சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று அவரின் மூக்கில் ஊர்ந்து செல்வதை உணர்ந்திருக்கிறார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தூங்கத் தொடங்கியபோது அசௌகரியமாக உணர்ந்து திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். அப்போது, அவரின் தொண்டையின் உள்பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றிருக்கிறது. ஆனால், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவம் நடந்த இரண்டாவது நாள், அவருக்கு மஞ்சள் நிறத்தில் சளி வந்திருக்கிறது.முதியவர்
மருத்துவ பரிசோதனை
மேலும், சுவாசிக்கச் சிரமப்பட்டிருக்கிறார். உடனே அவர், மருத்துவ நிபுணரைச் சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார். மருத்துவரும், தொண்டை, மூக்கு போன்ற பகுதிகளைச் சோதனை செய்துவிட்டு, "எதுவும் இல்லை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், "எதோ ஒன்று இருக்கிறது...'' என உணர்ந்த அந்த முதியவர், சுவாசக் கோளாறு தொடர்பான தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அந்த மருத்துவர், முதியவரை சி.டி. ஸ்கேன் செய்து சோதித்திருக்கிறார். அப்போதுதான், வலது மார்பு கூட்டின் உள்பகுதியில், நுரையீரல் அருகில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை
இது தொடர்பாக அந்த முதியவருக்குத் தெரிவித்து, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒரு கரப்பான் பூச்சி, சளியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் உடனே கரப்பான் பூச்சி இருந்த உள்பகுதியைச் சுத்தம் செய்து, சிகிச்சையளித்தனர். தற்போது அந்த முதியவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி மூக்கில் நுழைந்து உடலின் உள்பகுதிக்குச் செல்வதைக் கூட அறியாமல் தூங்கிய அந்த முதியவரின் செய்தி அந்தப் பகுதியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
http://dlvr.it/TD14JB
Monday, 9 September 2024
Home »
» China: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்!







0 comments:
Post a Comment