத்துவர் டாக்டர் லி வாலோடு பிறந்துள்ள குழந்தையின் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
`Tethered Spinal Cord’ எனச் சொல்லப்படக்கூடிய நிலையே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதுகுத்தண்டு வழக்கத்திற்கு மாறாகச் சுற்றியுள்ள திசுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இந்த நிலை உண்டாகிறது. இதில் எவ்வித அசைவும் இருக்காது. doctor``குழந்தை பெற்றால் 62 லட்சம் பரிசு" மக்கள் தொகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை... எங்கு தெரியுமா?
தன் குழந்தையின் வாலை அகற்றும்படி மருத்துவர்களிடம் பெற்றோர்கள் கூறியபோது, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்த வால் குழந்தையின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அதை அகற்றுவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.
ஏற்கெனவே தென் அமெரிக்கா கயானாவில் கடந்த ஜூன் மாதம் வாலோடு பிறந்த 10 நாள்களேயான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வாலை அகற்றி இருந்தனர். அதேபோல தற்போது இக்குழந்தை வாலோடு பிறந்துள்ளது.
http://dlvr.it/T4Dyg7
Monday, 18 March 2024
Home »
» 10 செ.மீ வாலோடு பிறந்த குழந்தை... வாலை அகற்றமுடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்: ஏன் தெரியுமா?!







0 comments:
Post a Comment